லக்னம் என்றால் என்ன? லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

லக்னம் என்றால் என்ன?

ஒருவரிடம் அவரின் ராசி எதுவென்று கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அவரின் லக்னம் என்னவென்று கேட்டால் திணறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் ‘ல’ என்றும் ‘ராசி’ என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். ‘ல’ எனப்படுவது லக்னத்தை குறிக்கும். ராசியானது ஒருவரின் ஜாதகத்தின் உடல் என்றால் லக்னமானது உயிர் ஆகும்.

லக்ன பலன்கள் என்றால் என்ன

லக்னம் என்பது சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது. ராசி என்பது சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடபடுகிறது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் வானில் எந்த ராசி உதயமாகி உள்ளதோ, அதாவது பூமியின் சுழற்சிப்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ, அந்த ராசி வீடே ‘லக்னம்’ எனப்படுகிறது.

லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை முழுமையாக அறிய முடியும். லக்னம் எனப்படும் இடம் தான் ஒரு ஜாதக கட்டத்தில் முதல் வீடு ஆகும். இதில் இருந்து தான் பன்னிரண்டு வீடுகளிலும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க முடியும். பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் ஒருவரின் வாழ்கையின் ஒவ்வொரு துறையையும் முடிவு செய்கிறது.

லக்னம் தான் ஒருவரின் ஆளுமை, சிந்தனை, செயல், அதிர்ஷ்டம், அவரின் வாழ்க்கையில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. ராசி என்பது லக்னத்துக்கு உறுதுணை செய்யும் ஓர் அமைப்புதான். லக்னமும், ராசியும் இணைந்த தண்டவாளங்கள் போன்றது. இரண்டையும் இணைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். அப்போதுதான், அது முழுமையான ஜோதிடப் பலனாக இருக்கும்.

லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நமது பூமியானது 360 டிகிரி அளவுகொண்ட வான்வெளி பகுதியாகும். அந்த வான்வெளியை 12 சம பங்குகளாக, அதாவது தலா 30 டிகிரி அளவுள்ள பகுதிகளாக நமது ஞானிகள் மற்றும் ரிஷிகள் பிரித்துள்ளனர்.
இவை முறையே,

1. மேஷ லக்னம்
2. ரிஷப லக்னம்
3. மிதுன லக்னம்
4. கடக லக்னம்
5. சிம்ம லக்னம்
6. கன்னி லக்னம்
7. விருச்சிக லக்னம்
8. துலாம் லக்னம்
9. தனுசு லக்னம்
10. மகர லக்னம்
11. கும்ப லக்னம்
12. மீன லக்னம்

என்று அவற்றின் வடிவங்களை வைத்து 12 லக்னங்களாக பிரித்துள்ளனர்.

லக்னமானது தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறி மாறி வரும். சூரியன் ‘மேஷ ராசி’யில் சஞ்சரிக்கும் போது சூரிய உதயத்தில் பிறப்பவர்களின் லக்னம் மேஷ லக்னமாக இருக்கும். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து பிறக்கும் குழந்தையின் லக்னம் ரிஷப லக்னமாக இருக்கும். இப்படி லக்னம் தோராயமாக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டேயிருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
சிவகரந்தை நன்மைகள்

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ நன்மைகள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு...
லக்ஷ்மி குபேர பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை

செல்வம் கொழிக்கும் லக்ஷ்மி குபேர பூஜை லக்ஷ்மி குபேர பூஜை செய்ய சிறந்த நாள் வியாழக்கிழமை. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் மகாலக்ஷ்மியின்...
12 ராசிகள்

உங்கள் ராசிக்கு என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்

  உங்கள் ராசிக்கு  என்ன தானம் செய்தால் யோகம் உண்டாகும்     மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இந்த இராசியில் சத்திரிய கிரகமான சூரியன் உச்சம் அடைகிறார். இவர்களுக்கு அஷ்டமாதிபதியும் செவ்வாயாக இருப்பதால்,...
எலும்பு முறிவு குணமாக

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள் எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு...
வைகாசியில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் பன்னிரண்டு மாதங்களில் இரண்டாவதாக வரும் தமிழ் மாதம் வைகாசியாகும். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.