திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை

திரயோதசி திதி

திரயோதச என்றால் பதின்மூன்று என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 13 வது நாள் திரயோதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரயோதசியை சுக்கில பட்ச திரயோதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் திரயோதசி தினம் கிருஷ்ண பட்ச திரயோதசி என்றும் அழைக்கபடுகிறது.

திரயோதசி திதி

திரயோதசி திதியின் சிறப்புகள்

தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி திதி ‘தந்தேரஸ்’ என்று அழைக்கபட்டு வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது தன்வந்திரி திரயோதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு செல்வத்தை அள்ளித்தரும் திரயோதசி என்று பெயர். தந்தேரஸ் அன்று செய்யப்படும் தானம் பலமடங்கு பலனளிக்கும். தந்தேரஸ் திருநாளில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைத்தால் எமபயம் தீரும் என்பது ஐதீகம். எனவேதான் அந்த விளக்கு ‘எமதீபம்’ என்று அழைக்கப்படுகிறது. யமதீபம் ஏற்றினால் விபத்து, எதிர்பாரா மரணம் ஆகியவை ஏற்படாமலும், மேலும் ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.

திரயோதசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

திரயோதசி திதியில் பிறந்தவர்கள் நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள். வெள்ளை மனம் கொண்டவர்கள், சிறிது கஞ்சத்தனம் உடையவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேல் அதிக பாசம் கொண்டவர்கள், கற்பனை வளம் கொண்டவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றார்போல தங்களை மாற்றி கொள்ள கூடியவர்கள், தற்பெருமை உடையவர்கள். திரயோதசி அன்று பிறந்தவர்கள் கடலை படைத்து வழிபடலாம்.

திரயோதசி திதியில் என்னென்ன செய்யலாம்

திரயோதசி திதி மன்மதனுக்கு உரிய நாளாகும். இந்நாளில் கடவுள் வழிபாடு செய்வது, நெடும் பயணம் செய்தல், புத்தாடை உடுத்துதல், புதிய நண்பர்களை சேர்த்தல், மற்றவர்கள் மீது அன்பு செலுத்துதல் போன்றவை செய்யலாம். விளையாட்டுகள், மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுதல், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். திரயோதசி திதியில் சிவ வழிபாடு செய்வது விசேஷம் ஆகும்.

திரயோதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

திரயோதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள் ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகும்.

திரயோதசி திதிக்கான தெய்வங்கள்

திரயோதசி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : சிவன், மற்றும் மன்மதன்

திரயோதசி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : பிரம்மா, மற்றும் நந்தி

திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்

உங்கள் வீட்டின் வறுமைக்கு காரணம் நீங்கள் சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்வது தான்   சமைக்கும் பொழுது இன்முகத்துடன் சமைத்தால் தான் அந்த சமையல் ருசி அதிகரிக்கும். அது போல உணவு சாப்பிடும் பொழுதும் பேசாமல்,...
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? புத்திர தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் திருமணமான அனைவருமே தங்களுக்கு ஒரு வாரிசு பிறக்க வேண்டும் என விரும்புவர். ஒரு சிலருக்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு சற்று தாமதமாக குழந்தை பேறு...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
யோனி பொருத்தம் என்றால் என்ன

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். திருமணத்தின் முக்கிய குறிக்கோளே வம்சத்தை விருத்தி செய்வது ஆகும். ஆண், மற்றும் பெண்ணின் தாம்பத்திய...

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...
கந்தசஷ்டி விரதம்

கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம்

கந்தசஷ்டி விரதமிருப்பதன் நோக்கம் முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் மிக முக்கியத்துவம் வயந்ததாக கருதப்படுகிற நிலையில், சஷ்டி விரதம் இருப்பது எதற்காக என்றும், அதன் பலன் குறித்தும் தெரிந்து கொள்வோம். சஷ்டி விரதத்தின் நோக்கம் ஐப்பசி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.