கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்

கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சிறந்த உணவுகள்

உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போவதால், அடிக்கடி கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக, சிறு வயது முதலே பார்வைக் கோளாறு ஏற்பட்டு கண்ணாடி போடும் நிலை ஏற்படுகிறது.

கண்களை குளிர்ச்சியாக்கும் வெள்ளரிக்காய்மேலும், தொலைக்காட்சி, கணினி மற்றும் செல்போன் முன்பாக அதிக நேரம் வேலை செய்பவர்களும் விரைவில் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவை அனைத்திற்கும் போதிய சத்துக்கள் இல்லாதது மற்றும் கண்கள் குளிர்ச்சி தன்மையை இழந்து வறண்டநிலையில் இருப்பதுமே காரணமாக அமைகிறது.

நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமாக இருக்கின்ற கண்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அன்றாட வாழ்க்கையையே பாதித்துவிடும். கண்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருந்தால் கண் பார்வையில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

ஆரோக்கியமான கண்கள் எப்போதும் நல்ல பொலிவோடு, அழகாகவும், பளிச்சென்ற பார்வையுடனும் இருக்க வேண்டும். இதற்கு நாம் கண்கள் அதிகப்படியான வெப்பத்தில் இருந்து பாதுகாத்து குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க எண்ணெய்க் குளியல், கண்களுக்கு மசாஜ் போன்றவற்றை நாம் செய்து கொண்டாலும் கண்களுக்கு ஆற்றலை அளிக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
அத்தகைய உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் உணவுகள்

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் கரோட்டினாய்டு என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிட்டால், கண் எரிச்சல் மற்றும் பார்வையை பாதிக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாத்து, குளிர்ச்சியை கொடுக்கிறது.

கீரை வகைகள்கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். கீரைகளில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே வாரத்தில் 2 முறையாவது கீரை எடுத்துக் கொள்வது நல்லது.

முருங்கை பிஞ்சு, நீர்ச்சத்து மிகுந்த பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகள் கண்களின் உறுப்புகளை நன்கு பலப்படுத்தி பார்வை நரம்புகளுக்கு பலத்தை சேர்க்கிறது.

கண்களை பாதுகாக்க வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி கண்ணில் வைத்து 20 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான நீரில் கண்ணை கழுவினால் கண் மிருதுவாகும்.

மேலும் இதில் உள்ள காபிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் கண் வீக்கம், கண் எரிச்சல் போன்றவற்றை குணமாக்குவதுடன் நல்ல குளிர்ச்சியை கொடுக்கிறது..

கண்களின் குளிர்ச்சிக்கு கற்றாழை நன்கு உதவும். கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்துக் கொண்டு, அவற்றை இமைகளில் தடவி வந்தால் கண்ணின் அழகிற்கும், குளிர்ச்சிக்கும் பயன்படுகிறது.
மேலும், கண்ணில் ஏற்படும் தொற்றுகளையும் தடுக்கிறது.

பழங்கள் மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் மாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் சூரிய வெளிச்சத்தால் கண் கூசுதல் நீங்கி, பார்வை நன்கு தெரிவதுடன், கண்களுக்கு நல்ல குளிர்ச்சியையும் கொடுக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மந்திரம் என்றால் என்ன

எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்?

எந்தெந்த விஷயங்களுக்கு என்ன மந்திரம் கூற வேண்டும்? கோயிலில் சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது கோயில் குருக்கள் மந்திரங்கள் கூறி தீபாராதனை காட்டுவதை நாம் அனவைரும் பார்த்திருப்போம். இறைவனிடம் வந்து வேண்டுபவர்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும்,...
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...
கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு...
துளசி மருத்துவ நன்மைகள்

துளசி மருத்துவ குணங்கள்

துளசி துளசி மூலிகைகளின் ராணி என அழைக்கபடுகிறது. துளசியில் உள்ள மருத்துவ குணங்களால் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசியின் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. துளசி...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.