உங்கள் குழந்தைக்கு கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டியவை

உங்கள் குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்க

கண் திருஷ்டி நீங்க
பொதுவாக குழந்தைகளுக்கு திருஷ்டி சுற்றி போட… கீழ்கண்ட முறைகளை பெரியோர்கள் தொன்று தொட்டு கடைபிடித்து வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு…

1. ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக்கொண்டு தாய் மடியில் விழித்திருக்கும் குழந்தையை அமர வைத்து இடமிருந்து வலமாக மூன்று தடவையும் வலமிருந்து இடமாக மூன்று தடவையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணீரில் போட வேண்டும். தண்ணீரில் உப்புக் கரைய  கரைய திருஷ்டியும் கரைந்து காணாமல் போய்விடும்.

2. குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும், அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம்.

3. திருஷ்டியின் தாக்கத்தால் குழந்தை கீழே விழுந்து அடிபட்டு விட்டால் உடனே கீழே கிடக்கும் செங்களல் துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி தூக்கிப் போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம். இது கூட திருஷ்டி கழிக்கும் முறை தான்.

4. கொஞ்சம் பெரிதான குழந்தைக்கு, சோறு ஊட்டிய பின்னர் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கைகழுவ வைத்து அதை சுற்றிப் போடலாம். சாப்பிடப் போகும் முன் ஒரு உருண்டை சாதத்தை தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட செய்யுங்கள். இதுவும் ஒரு பரிகாரமே. இது நல்ல விளைவுகளைத் தரும்.

5. இன்னும் சில வீடுகளில் கடுகு, மிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்கார வைத்து,” ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்தக் கண்ணு, இந்தக் கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும்!” என்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள். இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரம் தான்.

கண் திருஷ்டி பரிகாரம்இப்படியாகக் குழந்தைகளுக்குப் பல வகையில் திருஷ்டி சுற்றிப் போடலாம்.

எனினும், சாஸ்திரங்களின் அடிப்படையில் தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி கழிப்பது என்பது மகா பாவம். அதை மட்டும் செய்யாதீர்கள். அப்படியாகச் செய்யும் பட்சத்தில், அது எதிர்மறை விளைவுகளைக் கூடத் தந்து விடலாம். தூங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றினால் ஆயுள் குறையும் என்று கூட சொல்லப்படுகிறது. அதாவது அது திருஷ்டி சுற்றும் நோக்கத்தையே பாதிப்படையச் செய்யும். அத்துடன் எதிர்மறை விளைவுகளையும் தர வல்லது. திருஷ்டி சுற்றுவது மட்டும் அல்ல, குளிக்க ஊற்றுவது, அலங்காரம் செய்து அழகு பார்ப்பது என எல்லாமே குழந்தை விழித்திருக்கும் நிலையில் தான் செய்தல் வேண்டும்.

குழந்தைக்கு கருப்பு திருஷ்டிப் பொட்டு வைக்கலாம். இது எல்லோராலும் செய்யக் கூடியதே.  அது அனுபவத்தில் அதிக அளவில் பயன் தரும் விஷயமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப் பொட்டு குழந்தையின் திருஷ்டியைப் போக்க வல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

சில்லி சிக்கன் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி

சில்லி சிக்கன் அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை வித விதமாக சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போதைய நவீன உலகில் வித விதமான சிக்கன்...
பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை...
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...
மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள்....
மொட்டை போடுவது ஏன்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.