லக்னம் என்றால் என்ன? லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

லக்னம் என்றால் என்ன?

ஒருவரிடம் அவரின் ராசி எதுவென்று கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அவரின் லக்னம் என்னவென்று கேட்டால் திணறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் ‘ல’ என்றும் ‘ராசி’ என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ‘ல’ எனப்படுவது லக்னத்தை குறிக்கும். ராசியானது ஒருவரின் ஜாதகத்தின் உடல் என்றால் லக்னமானது உயிர் ஆகும்.

லக்ன பலன்கள் என்றால் என்ன

லக்னம் என்பது சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது. ராசி என்பது சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் வானில் எந்த ராசி உதயமாகி உள்ளதோ, அதாவது பூமியின் சுழற்சிப்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ, அந்த ராசி வீடே ‘லக்னம்’ எனப்படுகிறது.

லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை முழுமையாக அறிய முடியும். லக்னம் எனப்படும் இடம் தான் ஒரு ஜாதக கட்டத்தில் முதல் வீடு ஆகும். இதில் இருந்து தான் பன்னிரண்டு வீடுகளிலும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க முடியும். பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் ஒருவரின் வாழ்கையின் ஒவ்வொரு துறையையும் முடிவு செய்கிறது.

லக்னம் தான் ஒருவரின் ஆளுமை, சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவரின் வாழ்க்கையில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. ராசி என்பது லக்னத்துக்கு உறுதுணை செய்யும் ஓர் அமைப்புதான். லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றது. இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். அப்போதுதான், அது முழுமையான ஜோதிடப் பலனாக இருக்கும்.

லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நமது பூமியானது 360 டிகிரி அளவுகொண்ட வான்வெளி பகுதியாகும். அந்த வான்வெளியை 12 சம பங்குகளாக, அதாவது தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாக நமது ஞானிகள் மற்றும் ரிஷிகள் பிரித்துள்ளனர்.
இவை முறையே,

1. மேஷ லக்னம்
2. ரிஷப லக்னம்
3. மிதுன லக்னம்
4. கடக லக்னம்
5. சிம்ம லக்னம்
6. கன்னி லக்னம்
7. விருச்சிக லக்னம்
8. துலாம் லக்னம்
9. தனுசு லக்னம்
10. மகர லக்னம்
11. கும்ப லக்னம்
12. மீன லக்னம்

என்று அவற்றின் வடிவங்களை வைத்து 12 லக்னங்களாக பிரித்துள்ளனர்.

லக்னமானது தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி வரும். சூரியன் ‘மேஷ ராசி’யில் சஞ்சரிக்கும் போது சூரிய உதயத்தில் பிறப்பவர்களின் லக்னம் மேஷ லக்னமாக இருக்கும். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தையின் லக்னம் ரிஷப லக்னமாக இருக்கும். இப்படி லக்னம் தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

avoidable food in the morning

காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள்...
tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
மொட்டை போடுவது ஏன்

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் தெரியுமா

குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன் நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு உண்மை மறைந்திருக்கும். அப்படிப்பட்ட...
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
நவமி திதி

நவமி திதி பலன்கள், நவமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

நவமி திதி நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஒன்பதாவது நாள் நவமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் நவமியை சுக்கில...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.