திருமணத்தில் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

திருமணத்தில் அட்சதைப் போடுவது ஏன்?

திருமணம், சீமந்தம், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, கிரகப்பிரவேசம் என எந்த மங்களகரமான நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரியவர்களின் ஆசி அட்சதை மூலமாகத்தான் நமக்கு கிடைக்கிறது. அட்சதையை தூவி ஆசீர்வதிக்கும் போது ஆசீர்வாதம் பெறுபவருக்கு அனைத்து விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அட்சதை போடுவது எதற்காக திருமணம் என்பது ஆணும், பெண்ணும் மட்டும் இணையும் விழா அல்ல. மணமகன் மற்றும் மணமகள் என இருவரின் குடும்பங்களும் சேர்ந்து இணைவதுதான் திருமணம். இருவருக்கும் அவர்களது பெற்றோரும், உறவினர்களும் அறிவுரைகளைக் கூறி அரவணைப்பது நல்ல உறவின் தொடக்கமாகும். பெரியவர்கள் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என குறிப்பிட காரணம் தம்பதிகள் இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்பதற்காக.

திருமணத்தில் வெற்றிலை, சந்தனம், மஞ்சள், நெல், உப்பு, மலர் ஆகிய மங்களப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அரிசியும், மஞ்சளும் கலந்தது தான் அட்சதை. இந்த அட்சதையை திருமணத்தில் மணமக்களை வாழ்த்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.

அட்சதை என்றால் என்ன?

திருமணங்களில் மணமக்களை வாழ்த்துவதற்காக பயன்படுத்தும் அட்சதையானது மிகவும் சக்தி நிறைந்தது. உதாரணமாக, அரிசியை சற்றுநேரம் கைகளில் வைத்திருந்தால், அந்த அரிசி உங்கள் உணர்வையும், சக்தியையும் கிரகித்துக் கொள்ளும் தன்மைக் கொண்டது. அதனால்தான் அரிசியை கைகளில் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று பெரியவர்கள் கூறினார்கள்.

atchadhai poduvadhu அத்தகைய சிறப்புகள் கொண்ட அரிசியுடன் மங்களத்தை அளிக்கக்கூடிய மஞ்சளைச் சேர்த்து மணமக்கள் மீது அட்சதையாகப் போடும்போது, அட்சதைப் போடுபவர்களின் மூலமாக நல்ல உணர்வுகள் மணமக்களை சென்றடைகிறது. இவ்வாறு அட்சதையால் ஆசீர்வதிக்கப்பட்டு செய்யப்படும், திருமணம் மற்றும் தொழில்கள், மற்றும் சுபகாரியங்கள் வெற்றி பெற்று, சகல நலன்களையும் அடையும்.

திருமண சடங்கில் வெற்றிலை, சந்தனம், மஞ்சள், மலர் ஆகிய மங்களப் பொருட்கள் பயன்படுத்தப்படுபட்டாலும் அரிசியும், மஞ்சளும் கலந்ததுதான் அட்சதை. மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதையானது மணமக்கள் பெரியவர்களின் வாழ்த்தை பெறவும், தீய சக்திகளிடம் இருந்து அவர்களை காத்து வளமான வாழ்க்கை அமைவதற்கு ஆசீர்வதிப்பதாகும்.

அட்சதை என்பது முனை முறியாத அரிசி ஆகும். அதே போல மங்களத்தை குறிப்பது மஞ்சள் ஆகும். அரிசியையும், மஞ்சளையும் இணைத்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவார்கள்.

அட்சதை தூவும்போது தவிர்க்க வேண்டியது

அட்சதையை நின்ற இடத்தில் இருந்து கொண்டே கும்பலோடு, கும்பலாக வீச கூடாது. மங்கள நிகழ்ச்சிகளில் அட்சதை தூவி ஆசி வழங்குவது எதற்காக எனில், மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவை வழங்கும் அரிசி போல், இந்த சமூகத்தில் அனைவருக்கும் உங்களால் நன்மை கிடைக்க வேண்டும் என்று கூறி வாழ்த்துவதற்காகத் தான் அவ்வாறு செய்யப்படுகிறது.

ஆனால் அதன் அர்த்தம் தெரியாமல் ஏதோ எல்லோருக்கும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று செய்கின்றனர். அதனால், இனி மங்கள நிகழ்ச்சி நடைபெறும் போது அட்சதை தூவுவதன் மூலம் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் கிடைக்கும். வாழ்த்து பெறுபவருக்கும் கிடைக்கும்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
தலப்பாகட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி

தலப்பாகட்டு மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ மட்டன் கறி – ½ கிலோ பெரிய வெங்காயம் – 3 ( பெரியது...
5ம் எண்ணின் குணநலன்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 5ம் எண் புதன் பகவானுக்குரிய எண்ணாகும். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். 5ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் இவர்கள் பின்னால் நடக்க போவதை முன்கூட்டியே...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.