இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல்

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால் மட்டுமே அனைத்தும் கிடைத்துவிடாது.

நமக்கு கிடைக்கவிருக்கும் அதிர்ஷ்டத்தை பக்கத்தில் கொண்டு வரும் ஒரு கருவியாக மட்டுமே ராசிக்கல் செயல்படும். ராசிக்கல் அணிந்தால் ஒரு 10 சதவீதம் அளவிற்கு நன்மைகள் கிடைக்கும்.

ராசிக்கல் பலன்கள் நம் கைவிரல்களில் அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து, கல்வி, தொழில்,திருமண வாழ்க்கை போன்ற அனைத்திலும் முன்னேற நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

இராசிக்கல் அணிவதால் கிரகங்களினால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அவரவர் ராசிக்கும் கிரகங்களுக்கும் ஏற்றவாறு ராசிக்கல் அணிந்தால் தீய சக்தியின் தாக்கங்கள் நம்மை நெருங்காமல் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

ராசிக்கல் என்று சொல்லகூடிய நவரத்தின கற்களுக்கு கிரகக்கோளாருகளை சரி செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. அதனால் தான் கோயில்களில் சுவாமி உருவம் பிரதிஷ்டை செய்யப்படும்போது அதன் அடியில் நவரத்தின கற்களை போட்டு அஷ்டபந்தனம் செய்து அதன் சக்தியை நிலைநிறுத்துகின்றனர்.

அதேபோல் இராசிக்கல்லின் மகத்துவம் குறித்து பண்டைய சங்ககால நூல்களிலும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலத்தில் அரசர்களும், பெரும் செல்வந்தர்களும் தங்கள் கிரீடம், ஆடை ஆபரணங்களிலும் குறிப்பாக மோதிரத்திலும் இராசிக்கல் என்று சொல்லகூடிய நவரத்தினங்களை பதித்து அணிந்ததை நாம் அறியலாம்.

எந்த கிரகத்திற்கு எந்த இராசிக்கல் சிறந்தது

  • சூரியன்- மாணிக்கம்
  • சந்திரன்- முத்து
  • செவ்வாய்- பவழம்
  • புதன்- மரகதம்
  • குரு- புஷ்பராகம்
  • சுக்கிரன்- வைரம்
  • சனி- நீலம்
  • ராகு- கோமேதகம்
  • கேது- வைடூரியம்

ராசிக்கல் ஜோதிடம் இராசிக்கல் எப்படி தேர்வு செய்ய வேண்டும்

  • பிறந்த மாதம்
  • பிறந்த தேதி
  • பிறந்த இலக்கினம்
  • பிறந்த இராசி அதிபதி
  • பிறந்த நட்சத்திர அதிபதி
  • நடைபெறும் மகாதிசை அதிபதி
  • இராசிக்கட்டத்தில் வலு அதிகமான கிரகம்
  • இராசிக்கட்டத்தில் வலு குறைந்த கிரகம்

இராசிக்கல் அணிவதால் உண்டாகும் பலன்கள்

இராசிக்கல் மோதிரம் அணியும் பலரும், தங்களது இராசிக்கேற்ற கல்லை வாங்கி மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்கின்றனர்.

இராசிக்குரிய இரத்தினத்தை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வதில் தவறில்லை. அதனால் எந்தவிதமான கெடுதலும் ஏற்படாது.

இராசிக்கற்களை வாங்கும்போது, நல்ல உண்மையான ராசிக்கற்கள் தானா என்று தரம் பார்த்து வாங்க வேண்டும். போலியான ராசிக்கற்களாக இருந்தால் அதை அணிவதால் எந்த பலனும் கிடைக்காது.

நவரத்தின கற்களை நல்ல அனுபவமும், நம்பிக்கையும் வாய்ந்த நபர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் அல்லது பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது நல்லது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஊர்வன விலங்குகள் கனவு பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....
திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும்...
செரிமானம் சீராக நடைபெற

செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள்  சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை...
பறவைகள் கனவு பலன்கள்

பறவைகளை கனவில் கண்டால் ஏற்படும் பலன்கள்

பறவை கனவு பலன்கள் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்களை பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளர்கள். அந்த வகையில் பல்வேறு விதமான பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம், பறவைகளை கனவில்...
மஞ்சள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள்...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
பால் பணியாரம் செய்வது எப்படி

செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம் தேவையான பொருட்கள்  பச்சரிசி - 1 கப் உளுந்து - 1 கப் தேங்காய் துருவல் – 2 கப் ஏலக்காய் - தேவையான அளவு சர்க்கரை – 1...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.