Home Tags நட்சத்திர கோவில்கள்

Tag: நட்சத்திர கோவில்கள்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

நட்சத்திரங்களும் கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் மற்றும் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாகாளியை வணங்குவது நல்லது. திருவாலங்காடு சென்று வழிபட்டு வருவது நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும்.

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷனை வணங்குவது நல்லது. திருநாகை சென்று வழிபட்டு வருதல் நலம் தரும்.

பரிகார கோவில்கள்ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகநாதசுவாமியை வழிபடுவது நன்மையை செய்யும். ஒரு முறையேனும் திருநாகேஸ்வரம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்காதேவியை வழிபட்டு வர நன்மைகள் அதிகரிக்கும். ஒருமுறையேனும் கதிராமங்கலம் சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட்டு வர நன்மைகள் நடந்தேறும். ஒரு முறையேனும் திருநள்ளாறு சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

நட்சத்திரங்களும் கோவில்களும்புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஆலங்குடி சென்று குருபகவானை வழிபட்டு வருவது மிகவும் நல்லது.

பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். குச்சனூர் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஒரு முறையேனும் திருப்பரங்குன்றம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தில்லை காளியை வழிபட வாழ்வில் பல நன்மைகள் நடைபெறும். சிதம்பரம் சென்று வருதல் நலம் தரும்.

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ராகுபகவானை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் திருமணஞ்சேரி சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  வாஞ்சியம்மனை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் மூவனூர் சென்று வருதல் நலம் தரும்.

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

வழிபாட்டு தலங்கள் சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையாவது திருவானைக்காவல் சென்று வருதல் நலம் தரும்.

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் சோழவந்தான் சென்று வருதல் நலம் தரும்.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ மூகாம்பிகையை வழிபட்டு வர நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவிடைமருதூர் சென்று வருதல் நலம்.

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை வணங்கி வருதல் நலம். ஒரு முறையேனும் பல்லடம் கோயில் சென்று தரிசித்து வருவது நலம் தரும்.

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளை வணங்கி வருவது நல்லது. ஒரு முறையேனும் மதுரை சென்று சொக்கநாதரை வழிபட்டு வாருங்கள்.

பூராடம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் திருநாவலூர் சென்று வாருங்கள் நன்மை உண்டு.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியையும், துர்காதேவியையும் வணங்குவது நன்மை தரும்.ஒரு முறையேனும் தர்மபுரம் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜகாளியம்மனை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் தெத்துப்பட்டி சென்று வருதல் நலம் தரும்.

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் நீங்கள் வணங்குவது நன்மை தரும். முடிந்தால் ஒரு முறை கொடுமுடி சென்று வருதல் நலம்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருச்செங்கோடு சென்று வழிபட்டு வரவும்.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷன், சித்ரகுப்தர் ஆகிய இவர்களை வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருவையாறு கோயில் சென்று வணங்கி விட்டு வாருங்கள்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இவர்கள் இருவரையும் வணங்குவது நல்லது. முடிந்தால் திருவையாறு சென்று இறைவனை வழிபட்டு வாருங்கள்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. முடிந்தால் ஓமாம்புலியூர் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில் பெறலாம். இதன் அடிப்படையில் 27 நக்ஷத்திரத்திற்கு உரிய கோயில்கள் பின்வருமாறு…

27 நட்சத்திரங்களும் கோவில்களும் அஸ்வினி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

பரணி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

கார்த்திகை

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

ரோகிணி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

மிருகஷீரிஷம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

திருவாதிரை

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.

புனர்பூசம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டரில் பழைய வாணியம்பாடி இருக்கிறது.

பூசம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கிலோமீட்டர் சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் வந்தடையலாம்.

ஆயில்யம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.

மகம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

பூரம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.

உத்தரம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

அஸ்தம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

சித்திரை

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், சித்திரரத வல்லபபெருமாள் திருக் கோவில். மதுரையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் இருக்கிறது.

சுவாதி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் சித்துக்காடு உள்ளது.

விசாகம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம். முத்துக்குமாரசாமி திருக்கோயில். இந்த ஆலயம் திருமலைக் கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்தை அடையலாம்.

அனுஷம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கேட்டை

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.

மூலம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டரில் மப்பேடு உள்ளது.

பூராடம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.

உத்திராடம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.

திருவோணம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவில் இருந்தும் பஸ்வசதி உள்ளது.

அவிட்டம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் இங்கு செல்லலாம்.

சதயம்

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

பூரட்டாதி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், திருவானேஷ்வர் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் இருப்பது ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் உள்ளது.

உத்திரட்டாதி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையார் கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.

ரேவதி

இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோ மீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.