உங்கள் பாதங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்.

பாதங்கள்

நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதங்களின் அழகும் முக்கியம் தான். ஆனால் பெண்கள் தங்கள் முகம், தலைமுடி, மற்றும் கைகளை பராமரிக்க செலவிடும் நேரத்தில் 1 பங்கு கூட தங்கள் பாதங்களைக வனிப்பதில் செலவிடுவதில்லை.

அழகான பாதங்கள் நம் உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள் தான். அதனால் பாதங்களை கவனிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். முகத்திற்கு எப்படி ஈரப்பதம் மிகவும் முக்கியமோ அதே போல் நம் பாதங்களுக்கும் ஈரப்பதம் மிகவும் முக்கியமான் ஒன்றாகும்.

பாதங்கள் பராமரிப்பு

பாதங்களை எப்பொழுதும் ஈரப்பதத்துடனும் வறட்சி இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பாதத்தை நாம் சரியாக பராமரிக்கா விட்டால் பாதத்தில் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, வெடிப்பு, வீக்கம் , வலி, துர்நாற்றம் , விரல் நகங்களில் சொத்தை, விரல் இடுக்குகளில் புண்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

பாதங்களில் ஏற்படும் புண்கள், சிறு சிறு கீறல்கள் போன்றவற்றை அலட்சியமாக கருதக்கூடாது. உடனுக்குடன் அதை சரிசெய்துவிட வேண்டும். இல்லையென்றால் அது பாதங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் பாதங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள் பாதிகளில் சிறு புண்கள் கூட ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகங்கள் பராமரிப்பு

வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  நகங்களில் அழுக்கு, மண் துகள்கள் போன்றவை சேராமல் பார்த்து கொள்வது அவசியம்.

கால் நகங்களை மிக நீண்டதாக வளர்ப்பதை தவிர்க்கவும். நகங்களை வெட்டுவதற்கு முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விடவும். பாதங்களை கழுவிய பின் நகங்கள் ஈரமாகவும் மென்மையாகவும் இருக்கும் இந்த நேரத்தில் நகங்களை வெட்டினால் வலியோ, காயங்களோ ஏற்படாது.

காலணிகள்

நமது பாதங்களுக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம் உடல் வாகுக்கு ஏற்றவாறு ஆடை அணிவதை போல நம் பாதத்திற்கு ஏற்றவாறு காலனிகளை அணிவதும் முக்கிமாகும்.ஒரு சில காலணிகள் பாதத்தில் காயங்கள் ஏற்படுத்திவிடும். அதனால் காலணிகளை வாங்கும் போது அது நம் கால்களுக்கு பொருந்துமா என்று பார்த்து வாங்க வேண்டும்.

சீரான உடல் எடை

பாதங்கள் தான் நம்முடைய உடலைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம். எனவே தான் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு கால்கள், மற்றும் பாதங்களில் அதிக வலி மற்றும் வீக்கம் உண்டாகும். இவை எதனால் ஏற்படுகிறது என்றால் உடலின் மொத்த பாரத்தையும் பதங்களே தாங்கி சுமக்கின்றன. எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் பாதத்திற்கு நாம் செய்யும் மிக முக்கிய நன்மைகளில் ஒன்றாகும்.

நாம் குளித்து முடித்தவுடன் உடலை எப்படி துடைத்து சுத்தபடுத்துகின்றோமோ அதே போல் நாம் பாதங்களையும் நன்றாக துடைக்க வேண்டும். ஆனால் பலரும் இதை செய்வதே இல்லை. தினமும் இரவு படுப்பதற்கு முன் பாதங்களை நன்றாக வெந்நீரில் கழுவி துடைத்து விட்டு சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து நன்றாக பாதங்களின் எல்லா பக்கங்களிலும் மென்மையாக தேய்த்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

பாதங்கள் மிருதுவாக பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள சில வழிகள்

  • பாதத்தில் வெடிப்பு ஏற்பட்ட அதனால்  பாதிக்கப்பட்டவர்கள் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.
  • உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி,  பாதம் மிளிரும்.
  • மிகவும் இறுக்கமான காலணிகளை அணிவதை தவிர்க்கவும். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும்.
  • தினமும் இரண்டு வேளை பாதங்களில் மிருதுவாக்கும் க்ரீம்  தடவி வந்தால் பாதங்கள் வறண்டு போகாமல் இருக்கும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேன் சேர்த்து அந்த தண்ணீரில் காலை வைத்தால் பாதங்கள் வறண்டு போகாமல், அழகாக இருக்கும்.
  • ஆலிவ் எண்ணெயை பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் வெடிப்பு, வறண்ட பாதங்களிலிருந்து தீர்வு கிடைக்கும்.
  • பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது ஆகிய உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
  • தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர், எலுமிச்சை சாறு, ஷாம்பூ, கல் உப்பு இவற்றை சேர்த்து அதில் பதங்களை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதங்களை நன்கு தேய்த்து மசாஜ் செய்வது போல் செய்தால் பாதங்கள் மிருதுவாகவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும்
  • வெந்நீரில் சிறிதளவு தேன் கலந்து பாதங்கள் முழுவதும் தடவி மசாஜ் செய்து ஒரு 10 நிமிடம் அப்படியே விட்டு விடவும். நன்கு காய்ந்த உடன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவவும். இவ்வாறு செய்தால் பாதங்கள் சொரசொரப்பு தன்மை இல்லாமல் மிருதுவாக இருக்கும்.
  •  மருதாணி பொடியுடன்  தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் போடுவது  மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி பாதங்களை  மென்மையாக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் – ½ கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய்...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
சருமத்தில் எண்ணெய் பசை குறைய

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம்  நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும்....
மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.