கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள்

மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான காரணம் தெரியாமல் பலரும் நிம்மதி இழந்து தவிக்கிறோம். அது போன்ற கெட்ட கனவுகளை நாம் எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொருத்து, அது பலிக்குமா அல்லது பலிக்காதா என்று நம்மால் அறிய முடியும். கெட்ட கனவுகள வந்தால் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பு இருக்கும். இந்த கனவு ஏன் நமக்கு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன, பரிகாரம் என்ன என தெரியாமல் அல்லல்படுகிறோம். எந்த மாதிரியான கெட்ட கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

  1. பாம்பு மற்றும் பிற விஷ ஜந்துகள் நம் கனவில் தொடர்ந்து வந்து நம்மை பயமுறுத்தி கொண்டே இருந்தால் கருடன் மீது அமர்ந்து இருக்கும் விஷ்ணுவின் படத்தை வழிபட்டால் விஷ ஜந்துகள் தொடர்பான கனவுகள் ஏற்படாது.
  2. நோய், வியாதிகள் சம்பந்தமான கனவுகள் நம் கனவில் தொடர்ந்து வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபட்டு வர வேண்டும். இதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் சிறந்தது.
  3. நாம் ஊனமானதை போல கனவு வந்தால் சோகமான செய்தி வந்து சேரும்.
  4. பேய், பிசாசு பற்றிய கனவுகள் மற்றும் நம் செய்யும் காரியங்கள் தடைபடுவது போல கனவு வந்தால் ஆனைமுகனை வழிபடவேண்டும். விநாயகருக்கு அர்ச்சனை செய்து அவரின் அகவலை படித்து வந்தால் இது போன்ற கெட்ட கனவுகள் ஏற்படாது.
  5. பண கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளை கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட்டு வர வேண்டும்.
  6. நிர்வாண கோலம் கனவில் வந்தால், அவமானம் ஏற்படும்.
  7. படிப்பு தடைப்படும்படியான கனவுகள் வந்தால் சரஸ்வதி மற்றும் ஹயகிரீவர் மந்திரங்களை சொல்லி வழிபாட்டு வரலாம்.
  8. ஒரு குறிப்பிட்ட தெய்வம் நமது கனவில் அடிக்கடி தோன்றினால் அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கும்.
  9. இறந்தவர்கள் அடிக்கடி நமது கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து வழிபட வேண்டும். தெய்வத்திற்கு பொங்கல் வைத்தும், இறந்த நம் முன்னோர்க்கு திதி கொடுத்தும் வழிபட்டு வரலாம்.

பொதுவாக கெட்ட கனவுகள் கண்டால் காலையில் எழுந்து குளித்து விட்டு பெருமாளை (அல்லது நமக்கு பிடித்த இஷ்ட தெய்வம்) மனதில் நினைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் நமது மனம் தெளியும். மேலும் கோவிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து விட்டு வருவது மிகவும் நல்லது.

காக்கும் கடவுளான பெருமாளை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

“அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்” என சொல்லி பெருமாளை வணங்க வேண்டும். இவ்வாறு இரவில் படுக்க போகும்முன் இந்த மந்திரத்தை கூறி வழிபட்டு வருவதன் மூலம் கெட்ட கனவுகள் நம்மை அண்டாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தித்திக்கும் கோவில் சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் பாகு வெல்லம் – 1 கப் பாசி பருப்பு – ¼ கப் நெய் – 100 கிராம் ஏலக்காய் – சிறிதளவு ...
ஷாக் அடித்தால் என்ன செய்ய வேண்டும்

முதலுதவி பெட்டி யும் அதில் இருக்க வேண்டிய முதலுதவி பொருட்களும்

முதலுதவி பெட்டி முதலுதவி செய்ய மிகவும் முக்கியம் முக்கிய பொருட்கள் நிறைந்த முதல் உதவிப் பெட்டி ஆகும். காயமடைந்தவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்தியாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும். இது...
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பரணி நட்சத்திரத்தின் இராசி : மேஷம் பரணி நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பரணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை – துர்க்கை பரணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் புனர்பூசம் நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மற்றும் கடகம் புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : குரு புனர்பூசம் 1 முதல் 3 பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி - மிதுனம் :...
காரடையான் நோன்பு விரத முறை

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு  காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும். மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி...
நவகிரக தோஷம் விலக

செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது? செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கபடும் ஒன்று செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு திருமணம் தாமதமாக நடைபெறும், அல்லது திருமணம் நடைபெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.