திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம்
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன்
திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : மகேஸ்வரன்
திருவாதிரை நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : துர்க்கை
திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : மனுஷகணம்
திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் : செங்கரு (பாலில்லா மரம் )
திருவாதிரை நட்சத்திரத்தின் மிருகம் : செந்நாய்
திருவாதிரை நட்சத்திரத்தின் பட்சி : சிட்டுக்குருவி
திருவாதிரை நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்

திருவாதிரை நட்சத்திரத்தின் வடிவம்

திருவாதிரை நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 6ம் இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘மூதிரை’ என்ற பெயரும் உண்டு. திருவாதிரை நட்சத்திரம் வான் மண்டலத்தில் மனித தலை போன்றும், வைரம், கண்ணீர் துளி போன்றும் காட்சியளிக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது தில்லையில் அருள்புரியும் நடராஜர் அவதரித்த நட்சத்திரமாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல புத்திசாலியாகவும், பேச்சுகளில் வல்லவராகவும் இருப்பார்கள். கல்வியில் நாட்டம் குறைவாக இருக்கும். தந்திரமாக பேசி காரியங்களை முடிப்பார்கள். இவர்களுக்கு கோபமும், முரட்டு தனமும் அதிகம் இருக்கும். அழகான தோற்றம் கொண்டவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோசமான கோப சுபாவம் கொண்டவராகவும் இருப்பார்கள். ஆனாலும் அறிவுத் திறன்பெற்ற புத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் சரியான காரியவாதிகள். சந்தர்பத்திற்கு ஏற்றவாறு பேச்சை மாற்றி மாற்றி பேசுவார்கள். இவர்கள் வாழ்க்கையில், வசதிகளும் சுகபோகங்களும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதற்காக கடினமான உழைக்க வேண்டியிருக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணத்தேவை என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தன்னை சுற்றி இருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல தங்களை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள். இவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விட மாட்டார்கள். தற்பெருமை அதிகம் கொண்டவர்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெரும்பாலோனோர் சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமப்பார்கள். உறவினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்கு காம வேட்கை அதிகம் இருக்கும். அவசர அவசரமாக காரியங்களை செய்வார்கள். இவர்கள் செலவாளியாக இருப்பதுடன், துன்பங்கள் நேரிடும்போதும், மனம் கலங்காமல் இருப்பார்கள். 25 வயதுக்குப் பிறகு இவர்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள்.

இவர்கள் பிரதிபலன் பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். இவர்கள் சேமித்து வாழ வேண்டும் என விரும்புவார்கள். எல்லாவற்றையும் முன்னின்று நடத்தும் விருப்பமுடையவர்கள். அழகான கண்களை கொண்டவர்கள். பெரும் புகழுக்கு உரியவர்கள்.

திருவாதிரை நட்சத்திரம் முதல் பாதம் :

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எளிதில் பழகக்கூடியவர்கள். நற்குணங்களுக்கு சொந்தக்காரர். ஆடம்பரமாக வாழ விருப்பம் உடையவர்கள். கணக்கில் சாமர்த்தியசாலியானவர்கள். இதமான, மகிழ்ச்சியான பேச்சுகளை பேசக்கூடியவர்கள். நல்ல குணங்களை தன்னுளே கொண்டவர்கள். கோவம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். இவர்களிடம் கோவமும், குணமும் சேர்ந்தே இருக்கும். இவர்கள் கலகலப்பாக பேசுவதில் வல்லவர்கள்.

திருவாதிரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். முரட்டுச் சுபாவம் கொண்டவர்கள். கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். உறவினர்களிடம் பகைமை உடையவர்கள். இவர்கள் பேசுவதில் கெட்டிக்காரர்கள். மற்றவரின் சொல்லுக்கு கட்டுப்படாமல் தர்க்கம் புரிவார்கள். பிடிவாத குணம் உடையவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள்.

திருவாதிரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் :

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நிதானம் இல்லாதவர்கள். திமிரான பேச்சுகளை பேசுபவர்கள். புறம் பேசும் குணம் உடையவர்கள். இவர்கள் மிகவும் முரட்டு பிடிவாதம் கொண்டவர்கள். தற்புகழ்ச்சியை அதிகம் விரும்புவார்கள். இரகசியம் உடையவர்கள். புகழை விரும்பக்கூடியவர்கள். எதிலும் நிதானம் இல்லாமல் அவசரமாக முடிவெடுப்பார்கள். அவசர முடிவு எடுத்து விட்டு பின்பு அதற்காக வருந்துவார்கள்.

திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதம் :

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சாந்த குணம் உடையவர்கள். வஞ்சக எண்ணம் கொண்டவர்கள். ஞாபக மறதி உடையவர்கள். இவர்கள் அழகான உடல் வாகு கொண்டவர்கள். சிறந்த இவர்களிடம் பக்தியும், தர்மசிந்தனையும் அதிகம் இருக்கும். பொது வாழ்வில் அதிக ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உறவினரின் பகை இவர்களுக்கு அதிகம் இருக்கும். படிப்பது மற்றும் எழுதுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். விவேகமான முயற்சிகளை உடையவர்கள்.

மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
பருப்பு கீரை பயன்கள்

பலவித மருத்துவ பயன்கள் கொண்ட பருப்பு கீரை

பருப்பு கீரை இந்த கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்ற பெயர் ஏற்பட்டது. பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ என்றும் அழைக்கபடுகிறது. பருப்பு...
மருதாணி இலை பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி இலை

மருதாணி இலை மருதாணியை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். பெண்மை என்பதே அழகுதான். அந்த அழகுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது மருதாணியாகும். மருதாணியானது மைலாஞ்சி, மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் என வேறு பெயர்களாலும்...
அமுக்கிராகிழங்கின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள்

அமுக்கிராக்கிழங்கு என்கிற அஸ்வகந்தா அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, வேர்,...
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...
பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்

பித்ரு தோஷம் தோஷங்களில் மிக கடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரியன், மற்றும் சந்திர கிரகங்கள் ராகு அல்லது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.