முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்துக் கொள்ளவும். சிக்க்கனில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து தனியா, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து சுமார் 2 நிமிடத்திற்கு நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
½ கப் தேங்காய் துருவலை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் கசகசாவையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பின் இத்துடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
சிக்கன் ஓரளவிற்கு வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும், இத்துடன் சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
தேங்காய் விழுது சேர்த்து அதிக நேரம் கொதிக்காமல் சிறிது நேரம் கொதித்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.
முதலில் சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சிக்கன் கிரேவி செய்ய ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். அதற்க்கு ஒரு மிக்ஸி ஜாரில் ½ கப் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம்,மிளகு, கசகசா, முந்திரி சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சிறிதளவு சோம்பு போட்டு தாளிக்கவும்.