பிரதமை திதி பலன்கள், பிரதமை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

பிரதமை திதி

அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த வரும் திதி பிரதமை திதியாகும். பிரதமை என்பது வடமொழி சொல்லாகும். இதற்கு முதலாவது என்று பொருள். அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமையை கிருஷ்ண பட்ச பிரதமை என்றும் அழைக்கபடுகிறது. பிரதமை திதி ‘பாட்டிமை’ ‘பாட்டிமுகம்’ ‘பாட்டியம்’ ‘பாட்டுவம்’ என்றும் அழைக்கபடுகிறது. பவுர்ணமி தினத்திற்கு பிறகு, சந்திரன் தேய்வதை அவ்வாறு சொல்வார்கள்.

பிரதமை திதி பலன்கள்

பிரதமை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

நன்றி மறக்காதவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவர்கள், செல்வந்தர், பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள், பொறுமை உடையவர்கள், கீர்த்தி உடையவர்கள், சுக போக வாழக்கையை விரும்பக்கூடியவர்கள், அமைதியான குணம் கொண்டவர்கள், எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க கூடியவர்கள்.

பிரதமை திதியின் குணங்கள்

பொதுவாக பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். ஏனெனில் அமாவாசை, மற்றும் பவுர்ணமி தினங்களில் பூமியில் கதிர்வீச்சு தன்மையும், ஈர்ப்பு விசையும் மாறுபட்டிருக்கும். அதனால் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் பூமியின் கதிர்வீச்சு குன்றுவதால், எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாது என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.

பிரதமை திதியில் என்னென்ன செய்யலாம்

பிரதமை திதியானது முதல் சந்திர நாள் என்பதால் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். இந்த நாளில் பூஜைகள், அக்னி வேள்விகள், ஹோமங்கள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய தகுந்த நாள் ஆகும். கோமாதா வாங்கலாம், மற்றும் மதச் சடங்குகளையும் செய்யலாம். உபகரணங்களை பழுது பார்க்கலாம். பூமி பூஜை போடலாம். கல்வி சம்பந்தமான பணிகளை தொடங்கலாம். வளர்பிறை பிரதமை எதிர்பார்த்த பலனை கல்வியில் தரும். தேய்பிறை பிரதமை குறைவான பலனை தரும். குலதெய்வ கோவிலிற்கு சென்று மொட்டை போடலாம்.

பிரதமை திதியில் என்ன செய்ய கூடாது

பிரதமை திதியில் வெளியூர் பயணங்கள் மற்றும் புதிய செயல்கள் செய்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

பிரதமை திதிக்கான திதி சூன்ய ராசிகள்

பிரதமை திதிக்கான திதி சூன்ய ராசிகள் துலாம் மற்றும் மகரம் ஆகும்.

பிரதமை திதிக்கான தெய்வங்கள்

பிரதமை வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : குபேரன், பிரம்மா

பிரதமை தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : துர்கை, அக்னி

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அக்கரகாரம் மூலிகை மருத்துவ பயன்கள்

அக்கரகாரம் மூலிகை பயன்கள்

அக்கரகாரம் அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி கருமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. இந்த மூலிகை இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு கொண்டது. இதன் இலைகள் 15 செ.மீ. நீளமாகவும், முதலில் இளம்பச்சை நிறத்திலும்,...
கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக் ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான...

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம்

புனர்பூ தோஷம் என்றால் என்ன? புனர்பூ தோஷம் பரிகாரம்

புனர்பூ தோஷம் திருமணத்திற்கு மணப்பெண் மற்றும் மணமகன் ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக செவ்வாய்தோஷம் மற்றும் நாகதோஷம் பார்க்கபடுகிறது. இவ்வகையான தோஷங்களையெல்லாம் பார்க்கும் போது புனர்பூ தோஷம் இருக்கிறதா என யாரும் பார்க்க மாட்டார்கள்....
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...
ஜாதகத்தில் யோகங்கள்

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #6

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும், அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.