கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள்

மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான காரணம் தெரியாமல் பலரும் நிம்மதி இழந்து தவிக்கிறோம். அது போன்ற கெட்ட கனவுகளை நாம் எந்த நேரத்தில் காண்கிறோம் என்பதை பொருத்து, அது பலிக்குமா அல்லது பலிக்காதா என்று நம்மால் அறிய முடியும். கெட்ட கனவுகள வந்தால் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பு இருக்கும். இந்த கனவு ஏன் நமக்கு வந்தது, இதற்கு அர்த்தம் என்ன, பரிகாரம் என்ன என தெரியாமல் அல்லல்படுகிறோம். எந்த மாதிரியான கெட்ட கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

  1. பாம்பு மற்றும் பிற விஷ ஜந்துகள் நம் கனவில் தொடர்ந்து வந்து நம்மை பயமுறுத்தி கொண்டே இருந்தால் கருடன் மீது அமர்ந்து இருக்கும் விஷ்ணுவின் படத்தை வழிபட்டால் விஷ ஜந்துகள் தொடர்பான கனவுகள் ஏற்படாது.
  2. நோய், வியாதிகள் சம்பந்தமான கனவுகள் நம் கனவில் தொடர்ந்து வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபட்டு வர வேண்டும். இதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் சிறந்தது.
  3. நாம் ஊனமானதை போல கனவு வந்தால் சோகமான செய்தி வந்து சேரும்.
  4. பேய், பிசாசு பற்றிய கனவுகள் மற்றும் நம் செய்யும் காரியங்கள் தடைபடுவது போல கனவு வந்தால் ஆனைமுகனை வழிபடவேண்டும். விநாயகருக்கு அர்ச்சனை செய்து அவரின் அகவலை படித்து வந்தால் இது போன்ற கெட்ட கனவுகள் ஏற்படாது.
  5. பண கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளை கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட்டு வர வேண்டும்.
  6. நிர்வாண கோலம் கனவில் வந்தால், அவமானம் ஏற்படும்.
  7. படிப்பு தடைப்படும்படியான கனவுகள் வந்தால் சரஸ்வதி மற்றும் ஹயகிரீவர் மந்திரங்களை சொல்லி வழிபாட்டு வரலாம்.
  8. ஒரு குறிப்பிட்ட தெய்வம் நமது கனவில் அடிக்கடி தோன்றினால் அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கும்.
  9. இறந்தவர்கள் அடிக்கடி நமது கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து வழிபட வேண்டும். தெய்வத்திற்கு பொங்கல் வைத்தும், இறந்த நம் முன்னோர்க்கு திதி கொடுத்தும் வழிபட்டு வரலாம்.

பொதுவாக கெட்ட கனவுகள் கண்டால் காலையில் எழுந்து குளித்து விட்டு பெருமாளை (அல்லது நமக்கு பிடித்த இஷ்ட தெய்வம்) மனதில் நினைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் நமது மனம் தெளியும். மேலும் கோவிலுக்கு சென்று ஒரு அர்ச்சனை செய்து விட்டு வருவது மிகவும் நல்லது.

காக்கும் கடவுளான பெருமாளை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

“அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்” என சொல்லி பெருமாளை வணங்க வேண்டும். இவ்வாறு இரவில் படுக்க போகும்முன் இந்த மந்திரத்தை கூறி வழிபட்டு வருவதன் மூலம் கெட்ட கனவுகள் நம்மை அண்டாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

spicy chickkan grevy

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம் – 2  ( பொடியாக நறுக்கியது ) தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை...
இறால் வடை செய்முறை

சுவையான இறால் வடை

இறால் வடை தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம் கடலைபருப்பு – 250 கிராம் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் -  5 ( பொடியாக...
அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 15.11.2024 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...
ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி

ஆப்பிள் பாயாசம் செய்முறை

ஆப்பிள் பாயாசம்  ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது.  ஆப்பிளில் நோய் எதிர்ப்பு...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...
வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க

கோடை வெயிலில் இருந்து உடல் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

சரும பராமரிப்பு கோடை காலத்தில் அதிக அளவில் பாதிக்கப்படுவது நமது சருமம் மற்றும் தலைமுடி தான். கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் உடலில் நீர்ச்சத்து குறைந்தது உடல் சோர்வடைந்து பொலிவிழந்து காணப்படும். வெயிலின் தாக்கத்தில் இருந்து ...
திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் புகுந்த வீட்டில் முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்? திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதை போகிறபோக்கில் சாதரணமாக சொல்லிவிடவில்லை, அதற்கு பொருள் நிறைந்த ஆர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு நெல், சோளம், பருப்பு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.