கேழ்வரகு பர்பி
தேவையான பொருட்கள்
- ராகி மாவு – 1 கப்
- ரவை – ¼ கப்
- வெல்லம் – 1 கப்
- நெய் – தேவையான அளவு
- முந்திரி – தேவையான அளவு
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
- கேழ்வரகு பர்பி செய்வதற்கு ஒருஅடி கனமான வாணலியை சூடுபடுத்திக் கொள்ளவும்.
- வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய் சூடானதும் அதில் 1 கப் கேழ்வரகு மாவினை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் ¼ கப் ரவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- வேறொரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- வடிகட்டிய வெல்ல கரைசலை கேழ்வரகு மாவுடன் சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்து விடவும்.
- கட்டிகள் எதுவும் இல்லாமல் குறைவான தீயில் வைத்து கலந்து விடவும்.
- வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவும், ரவையும் வெந்துவரும் வரை நன்கு கலந்து விடவும்.
- மாவு நன்கு வெந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கலந்து விடவும்.
- பின்னர் ஏலக்காய் தூள், முந்திரி சேர்த்து கிளறி ஒரு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்.
- சிறிது சூடு ஆறியதும் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறினால் சுவையான சத்தான கேழ்வரகு பர்பி ரெடி.