சில்லி சிக்கன் வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி

சில்லி சிக்கன்

அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனை வித விதமாக சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவார்கள். தற்போதைய நவீன உலகில் வித விதமான சிக்கன் உணவுகள் விரைவாகவும், எளிதாவும் தயார் செய்யபடுகிறது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் சைனீஸ் வகை உணவான சில்லி சிக்கன். இந்த சில்லி சிக்கனை வீட்டிலேயே எவ்வாறு எளிதாக தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

சில்லி சிக்கன் வீட்டில் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழி கறி – 1/2 கிலோ (எலும்பில்லாதது)
2. சோள மாவு – 50 கிராம்
3. இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
4. மிளகாய் தூள் – 2 மேஜைக்கரண்டி
5. அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி
6. முட்டை – 2
7. தயிர் – 1 மேஜைக்கரண்டி
8. உப்பு – தேவையான அளவு
9. எண்ணெய் – தேவையான அளவு
10. எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
11. வெங்காயம் – 1
12. குடைமிளகாய் – சிறிதளவு
13. தக்காளி சாஸ் – சிறிதளவு
14. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

1. முதலில் கோழிகறியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

2. சோள மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், அரிசி மாவு, முட்டை, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

3. பிசைந்து வைத்துள்ள மாவு கலவையுடன் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. பிறகு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வெந்தவுடன் தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

5. மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

6. பின்பு அதனுடன் குடை மிளகாயை போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

7. இதனுடன் பொரித்து வைத்த கோழிகறியை போட்டு இரண்டு நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும்.

8. பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மசாலாக்கள், உப்பு, தக்காளி சாஸ் போட்டு கிளறி கொள்ளவும்.

9. பின்பு இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கிளறி கொள்ளவும்.

10. பின்பு இதனுடன் கறிவேப்பிலை தூவி பரிமாறினால் சுவையான சில்லி சிக்கன் தயார்.

அதனுடன் வெங்காயம், மிளகு தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுவையான சில்லி சிக்கன் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி...
மனிதர்கள் பற்றிய கனவு

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

பலவகையான மனிதர்கள் கனவில் வந்தால் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான கனவுகளை காண்கின்றனர். ஆனால் அந்த கனவுக்கான அர்த்தம் தெரியாமல் பல்வேறு குழப்பத்துக்கு ஆளாகின்றனர். அந்த...
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...
ஆவாரம் பூ மருத்துவ நன்மைகள்

அற்புத பலன்களை அள்ளி வழங்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூ ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.