திணை அரிசி இட்லி

திணை இட்லி

திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

திணை இட்லி தேவையான பொருள்கள்

  1. திணை அரிசி – 1 கப்
  2. உளுத்தம் பருப்பு – ½ கப்
  3. இட்லி அரிசி – 1 கப்
  4. வெந்தயம் – ¼ ஸ்பூன்
  5. உப்பு – தேவையான அளவு
  6. இஞ்சி – சிறிதளவு
  7. கடுகு – சிறிதளவு
  8. கருவேப்பில்லை – தேவையான அளவு
  9. துருவிய கேரட் – தேவையான அளவு
  10. கொத்தமல்லி – சிறிதளவு
  11. கடலைப் பருப்பு – சிறிதளவு

செய்முறை

  1. திணை அரிசி, உளுத்தம் பருப்பு,இட்லி அரிசி,  வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து கழுவி தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. 3 மணி நேரம் ஊறிய ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. இப்போது அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.
  4. புளித்த மாவினை நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு கடுகு, கடலை பருப்பு , இஞ்சி, கருவேப்பில்லை, கொத்தமல்லி, துருவிய கேரட் ஆகிய இவை அனைத்தையும் தாளித்து கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்துக் கொள்ளவும்.
  6. மாவில் சேர்த்து நன்றாக கலந்த பின் மாவினை இட்லி தட்டில் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான சத்தான திணை இட்லி ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version