அற்புத பலன்களை அள்ளி வழங்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூ

ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன்படுகிறது. ஆவாரையின் முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.

ஆவாரம் பூ மருத்துவ நன்மைகள்

ஆவாரை பூ நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு மிக சிறந்த  மருந்தாக மருத்துவத்தில் பயன்படுகிறது. ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ?” என்பது மிக பிரபலமான சித்த மருத்துவப் பழமொழியாகும். ஏனெனில் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டது ஆவாரம்.

ஆவாரையின் வேறு பெயர்கள்

ஆவாரையானது தலபோடம், ஆகுளி, ஆவீரை, மேகாரி, ஏமபுட்பி, போன்ற பெயர்களாலும் அழைக்கபடுகிறது. இதன் வேர், இலை, பூ, பட்டை, விதை என அனைத்தும் மருத்துவ பயன்பாடு கொண்டது.

ஆவாரம் பூவின் மருத்துவப் பயன்கள்

நரம்பு தளர்ச்சி நீங்கும்

ஆவாரம் பூக்களையும், இலையையும் காய வைத்து பொடி செய்து, காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தம் அடையும். ஈரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும். நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெறும்.

நீரிழவு நோய் குணமாகிறது

இன்றைய காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய பேருக்கு நீரிழவு நோய் ஏற்படுகிறது. தொடக்க நிலையில் இருக்கும் நீரிழிவு பிரச்சனை முழுமையாக குணமாவதற்கு ஆவாரையின் விதைகள் பயன்படுகிறது.

இரத்தம் சுத்தமாகும்

ஆவாரம் பூ, இலை, பட்டை, காய், பிசின் ஆகிய ஐந்தையும் காய வைத்துப் பொடித்து சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துக்கு ஆவாரை பஞ்சகம் என்று பெயர். இந்தப் ஆவார பஞ்சக பொடியை தினமும் இரண்டு வேளை, இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.

சீதபேதி குணமாகும்

ஆவாரம் வேரைச் சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து 50 மில்லி அளவு சாப்பிட்டால் சீதபேதி உடனே குணமாகும். மேலும் ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து உண்டு வந்தால் உடல் பலமடையும்.

சருமம் பிரகாசமடையும்

சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போன்ற தோற்றம் உண்டாகும். அவ்வாறானவர்கள் ஆவாரம் பட்டை கஷாயம் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்படைந்து முதுமை தோற்றம் ஏற்படாது.

மதுவை மறக்க செய்யும்

இன்றைய இளைஞர்கள் முதல் வயதான பெரியோர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். அவர்கள் மதுவை மறக்க முயற்சித்தாலும் அவர்காளால் முடியாமல் ஒரு கட்டத்தில் மதுவை மீண்டும் தொடுகின்றனர். அவ்வாறானவர்கள் ஆவாரம் பட்டை பொடி 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மது மீதான மோகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், தாகம் போன்றவை குணமாகும்.

ஆவாரம் பூ பயன்கள்

சீறுநீரக கோளாறுகளை சரிசெய்கிறது

ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி, கண், மூலம், நாள்பட்ட புண்கள், சிறுநீரகக் கோளாறுகள், வெள்ளை வேட்டை நோய்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

தோல் வெடிப்பு குணமாகும்

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணை போன்றவைகளை சேர்த்து ஆவாரைத் தைலம் காய்ச்சி, அதை தோலில் தடவி வந்தால் தோல் வெடிப்பு, வறட்சி, எரிச்சல் போன்றவை குணமாகும்.

குழந்தை பேறு உண்டாகும்

பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை பாக்கியம் இ‌ல்லாத பெ‌ண்க‌ள் ஆவாரை பய‌ன்படுத்தலாம். கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து சாப்பிட்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு இருந்த மல‌ட்டு‌த் த‌ன்மை நீங்கி விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் தரிக்கும் நிலை உண்டாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இலந்தை பழம் மருத்துவ நன்மைகள்

இலந்தை பழம் மருத்துவ பயன்கள்

இலந்தை பழம் இலந்தை பழம் சீனாவை தாயகமாக கொண்டது. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு...
இறால் கிரேவி செய்முறை

இறால் கிரேவி செய்வது எப்படி

இறால் கிரேவி செய்வது எப்படி இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை தாரளமாக சாப்பிடலாம்....
காரடையான் நோன்பு விரத முறை

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு  காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும். மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி...
brain games in tamil

Puthirgal with Answers | Vidukathaigal | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...
காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal) இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.