Home சமையல் இனிப்புகள் செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  •  பச்சரிசி – 1 கப்
  • உளுந்து – 1 கப்
  • தேங்காய் துருவல் – 2 கப்
  • ஏலக்காய் – தேவையான அளவு
  • சர்க்கரை – 1 கப்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • பால் பணியாரம் செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் உளுந்து மற்றும் 1 கப் பச்சரிசியை ஒன்றாக  சேர்த்து நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • 3 மணி நேரம் ஊறிய பின் உளுந்து மற்றும் அரிசியினை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • நன்கு நைசான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பால் எடுக்க ஒரு முழு தேங்காயினை துருவி மிக்சியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பாலில் 1 கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவினை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் பொறித்து எடுக்கவும்.
  • பொறித்த பணியாரத்தை தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் சேர்க்கவும்.
  • தேங்காய் பாலில் சேர்த்து 2 மணி ஊறிய பின் எடுத்து பரிமாறினால் சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version