இராகு கேது தோஷம் என்றால் என்ன? இராகு கேது தோஷ பரிகாரங்கள்

இராகு கேது தோஷம்

ராகு மற்றும் கேது ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என கூறப்படுகின்றன. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறதோ, அந்த கிரகத்தின் குணத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை ஆகும். ராகு மற்றும் கேது நல்ல கிரகங்களுடன் இருந்தால் நல்ல பலனையும், தீய கிரகங்களுடன் இருந்தால் தீய பலனையும் அளிக்கும் குணமுடையவை ஆகும்.

நாக தோஷம் நீங்க

ராகு – கேது தோஷம் ஏன் ஏற்படுகிறது?

வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் தலைமுறைக்கு இராகு கேது தோஷம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறாமல் தள்ளி போகிறது. மேலும் களத்திர ஸ்தானத்தில் ராகு ஜென்மத்தில் கேதுவாக மாறி கெடுதலைச் செய்கிறது. கோவில் இடங்களை ஆக்கிரமித்து ஆண்டவனின் கோபத்திற்கு ஆளானால் இந்த தோஷம் ஏற்படலாம்.

குடும்பங்களை பிரித்து வயதானவர்களிடம் சாபம் வாங்கினால் சாபம் நிறைவேற குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து இல்வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் இந்த இராகு கேது கெடுக்கும். சகோதரர்களை மதிக்காமலும், உண்மை பாசத்தை உதறித்தள்ளி கைவிட்டாலோ அல்லது அவர்களை ஏமாற்றினாலோ அவர்கள் கொடுத்த சாபம் காரணமாக ஒருவருக்கு 3வது வீட்டில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமான 9-ம் வீட்டில் கேதுவும் இருக்கும்.

சர்ப்ப தோஷங்களின் வகைகள்

இராகு கேது தோஷம் என்ன செய்யும்

ஒருவரது ஜாதகத்தில் ராகு – கேது தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். தொழிலில் முடக்கம் ஏற்படும். உடல் பல நோய்களால் பாதிக்கபடும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்படும்.

ராகு கேது தோஷ பரிகாரங்கள்

ராகு மற்றும் கேது தோஷத்திற்கு பொதுவான பரிகாரமாக தோஷத்தின் வீரியம் குறைய, பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ராகு மற்றும் கேது எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்துகொள்வதும் நல்லது.

நவகிரக தோஷ பரிகாரகங்கள்

சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் தினங்களில், அருகில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால், ராகு கேதுவின் வீரியம் குறையும். பாம்பை அடித்துக் கொன்றவர்கள், பாம்புப் புற்றை இடித்தவர்கள் இந்த தோஷத்தின் பிடியில் இருப்பார்கள். அவர்கள் ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது அல்லது நாகர் சிலைக்கு பால் அபிஷேகம், மஞ்சள் காப்பிட்டு வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.

கேது பகவான் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு என்று தனி கோவில் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.

பாம்பு புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோவில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம். நவகிரகத்தில் உள்ள ராகு கேதுவுக்கும் விளக்கேற்றலாம். சிவன் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும். பெருமாள் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகுகாலத்திலும் வணங்குவது நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும். தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடலாம். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும். பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம். பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.

ராகு – கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்

செவ்வாய் திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். ராகு திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். சந்திரதிசையில் ராகு புத்தி, ராகு அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். குரு திசையில், கேது புத்தி ராகு புத்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்.

நாக தோஷ பரிகார தலங்கள்

சூரிய திசையில், எந்த புத்தி நடந்தாலும், அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். சனி திசையில் ராகு, கேது புத்தி-சூரிய புத்தியில் ராகு, கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். கேது திசையில் சந்திர புத்தி, சூரிய புத்தி, புதன் புத்தியில் ராகு-கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம். புதன் திசையில் சந்திர – புத்தி, ராகு – கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்.

ராகு கேது தோஷ பரிகார ஸ்தலங்கள்

1. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும்.
2. கும்பகோணம் அருகே உள்ள கீழ்பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும்.
3. சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகு மற்றும் கேதுகென்று சிறப்பான பரிகாரங்கள் செய்யபடுகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
துருதுருவென இருக்கும் குழந்தைகளுக்கு

குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகள்

குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கவும், அவர்கள் அனைத்திலும் சிறப்பாக கவனம் செலுத்தவும்,  சரியான சீரான உணவு அவசியமாகிறது. குறிப்பாக துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கும்  குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குழந்தையின் அறிவாற்றல் மற்றும்...
பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு மேற்கொள்வது

பாம்பு கடிக்கான முதலுதவி அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் காடுகளை அழித்து வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகிறோம். காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள விலங்குகள், பூச்சிகள்,...
ஆவாரம் பூ மருத்துவ நன்மைகள்

அற்புத பலன்களை அள்ளி வழங்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூ ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல்...
ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி

ஆட்டுக்கால் சூப் வைப்பது எப்படி

ஆட்டுக்கால் சூப் தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் - 4 தனியா தூள் – 2 ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் சீரகத் தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் –...
மூட்டு வலிக்கான தீர்வு

மூட்டு வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

மூட்டு வலி பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது. மூட்டுகளில் வலி...

தித்திக்கும் கோவில் சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் பாகு வெல்லம் – 1 கப் பாசி பருப்பு – ¼ கப் நெய் – 100 கிராம் ஏலக்காய் – சிறிதளவு ...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.