மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை 2 முறை கழுவிய பின் அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் சூடானவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக சிவந்து வதங்கியதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
தக்காளி நன்கு கரைந்து வதங்கியவுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இத்துடன் 4 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போன பின் 1 கப் தயிர், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.
அத்துடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்துக் கொள்ளவும். மட்டனை சேர்த்து ஒரு 5 நிமிடத்திற்கு நன்றாக கிளறி விடவும்.
மசாலாவும் மட்டனும் இரண்டற கலக்கும் விதம் நன்கு கிளறி விடவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடி பொட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்கும் நேரத்தில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும்.
20 நிமிடத்திற்கு பின் மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை , கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான தலப்பாகட்டு மட்டன் பிரியாணி ரெடி.