Home Tags Kanavu palan food

Tag: kanavu palan food

உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்

உணவு பொருட்கள் கனவில் வந்தால்

மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

சாப்பிடுவது போல கனவு

1. பந்தியில் அமர்ந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்று அர்த்தம்.
2. விருந்தில் உணவு உண்பது போல் கனவு வந்தால் திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
3. காப்பி சாப்பிடுவது போலக் கனவு கண்டால் சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும் என்று அர்த்தம்.
4. இறைச்சி சாப்பிடுவது போல கனவு வந்தால் வியாதிகள் உண்டாகும் என்று அர்த்தம்.
5. மீன் இறந்து கிடப்பது போன்றோ, அல்லது கருவாடு கனவில் வந்தால் பகைவர்களின் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.
6. ஜாம் சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற போவதன் அறிகுறியாகும்.
7. சாதம் சாப்பிடுவது போல கனவு வந்தால் வியாதிகள் உண்டாகும் என்று பொருள்.
8. அரிசி கனவில் வந்தால், நாம் செய்யும் தொழில் மேன்மை அடையும், லாபம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
9. காரமான பொருட்களை சாப்பிடுவது போல கனவு வந்தால் உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் அல்லது சன்மானம் கிடைக்கும் என்று அர்த்தம்.
10. கோழி முட்டை கனவில் வந்தால் தொழில், வியாபாரம் சிறந்து விளங்க போவதன் அறிகுறியாகும்.

தேநீர் குடிப்பது போல கனவு கண்டால்11. டீ(தேநீர்) குடிப்பது போல கனவு கண்டால் பிரிந்து போன நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அர்த்தம்.
12. கோதுமை, அரிசி இவைகளை கனவில் கண்டால் செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.
13. முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை உண்டாகும் என்று அர்த்தம்.
14. சூடான பொருட்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் மனதில் நினைத்து கொண்டிருக்கும் வெகு நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அர்த்தம்.
15. உப்பு கனவில் வந்தால் பணம், பொருள் நிறைய சேர போகிறது என்று பொருள்.
16. வெல்லம் தின்பது போல கனவு கண்டால் வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
17. புளிப்பான உணவுகளை சாப்பிடுவது போலக் கனவு கண்டால் நமக்கு ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகும் என்று அர்த்தம்.
18. தயிர் சாப்பிடுவது போல கனவு வந்தால் வீட்டில் லக்ஷ்மி கடாஷம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
19. பருப்பு கனவில் வந்தால் பகைவர்கள் விலகி ஓடுவார்கள் என்று பொருள்.
20. பட்டாணி கனவில் வந்தால் வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும் என்று அர்த்தம்.
21. ரொட்டி (பிரட்) சாப்பிடுவது போல கனவு வந்தால் வீட்டில் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.
22. பாயசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் நன்மைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
23. பால் குடிப்பது போல கனவு கண்டால் செல்வம் சேரும் என்று அர்த்தம்.
24. இஞ்சி கனவில் வந்தால், நோய்களால் பாதிப்பு ஏற்பட போகிறது என்று பொருள்.

இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்
25. இனிப்புகள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்று அர்த்தம்.
26. ஏலக்காய் கனவில் வந்தால் பிறரால் மதிக்கப் பெறும் நிலையை அடைவீர்கள் என்று அர்த்தம்.
27. ஏலக்காய் சாப்பிடுவது போல கனவு வந்தால், மிகுந்த செல்வம் வரப்போவதன் அறிகுறியாகும்.
28. பசியால் வருந்துவது போலக் கனவு கண்டால் வறுமை ஏற்படலாம், செல்வங்கள் கூட கரையலாம் என்று அர்த்தம்.
29. தான் மட்டும் தனியாக சாப்பிடுவது போல் கனவு வந்தால் துன்பங்கள் ஏற்படும். உறவினர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம்.
30. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விருந்தில் சாப்பிடுவது போலக் கனவு கண்டால், உத்தியோகத்தில் உயர்வு உண்டு.