பௌர்ணமி திதி பலன்கள், பௌர்ணமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

பௌர்ணமி திதி

பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் பௌர்ணமி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆடி பௌர்ணமி, சித்திர பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை முக்கியமான பௌர்ணமி தினங்களாகும்.

பௌர்ணமி திதியின் சிறப்புகள்

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உயிர்ப்பு ஆற்றல் கிடைக்ககூடிய நாள் தான் பௌர்ணமி தினமாகும். பௌர்ணமி அன்று சந்திரனின் ஆற்றல் பல மடங்கு இருக்கும். சந்திரன் மனோகாரகன் ஆவார். அதாவது நமது மனதை ஆள்பவர். இந்நாளில் மனிதர்களின் மனநலம் பாதிக்கபட்டு பல குற்றங்கள், மற்றும் தவறுகள் நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை தவிர்க்க தான் இறை நினைப்போடு பௌர்ணமி தினங்களில் கிரிவலம் செய்ய சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

பௌர்ணமி திதி

பௌர்ணமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் எண்ணிய காரியங்களில் வெற்றி பெற கூடியவர்கள். புத்தி கூர்மை மிகுந்தவர்கள், பொறுமை உடையவர்கள், சத்தியம் தவறாதவர்கள், தயாள சிந்தனை உடையவர்கள், ஆயுள் அதிகம் கொண்டவர்கள், சொன்ன சொல்லை காபாற்றகூடியவர்கள், அழகிய உருவ அமைப்பை கொண்டவர்கள், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், திடமான மனநிலை கொண்டவர்கள், நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். பெற்ற தாய் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் பாயாசம் படைத்து வழிபட வேண்டும்.

பௌர்ணமி திதியில் என்னென்ன செய்யலாம்

பௌர்ணமி திதி என்பது சுமாரான சுபபலன் கொண்ட திதியாகும். இந்நாளில் தாலி கயிறை மாற்றலாம், ஆபரணங்கள் வாங்கலாம், வாகனங்கள் வாங்கலாம், தொழில் தொடங்கலாம், வெளியூர் செல்லலாம், பத்திரபதிவு போன்றவற்றை செய்யலாம்.

பௌர்ணமி திதியில் என்ன செய்ய கூடாது

பௌர்ணமி அன்று புதிய பொருட்களை வாங்குவது, புதிய செயல்களில் ஈடுபடுவது, விற்பது போன்றவற்றை செய்யகூடாது. கிரகபிரவேசம் செய்யகூடாது, மொட்டை அடிக்ககூடாது, வளைகாப்பு செய்யகூடாது, வரன் பார்க்க செல்லகூடாது,

பௌர்ணமி வழிபாடு

பௌர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. பராசக்தியை இந்நாளில் வழிபட்டு வந்தால் அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும்.

பௌர்ணமி திதிக்கான தெய்வங்கள்

பௌர்ணமி திதிக்கான தெய்வங்கள் : சிவன், மற்றும் பராசக்தி ஆவார்கள்.

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சரும வறட்சியை தடுக்க

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும் பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில்...

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ஆயில்யம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிதேவதை : ஆதிசேஷன் ஆயில்யம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...

Puzzles with Answers | Tamil Puthirgal | Brain games in Tamil | Brain Teasers...

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
செல்வம் பெருக

கணவன் வெளியே கிளம்பும் பொழுது இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

செல்வம் பெருக கணவன் வெளியே கிளம்பும் பொழுது  இதை செய்தால் போதும்  நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க தினந்தோறும் ஓடிக் கொண்டிருக்கிறோம். மாத சம்பளம் வாங்குபவர்கள் விட தினந்தோறும்...
brinjal uses in tamil

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள் | Brinjal Benefits in Tamil

கத்திரிக்காய் கத்தரிக்காய் செடியின் அறிவியல் பெயர் சொலனும் மெலோங்கெனா ஆகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற...
kanavil samiyay kandaal

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் கடவுள் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களை தாண்டி மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.