கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் கற்றது கள்ளவு கல்லாதது உலகளவு என்ற தெளிவு உடையவர். கடவுளை மட்டுமே பெரிதென மதிப்பர். இவர்கள் எதையும் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பவர்கள். கொள்கையை விட்டுக் காரியத்தை சாதிக்க மாட்டார்கள்.

கார்த்திகையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் அனுபவங்களைக் அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை சிறந்த முறையில் வகுத்துக் கொள்ளும் திறமை உடையவர்கள். அறிவில் சிறந்த இவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். இரக்க குணமுடைய இவர்கள் கண்ணியமானவர்கள். இவர்கள் யாரிடமும் அதிகம் பழக மாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டம் மிக குறைவு. ஆனால் இவர்கள் எதிரிகளைத் தன் வசமாக்கிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள்.

இவர்கள் ஒரு செயலில் இறங்கி விட்டால் அந்த செயலை எப்பாடுபட்டாவது சிறப்பாக செய்து முடித்தே தீருவார்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே பல வேதனைகள் மற்றும் சோதனைகளை சந்திப்பார்கள். அதனால் இம்மாதத்தில் பிறந்தவர்கள் இளமையிலேயே முதிர்ந்த அனுபவத்தை பெற்றிருப்பார்கள். கடவுளின்மீது அதிக பற்று கொண்டிருப்பார்கள். சகிப்புத் தன்மை அதிகம் கொண்ட இவர்கள் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை விரைவாக எட்டுவார்கள்.

இம்மாதத்தில் பிறந்தவர்கள், எந்த ஒரு காரியத்தையும் சாமர்த்தியமாக எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் சரி, தன்னுடைய குறிக்கோளை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் மற்றவர்களிடத்தில் உள்ள குறைகளையும், குற்றங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கூறிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.

கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள், தன்னை பற்றிப் புறம் பேசுபவர்களையும், தனக்கு தீங்கு விளைவிக்க முயன்றவர்களையும் தகுந்த நேரம் பார்த்து பழிக்குப் பழி வாங்கும் குணத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் இம்மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் போக்குவதில் சுயநலமாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

இந்த மாதத்தில் பிறந்த பெண்களின் வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். இவர்கள் ஒரு குழந்தையை போல மற்றவர்களிடம் பழகுவார்கள். இம்மாதத்தில் பிறந்த பெண்கள் பெரியவர்களிடம் மரியாதையுடனும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள். மேலும் தானம், தர்மம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் சகல பாக்கியங்களையும் வாழ்க்கையில் பெறுவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

elumbu theimnaththai sari seyyum unavugal

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் உணவுகள்

எலும்பு தேய்மானம் எலும்புகள் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எலும்புகள் நல்ல வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனிதர்களுக்கு வயது மூப்பு ஏற்படும்போது...
பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா செய்வது எப்படி

பாதாம் அல்வா தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு – 1 கப் சர்க்கரை – ¾ கப் நெய் – ¼ கப் தண்ணீர் – சிரிதளவு செய்முறை பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி...
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சூரியன் மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன் மகம் நட்சத்திரத்தின் பரிகார...
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை

வெறும் வயிற்றில் எந்த உணவை சாப்பிடுவது நல்லது

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவுகள்  உடல் ஆரோக்கியத்தில் காலை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே நமக்கு கிடைக்கிறது. அன்றைய நாள் முழுவதும்...
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம் சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் சித்திரை 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி மற்றும் அதிபதி - கன்னி :...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
tamil puzzles with answers

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.