தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்

தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம். அதிரசம் செய்வதற்கு முக்கியமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது பாகுபதம் சரியாக இருக்கிறதா என்பது தான். அது தேர்ந்து விட்டால் அதிரசம் செய்வது மிகவும் சுலபம்.                          சுலபமாக வீட்டிலேயே அதிரசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

அதிரசம் செய்முறை

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 2
நல்லெண்ணெய் – சிறிதளவு

செய்முறை

  1. அதிரசம் செய்ய முதலில் ஒரு கப் பச்சரிசியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த பச்சரிசியை நன்கு கழுவி 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
  3. 3 மணி நேரம் அரிசி நன்கு ஊறிய பிறகு அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு ஒரு துணியில் பொட்டு காய வைக்கவும்.
  4. அரிசி முழுவதுமாக காயாமல் சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போதே எடுத்து ஒரு மிக்சியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  5. பின்னர் வெல்லப்பாகு தயார் செய்ய  3/4 கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்குகாய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
  6. அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் கொஞ்சம்  ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.
  7. பச்சரிசி மாவில் தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகினை சேர்க்கவும்.
  8. வெல்லப்பாகு சூடாக இருக்கும்போதே மாவில் சேர்க்க வேண்டும்.
  9. வெல்லபாகு சேர்த்த பின் நன்கு கட்டிகள் இல்லதவாறு கலந்து கொள்ளவும்.
  10. தொடர்ந்து மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே மூடி வைக்கவும்.
  11. மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும்.
  12. அதிரச மாவை வட்டமாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  13. அதிரசத்தை எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கும் போது, அடுப்பபை மிதமான சூட்டில் வைக்கவும். அப்போதுதான் அவை நன்கு வெந்து இருக்கும்.
  14. அதிரசத்தை எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதன் மேல் ஒரு கரண்டியை வைத்து அழுத்தி எண்ணெய்யை வடித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

வைகாசியில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் பன்னிரண்டு மாதங்களில் இரண்டாவதாக வரும் தமிழ் மாதம் வைகாசியாகும். சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என...
ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
சாப்பிடும் முறை

சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?

சாப்பிடும் போது எந்த திசையை நோக்கி சாப்பிட வேண்டும்? அன்றாட பழக்கவழக்கங்களில் நம் முன்னோர்கள் பல சாஸ்திரங்கள் கூறியிருப்பதை இன்றும் நாம் கடைபிடித்து வருகிறோம். நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு. அதுமட்டுமின்றி...
பல்வேறு திருமண சடங்குகள்

பல்வேறு விதமான திருமண சடங்குகள்

திருமண சடங்குகள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இரு மனங்கள் இணைவது திருமணமாகும். திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் அத்தியாவசியமான ஒன்றாகும். திருமணம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.