கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு சாதுர்யம் மிகுந்தவர்கள். இவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்பார்கள். தலைமைப் பண்பும், எல்லோரையும் வழி நடத்திச் செல்லும் திறனும் இவர்களிடம் இயல்பாக அமைந்திருக்கும். ஆனால் இவர்கள் மனதில் எப்போதுமே எதிர்மறை சிந்தனைகள் இருந்துகொண்டே இருக்கும். இப்படி ஆகுமோ, அப்படி ஆகுமோ என்கிற குழப்பமும், மன தெளிவின்மையும் இருக்கும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

இவர்கள் நல்ல அறிவாளிகளாகவும், புத்திக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெரும் கூடத்தில் இருந்தாலும் அதில் இவர்கள் தனித்து தெரிவார்கள். தன்னைவிட மேலான இடத்தில் உள்ளவர்கள் மீது ஒரு கண் எப்போதும் இருக்கும். சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த இடத்திலே போய் அமர்வார்கள். அப்படிப்பட்ட ராஜதந்திரி இவர்கள். இவர்கள் யாருடன் பழகினாலும், பழகியவர் மறக்க முடியாத அளவுக்கு அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மிக பெரிய ஆசைகளை மனதில் பூட்டி வைத்திருப்பார்கள். அந்த ஆசையை அடைய கடுமையாக உழைப்பார்கள். தான, தர்மம் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். தாராள மனப்பான்மை மேலோங்கி இருக்கும். செல்வம் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கலைகளிலும், கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்குவார்கள். தாயின் ஆசியும், அரவணைப்பும் இருக்கும். சிலருக்கு தாய் வழிச் சொத்துகளும் கிடைக்கும்.

செல்வ செழிப்புடன் வாழக்கையை வாழ ஆசைபடுவார்கள். இவர்களுக்கு தண்ணீரின் அதிக விருப்பம் இருக்கும். தண்ணீரை கண்டால் சிறு குழந்தை போல மாறி விளையாடுவார்கள். நண்பர்களிடையே விரோதத்தை வளர்த்து கொள்வார்கள். இவர்கள் பெரும்பாலோனோர் சற்று பலவீனமான உடலமைப்பை கொண்டவர்கள். இவர்கள் சண்டை என்று வந்து விட்டால் ஒதுங்கி செல்லவே விரும்புவார்கள். செயல்களில் மந்தமாகவும், கவன குறைவாகவும் இருப்பார்கள். இவர்கள் விவேகமான புத்திசாலிதனத்தை கொண்டவர்கள். கலை, மற்றும் இசையில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். எதையும் ஆர்வமுடன் கற்று கொள்வார்கள்.

இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை விரைவாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல செயல்படுவார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க கூடியவர்கள். சிலசமயங்களில், இவர்கள் தைர்யம் மிகுந்தவர்களாக காட்சியளிப்பார்கள். துணிச்சலான காரியங்களை செய்ய கூடியவர்கள். ஆனால் இவர்கள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல கற்பனை சக்தி மிகுந்தவர்கள். நாடோடிகள் போல அலைந்து திரிந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்கள். புதியதாக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

வாழ்க்கைத்துணையானவர் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து இவர்களுக்கு வருவார்கள். வழக்காடுவதில் நல்ல திறமை மிக்கவர்களாக இவர்களின் வாழ்க்கைத் துணை அமைவார்கள். தான் கொண்ட கொள்கையில் இருந்து சிறிதும் மாறாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் திருமண வாழ்கையில் பல போரட்டங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்காது. கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தொழில் மிகச் சிறப்பாக அமையும். திருமண தடைகள் நீங்க இவர்கள் விநாயகரை வழிபடுவது நன்மையைக் கொடுக்கும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருமண பொருத்தம் எத்தனை

திருமண பொருத்தம் என்றால் என்ன? அவை யாவை?

திருமண பொருத்தம் என்றால் என்ன? ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கியமான மற்றும் வாழ்வின் திருப்பு முனையாக அமைவது திருமண உறவுதான். இன்றைய நவநாகரீக உலகில் அறிவியலும், விஞ்ஞானமும் நன்கு வளர்ந்த இந்த காலக் கட்டத்தில் திருமணங்கள்...
ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...
மூளை வறுவல்

மூளை மிளகு வறுவல் செய்வது எப்படி?

மூளை மிளகு வறுவல் மட்டன் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தவையாகும். மட்டனை வைத்து விதவிதமாக உணவுகள் சமைக்கப்படுகிறது. மட்டன் மூளை வைத்து செய்யப்படும் உணவுகள் ருசி நிறைந்தவையாகும். அந்தவகையில் மட்டன் மூளை மிளகு வறுவல் எவ்வாறு...
சரும வறட்சியை தடுக்க

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும் பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில்...
சாலை விபத்து ஏற்பட்டால்

சாலை விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி சாலை விபத்து எதிர்பாரதவிதமாக ஏற்படுவது. மற்ற வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தான் அதிகம் விபத்தில் சிக்குகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் என்ன செய்வது என்று பலருக்கும்...
aarkadu makkan beda

ஆற்காடு மக்கன் பேடா செய்வது எப்படி

ஆற்காடு மக்கன் பேடா தேவையான பொருட்கள் மைதா - 1 கப் இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம் வெண்ணெய்  - 1 ஸ்பூன் சமையல் சோடா - 1 சிட்டிகை எண்ணெய்...
பௌர்ணமி திதி

பௌர்ணமி திதி பலன்கள், பௌர்ணமி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

பௌர்ணமி திதி பௌர்ணமி திதியானது திதிகளின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. திதிகளின் வரிசையில் பௌர்ணமி முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஆடி பௌர்ணமி, சித்திர பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி போன்றவை முக்கியமான பௌர்ணமி தினங்களாகும். பௌர்ணமி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.