காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள்

காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள் முழுவதும் ஆற்றலையும், புத்துணர்ச்சியையும்  அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்இரவு உணவிற்கு பின் நீண்ட நேரம் கழித்து தான் நாம் காலை உணவை சாப்பிடுகிறோம். எனவே அந்த உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பது அவசியமாகும்.

காலை நேர உணவில் அதிக காரம், மசாலா இல்லாத உணவாக இருந்தால் மிகவும் நல்லது. அதிக காரமான உணவு  இரைப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். உணவு செரிமானம் ஆகாமல் செரிமான கோளாறு ஏற்படும்.  நட்ஸ் – பாதாம்  போன்ற உலர் கொட்டைகளை இரவு முழுவதும்  ஊறவைத்து காலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலன் கொடுக்கும்.

avoidable food in the morning காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • காலையில் எழுந்தவுடன் டீ , காபி அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றை அருந்துவதால் உடலுக்கு எந்த நன்மையையும் கிடைப்பதில்லை. இதற்கு பதிலாக இளம் சூடான நீரை அருந்தாலம். இது உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது.
  • பொதுவாகவே புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அதை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரைப்பையில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாக அமைந்துவிடும்.
  • காலையில் இனிப்பான பண்டங்களை சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நல்லது. இனிப்பு சாப்பிடுவதால்  உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரித்து  நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.
  • தயிர் காலை வேளைகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். தயிர் ஆரோக்கியமான உணவு தான், ஆனால் காலையில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். அளவாக சாப்பிடுவது நல்லதுதான். குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.
  • தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால் வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
  • காலையில் ஐஸ் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது உடலின் சுறுசுறுப்பை குறைத்து மந்தத்தன்மையை ஏற்படுத்தி விடும்.
  • வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால், வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் அதிகமாக கலக்க நேரிடும். அது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவது எப்போதும் நல்லதல்ல, காலையில் சாப்பிடுவதால் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்த கூடியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பெண் கால் மச்ச பலன்கள்

பெண் கால் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கால் மச்ச பலன்கள் சாமுத்திரிக லட்சனப்படி ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்ட இடங்களில் மச்சம் இருந்தால் அவருக்கு என்ன பலன்கள் உண்டாகும் என குறிப்பிடப்பட்டிற்கிறது. அந்த வகையில் இந்த பகுதியில் பெண் பாதம், மூட்டு,...
ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...
சரும வறட்சியை தடுக்க

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும் பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில்...
தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காய் மருத்துவ குணங்கள்

தான்றிக்காய் தான்றி என்பது ஒரு மர இனமாகும். இது மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்கிறது. மார்ச்...
பிரண்டை மருத்துவ பயன்கள்

பிரண்டை மருத்துவ குணங்கள்

பிரண்டை பிரண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் ஒரு தாவர வகையாகும். இது கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது பொதுவாக வெப்பம் அதிகமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது. இது இந்தியா மற்றும் இலங்கை...
சூரிய தோஷம்

நான்கு முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

தோஷங்களும் பரிகாரங்களும் இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஜாதகங்களில் கீழ்கண்ட இந்த நான்கு தோஷங்கள் தான் அதிகம் காணப்படுகிறது. அந்த நான்கு தோஷங்கள் என்னென்ன? அதற்கான பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.