தான்றிக்காய் மருத்துவ குணங்கள்

தான்றிக்காய்

தான்றி என்பது ஒரு மர இனமாகும். இது மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இது இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் வளர்கிறது. மார்ச் முதல் மே வரையிலான கால கட்டத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். பின்னர் உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் தோன்றும். பின்பு அது சாம்பல் நிற பழங்களாக மாறிவிடும். இப்பழம் மூலத்தைக் குணமாக்கும். சளி, வயிற்றுப்போக்கு முதலானவற்றை  கட்டுப்படுத்தும்.

தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்பும் கொண்ட சுவை கொண்டது. செரிமானத்தின் போது இனிப்பு சுவை கொண்டதாக மாறும். உஷ்ண குணம் கொண்டது. தொடும்போது குளிர்ச்சியாக இருக்கும். கப பித்தங்களை தணிக்கும், மலத்தை வெளியேற்றும், கண்களுக்கு இதம் அளிக்கும், மற்றும் தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதன் விதைகளில் உள்ள பருப்பு மயக்கத்தை உண்டாக்கும். இதன் காயில் 17% டேனின் உள்ளது. இதில் 25 % மஞ்சள் நிறமுள்ள எண்ணெய், மேலும் மாவுப் பொருள், சைபோனின் போன்றவை உள்ளன.

தான்றிக்காயின் வணிக பயன்கள்

தான்றிக்காயின் மரக்கட்டைகள் ஈரத்தைத் தாங்கக்கூடிய தன்மை கொண்டவை. இது படகுகள், வேளாண் கருவிகள் செய்யப் பயன்படுகின்றன. இந்த மரத்தின் பட்டைகள் துணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு சாயமேற்றப் பயன்படுகிறது.

தான்றிக்காயின் வேறு பெயர்கள்

தான்றிக்காய்க்கு அமுதம், அக்காத்தான், அம்பலத்தி, ஆராமம், எரிகட்பலம், கந்துகன், அக்ஷம், அக்கந்தம்,கலித்துருமம், சதகம், தாபமாரி, வாந்தியம், வித்தியம், விபீதகம், கந்தகட்பலம், தானிக்காய் போன்ற பல பெயர்கள் உள்ளன. காய், கனி, இலை, விதை என இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவ பயன்பாடு கொண்டவை.

தான்றிக்காயின் மருத்துவப் பயன்கள்

காயகல்பம்

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் போன்றவை சேர்ந்தது தான் திரிபலா சூரணமாகும். தான்றிக்காய் திரிபலா சூரணத்தில் ஒன்றாகும். திரிபலா சூரண கலவையை தொடர்ந்து 48 நாட்ள் எடுத்துக்கொண்டால் உடல் இரும்பு போல உறுதியாகி நோயில்லா நீண்ட வாழ்வை அளிக்கும்.

தொண்டை பிரச்சனைகளை தீர்க்கும்

தான்றிக்காயானது தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.

வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும்

வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க தான்றிக்காயின் பழங்கள் உதவுகிறது.

மாரடைப்பை தடுக்கும்

தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு விரைவில் குணமாகும். மேலும் பல்வலி, சிலந்தி கடியால் ஏற்பட்ட நஞ்சு, இரைப்பு பிரச்சனைகள் நீங்கி உடல் வலிமை பெற உதவுகிறது.

உடலை உறுதியாக்கும்

தான்றிக்காய், நிலப்பனைகிழங்கு, பூனைக்காலி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மைய அரைத்து, அதில் ஐந்து கிராம் அளவு எடுத்து காலை மாலை என  இருவேளையும் பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரும்பு போல உடல் உறுதியடையும்.

பார்வை திறன் மேம்படும்

கொஞ்சம் வயதானாலே ஒரு சிலருக்கு பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் தலை தூக்கும். அவ்வாறானவர்கள் தான்றிக் காயை தினம் உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

வலி நிவாரணி

தான்றிக் காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயானது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தைலமாகவும், கை, கால் மூட்டு வலித் தைலமாகவும் பயன்படுகிறது.

பல வகை நோய்களை தீர்க்கும்

தான்றிக் காயின் சதைப் பகுதியானது மூல நோய், கை கால் வீக்கம், கண் நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும். தான்றிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மற்றும் வறட்டு இருமல், மற்றும் அம்மை நோய் குணமாகும்.

புண்களை ஆற்றும்

தான்றிக்காய் பருப்பைத் தூள் செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து புண், ரணங்கள் மேல் பூசி வந்தால் புண்கள் ஆறும். தான்றிக்காயை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இரைப்பைக்கு அது பலத்தைக் கொடுக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் பிரைடு ரைஸ் செய்முறை

சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டில் செய்வது எப்படி

சிக்கன் பிரைடு ரைஸ் சைனீஸ் உணவு வகைகள் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை மற்றும் ருசி மிகுந்தவை. இதற்கு உதாரணம் நம் ஊரில் தெருக்கு தெரு இருக்கும் துரித உணவு கடைகள் தான். அந்த வகையில்...
சிக்கன் சுக்கா செய்யும் முறை

சிக்கன் சுக்கா வறுவல் செய்வது இவ்வளவு சுலபமா

சிக்கன் சுக்கா வறுவல் சிக்கனின் சுவையே அலாதிதான். அதிலும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள் சிக்கன் பிரியர்கள். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது காரசாரமான சிக்கன் சுக்கா வறுவல்,...

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுக்கால் – 4 கால்கள் கத்திரிக்காய் - 4 புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப் ...

Riddles with Answers | Brain Teasers and Puzzles | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக் ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான...
திரயோதசி திதி

திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை

திரயோதசி திதி திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை...
chickken chappathi roll

சிக்கன் ரோல் செய்வது எப்படி

சிக்கன் ரோல் சிக்கனை பயன்படுத்தி ஒரு அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி சிக்கன் ரோல் சுலபமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சிக்கன் – ¼  கிலோ இஞ்சி பூண்டு விழுது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.