மிளகு இறால் தொக்கு செய்வதற்கு முதலில் 2 ஸ்பூன் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.
இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் இறால் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இறால் சேர்த்து நன்றாக வதக்கிய தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் வைத்து இறாலை வேகவிடவும்.
இறாலில் இருந்து தண்ணீர் வடிந்தவுடன் சிறதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.
இறால் வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கலந்து பின் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் மிளகுத் தொக்கு ரெடி.