நாடி பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

நாடி பொருத்தம் என்றால் என்ன?

நாடி பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும். ஆண், பெண் இருவருக்கும் நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து முடித்தால் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழலாம். இந்த பொருத்தம் மணமக்களுக்கு அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதி. இந்த நாடி பொருத்தம் மூலம் ஆண், பெண் இருவரின் ரத்த ஒற்றுமை எவ்வாறு உள்ளது என நட்சத்திரங்களை வைத்து கணக்கிடப்படுகிறது.

தற்போது பொருத்தம் பார்க்கும் போது பார்க்கப்படும் முக்கிய பொருத்தமாக நாடி பொருத்தம் உள்ளது. ஆண், மற்றும் பெண் இருவருக்குள்ளும் உள்ள ரத்த ஒற்றுமையை நாடி பொருத்தம் மூலம் அறியலாம். மருத்துவ வசதி பெரியளவில் இல்லாத அந்த காலங்களில் மனிதர்களின் நாடியை வைத்தே அவர் எந்த வகையான உடம்பை கொண்டவர் என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு உடலை நோய் நொடியில் இருந்து தங்களை பாதுகாத்து வந்தனர்.

நாடி பொருத்தம் என்றால் என்ன

நாடி பொருத்தம் எவ்வாறு பார்ப்பது?

நட்சத்திரங்களை வைத்து ஒருவர் எந்தவிதமான் நாடி கொண்டவர் என்பதை அறியலாம். அதனால் ஆண், பெண் நட்சத்திரங்களை நாடி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே நாடியாக இருந்தால் பொருத்தம் கிடையாது. ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறு நாடியாக இருந்தால் இந்த பொருத்தம் உண்டு.

பொதுவாக நாடி மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சூடு உடம்பிற்கு சூடு உடம்பு கொண்ட நட்சத்திரத்தை இணைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படலாம்.

நாடி பொருத்தத்தின் வகைகள்

பார்சுவ எனப்படும் வாத நாடி:

காற்று மற்றும் நிலம் தொடர்பு கொண்ட நாடி இது. அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகியவை வாத நாடி உள்ள நட்சத்திரங்களாகும்.

மத்தியா நாடி எனப்படும் பித்த நாடி:

நெருப்புத் தன்மை அதாவது உடல் சூடு தொடர்பு கொண்ட நாடி. பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி ஆகியவை பித்த நாடி உள்ள நட்சத்திரங்களாகும்.

சமான நாடி அதாவது சிலேத்தும(நீர்ம) நாடி:

நீர் தொடர்பு கொண்ட நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி ஆகியவை சிலோத்தும நாடி நட்சத்திரங்களாகும்.

கணவன், மற்றும் மனைவி இடையே குடும்ப வாழ்க்கை காரணமாக உடலில் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இந்த நாடி பொருத்தம் அவசியம் தேவை. உடம்பில் உள்ள சத்துக்கள், ரத்தம், சூடு, குளிர்ச்சி, போன்ற விஷயங்களை கொண்ட பொருத்தம் என்பதால் இது அவசியம் பார்க்க வேண்டும். இந்த நாடி பொருத்தம் நமது முன்னோர்கள் திருமண பொருத்தம் பார்க்கும் பார்த்த மிக முக்கிய பொருத்தமாகும். இது முதல் 10 பொருத்ததில் வராமல் இருந்தாலும் இதை பார்க்க வேண்டியது அவசியம்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பெண் கை மச்ச பலன்கள்

பெண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கை மச்ச பலன்கள் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடத்தை வைத்து பலவகையான பலன்கள் சொல்லபட்டுள்ளது. மச்சம் தோன்றும் இடத்தை பொருத்து நல்ல பலன் மற்றும் தீய பலன் போன்றவை ஏற்படுகின்றன. அந்த...
நட்சத்திரங்களும் கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும் அஸ்வினி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் மற்றும் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். பரணி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்...
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூசம் நட்சத்திரத்தின் இராசி : கடகம் பூசம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி பூசம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சந்திரன் பூசம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை -: சூரியன் பூசம் நட்சத்திரத்தின் பரிகார...
மகர ராசி

மகர ராசி பொது பலன்கள் – மகர ராசி குணங்கள்

மகர ராசி குணங்கள் மகர ராசியின் ராசி அதிபதி சனி பகவான் ஆவார். உத்திராடம் நட்சத்திரத்தின் 2, 3, 4 ஆம் பாதங்களும், திருவோணம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், அவிட்டம் நட்சத்திரத்தின் 1, 2...
அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக் ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.