வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல சத்தான ஆரோக்கியமான உணவை தேர்ந்த்தெடுத்து சாப்பிடுவது மிகவும் முக்கயமானதாகும். அவ்வாறு நாம் பார்த்து பார்த்து சாப்பிடும் உணவை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்பதில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

நாம் சாப்பிடுவது சத்தான உணவே ஆனாலும் அதை சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடமால் நேரம் தவறி சாப்பிடுதாலும், வெறும் வயிற்றில் சில உணவுகளை நாம் உட்கொள்வதாலும் நம் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

சோடா

சோடா

வெறும் வயிற்றில் சோடாவை குடிப்பது மிகவும் தவறான ஒன்றாகும். சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால் இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து  குமட்டல், வயிற்றில் எரிச்சல் மற்றும் வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வெறும் வயிற்றில் சோடாவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

தக்காளிதக்காளி

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காரணம் தக்காளியில் சுரக்கும் ஆசிட் தான். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். இதனால் சிறுநீரக பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 

மாத்திரைமாத்திரைகள்

மாத்திரைகளை நாம் எப்போதுமே வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு வயிற்று அமிலத்துடன் கலந்து  உடலில் தேவையில்லாத புண்களை ஏற்படுத்தி விடும்.

 

சிட்ரஸ் பழங்கள்சிட்ரஸ் பழங்கள்

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ்  பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக பயன்படுகிறது. இவைகளை நாம் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது ஒருவித வயிற்று எரிச்சல் உருவாகலாம். வெறும் வயிற்றில் ஜீரணிக்க எந்த உணவும் இல்லாத போது இந்த பழங்களை உட்கொள்ளும் போது இவை உணவு குழாயை விரிவு படுத்துகின்றன. இதனால் வயிற்று உபாதைகள் ஏற்படுத்துகின்றன.

 

ஆல்கஹால்ஆல்கஹால்

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்  அதில் உள்ள சேர்மங்கள்  வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால் வயிறு, குடல் ஆகியவை அமிலத்தால் அரிக்கப்பட்டு மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

குளிர்பானங்கள்குளிர்பானங்கள்

கார்பனேற்றப்பட்டு பல நிறங்களில் நிரமூட்டிகளை சேர்த்து பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. அதை காலையில் அருந்தும்போது உடலுக்கு பல்வேறு தீங்குகளை கொடுக்கும். புற்று நோய் வருவதற்கும் இவை காரணியாக இருக்கலாம். இதய நோய் மற்றும் பல விதமான உடல் உபாதைகளும் இவற்றால் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் வெறும் வயிற்றில் இத்தகைய பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

காரமான உணவுகள்காரமான உணவுகள்

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

வறட்சியான உணவுகள்வறட்சியான உணவுகள்

வறட்சியான உணவுகள் என்றால் பலகாரங்கள் , மிக்சர் , நொறுக்கு தீனி, கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் போன்றவகைளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் உடலுக்கு பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காபி, டீகாபி, டீ

காபி, டீ இரண்டுமே  மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். இதனால் மலச்சிக்கல் , வாந்தி போன்றவை ஏற்படும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி, டீ  குடிக்கும் பழக்கத்தைக் மேற்க்கொள்ளுங்கள்.

தயிர்தயிர்

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து  வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்வாழைப்பழம்வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால்  மக்னீசியம் உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரைவள்ளிகிழங்குசர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

மேலே குறிப்பிட்டவற்றை சாப்பிடாமல் தவிர்த்து காலையில் எழுந்தவுடன் கொஞ்சம் தண்ணீர் அருந்தி விட்டு அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிடுவது சிறந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...
சிறுநீரக கற்களை கரைக்க

சிறுநீரகத்தில் கல் வர காரணம் ? வராமல் தடுப்பது எப்படி ?

சிறுநீரகத்தில் கல் வர என்ன காரணம்? முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  சிறுநீரகம்...
தரை பசலை கீரை நன்மைகள்

தரை பசலை கீரையின் மகத்தான மருத்துவ பயன்கள்.

தரை பசலை என்கிற சிறு பசலை தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு...
ஆடாதொடை இலையின் பயன்கள்

நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடாதோடா இலை

ஆடாதோடா இலை மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப...
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதை : பிரம்மா ரோகிணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #12

ஜாதக யோகங்கள் : யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது கெடு பலனையும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.