செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது? செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கபடும் ஒன்று செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு திருமணம் தாமதமாக நடைபெறும், அல்லது திருமணம் நடைபெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும். ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது.

செவ்வாய் தோஷ பரிகாரகங்கள்

செவ்வாய் தோஷம் எவ்வாறு ஏற்படுகிறது?

முற்பிறவியில் செய்த பாவங்கள் மற்றும் வாழ்க்கை துணையை கொடுமை படுத்துபவர்களுக்கு செவ்வாய் தோஷம் ஏற்படும் என கூறப்படுகிறது.

செவ்வாய் தோஷத்தால் உண்டாகும் பிரச்சனைகள்

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லாத மணவாழ்க்கை, சந்தேக குணம், பிரிவு, குழந்தையின்மை, மாங்கல்ய பலமில்லாமல் இருப்பது, சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை குறைவு, பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறி, ஆயுள் பலமின்மை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் என்பது ஜோதிட நம்பிக்கை ஆகும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் திருமணம்

செவ்வாய் இரத்ததுக்கு அதிபதியாவார். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்று அதிக உணர்ச்சி இருக்கும். அந்த உணர்ச்சியானது சிலருக்கு கோபமாகவும், சிலருக்கு வேகமாகவும், ஒரு சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக விருப்பம் இருக்கும். ஆனால் செவ்வாய் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் ஆர்வம் குறையும்.

தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அதே போல செவ்வாய் தோஷம் கொண்ட ஜாதகம் கொண்ட ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்கின்றனர் பெரியோர்கள்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம்

செவ்வாய் உள்ளவர்கள் ஆணோ, பெண்ணோ இருவரும் அதே போன்ற செவ்வாய் தோஷம் உள்ள வரனையே மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து இன்னொருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்றால் வாழ்க்கை துணையை பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்படும் அல்லது துணையின் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

செவ்வாய் தோஷத்திற்கான விதிவிலக்குகள்

1. மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
2. குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷமில்லை.
3. சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
4. 2 ஆம் இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் செவ்வாய் தோஷமில்லை.
5. 4 ஆம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.
6. 7 ஆம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.
7. 8 ஆம் இடம் தனுசு, மீனம் இருந்தால் தோஷமில்லை.

மேலும் விரிவான செவ்வாய் தோஷ விதிவிலக்குகளை இங்கே கிளிக் செய்வதன் மூலம் அறியலாம்.

செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் முறையான பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலம் செவ்வாய் தோஷத்தின் கடுமையை குறைக்கலாம்.

செவ்வாய் தோஷம்

1. செவ்வாய் கிழமைகளில் முருகன் மற்றும் முருகனின் அம்சம் கொண்ட அங்காரகனையும் சன்னதியில் வழிபட்டு வந்தால் செவ்வாயின் தோஷத்தின் தாக்கம் குறையும்.

2. முருகனுக்கு சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் செவ்வாய் தோஷம் விரைவில் விலகும்.

3.. செவ்வாய் கிழமை வரும் சதுர்த்தி நாளில் கணபதிக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்து வந்தால் நல்லது நடக்கும். இவ்வாறு 41 செவ்வாய்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்.

4. செவ்வாய்க்கிழமை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் துவரை தானம் செய்து வந்தால் செவ்வாயின் தோஷத்தின் கடுமை குறையும்.

5. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் காயத்ரீ மந்திரம், தியான மந்திரம், சூரிய கவசம் போன்றவற்றை துதித்து கடவுளை மனமுருகி வழிபட்டு சொல்லி வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.

6. செவ்வாய் தோஷக்காரர்கள் சிவப்பு கல் பதித்த தங்க மோதிரத்தை மோதிர விரலில் அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் செவ்வாயின் கடுமை குறையும்.

7. நவகிரகங்கள் உள்ள ஆலயங்களில் செவ்வாய் கிரகத்துக்கு 27 செவ்வாய் கிழமைகள் நெய் விளக்கு போட்டு வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.

நவகிரக செவ்வாய்க்கு பிறந்ததேதி அல்லது கிழமைகளில் அர்ச்சனைச் செய்வதால் நன்மை உண்டாகும். இதுபோன்ற பரிகாரங்கள் செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள்

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு சீர்காழியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு வாய்ந்த பரிகார தலமாக விளங்குகிறது.

நவகிரக தோஷம் விலக

மேலும்

1. சுப்ரமணியசுவாமி, சென்னிமலை, ஈரோடு.
2. சங்கமேஸ்வரர், பவானி, ஈரோடு.
3. கந்தசுவாமி, திருப்போரூர், காஞ்சிபுரம்.
4. மலையாள தேவி துர்காபகவதி அம்மன், நவகரை, கோயம்புத்தூர்.
5. அமிர்தகடேஸ்வரர், மேலக்கடம்பூர், கடலூர்.
6. அருணஜடேசுவரர், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.
7. கைலாசநாதர், கோடகநல்லூர், திருநெல்வேலி.
8. வீரபத்திரர், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்.
9. கல்யாண கந்தசுவாமி, மடிப்பாக்கம், சென்னை.
10. அகஸ்தீஸ்வரர், வில்லிவாக்கம், சென்னை.
11. தேனுபுரீஸ்வரர், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்.
12. அகோர வீரபத்திரர், வீராவாடி, திருவாரூர்.
13. பிரளயநாதசுவாமி, சோழவந்தான், மதுரை.
14. விருத்தபுரீஸ்வரர், திருப்புனவாசல், புதுக்கோட்டை.
15. சுப்பிரமணியர் காங்கேயன், காங்கேயநல்லூர், வேலூர்.
16. ஏழுமலையான், திருப்பதி, ஆந்திரா

போன்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டு செவ்வாய் தோஷம் விலகி வளமோடு வாழலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு...

Riddles with Answers | Puzzles and vidukathaigal

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
tamil vidukadhaigal

Riddles with Answers | Vidukathaigal and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் விடுகதைகள்   இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...
சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...
potato uses in tamil

உடலை உறுதியாக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படுத்தபடும், ஒருவகைக் கிழங்கு வகையாகும். உருளைக்கிழங்கு தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம்...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.