தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்

தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம். அதிரசம் செய்வதற்கு முக்கியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது பாகுபதம் சரியாக இருக்கிறதா என்பது தான். அது தேர்ந்து விட்டால் அதிரசம் செய்வது மிகவும் சுலபம்.                          சுலபமாக வீட்டிலேயே அதிரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

அதிரசம் செய்முறை

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 2
நல்லெண்ணெய் – சிறிதளவு

செய்முறை

  1. அதிரசம் செய்ய முதலில் ஒரு கப் பச்சரிசியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த பச்சரிசியை நன்கு கழுவி 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. 3 மணி நேரம் அரிசி நன்கு ஊறிய பிறகு அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் பொட்டு காய வைக்கவும்.
  4. அரிசி முழுவதுமாக காயாமல் சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போதே எடுத்து ஒரு மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  5. பின்னர் வெல்லப்பாகு தயார் செய்ய  3/4 கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்குகாய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
  6. அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் கொஞ்சம்  ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.
  7. பச்சரிசி மாவில் தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகினை சேர்க்கவும்.
  8. வெல்லப்பாகு சூடாக இருக்கும்போதே மாவில் சேர்க்க வேண்டும்.
  9. வெல்லபாகு சேர்த்த பின் நன்கு கட்டிகள் இல்லதவாறு கலந்து கொள்ளவும்.
  10. தொடர்ந்து மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே மூடி வைக்கவும்.
  11. மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும்.
  12. அதிரச மாவை வட்டமாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  13. அதிரசத்தை எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கும் போது, அடுப்பபை மிதமான சூட்டில் வைக்கவும். அப்போதுதான் அவை நன்கு வெந்து இருக்கும்.
  14. அதிரசத்தை எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதன் மேல் ஒரு கரண்டியை வைத்து அழுத்தி எண்ணெய்யை வடித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வைகாசியில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் பன்னிரண்டு மாதங்களில் இரண்டாவதாக வரும் தமிழ் மாதம் வைகாசியாகும். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என...
ஜோதிடத்தில் யோகங்கள்

யோகங்கள் என்றால் என்ன? பலவகையான ஜாதக யோகங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
கனவில் பூச்சிகளை கண்டால்

பூச்சிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பூச்சிகள் கனவில் வந்தால் கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம்...

ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா செய்வது எப்படி

சிக்கன் சால்னா செய்வது எப்படி ஹோட்டல் சுவையில் சிக்கன் சால்னா மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்பதை பின் வருமாறு காணலாம். வீட்டிலேயே எப்படி செய்வது தேவையான பொருட்கள் கோழிக்கறி - ½ கிலோ ...
தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காய் மருத்துவ குணங்கள்

தான்றிக்காய் தான்றி என்பது ஒரு மர இனமாகும். இது மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்கிறது. மார்ச்...
பிரண்டை மருத்துவ பயன்கள்

பிரண்டை மருத்துவ குணங்கள்

பிரண்டை பிரண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் ஒரு தாவர வகையாகும். இது கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இது பொதுவாக வெப்பம் அதிகமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது. இது இந்தியா மற்றும் இலங்கை...
கனப்பொருத்தம் என்றால் என்ன

கணப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

கணப் பொருத்தம் என்றால் என்ன? உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் வைத்தான் இறைவன். மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே விதமான குணங்கள் இருப்பதில்லை. அந்த குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.