தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இயற்கை நமக்கு அளித்துள்ள ஆரோக்கியமான பொருட்களில் மிகவும் அற்புதமானது தேன். தேனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தேன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.

தேனில் பல  வகையான வைட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன. தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்திற்கு வலிமையை தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் பெரிதும் பயன்படுகிறது.

benifits of honeyமலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம் இருப்பதால், மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இரத்த ஓட்டம் சீராக நடைபெற தேன் பெரிதும் உதவுகிறது.த்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.

தேன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  • தேன் சாப்பிடுவதால் உடலில் செரிமானம் விரைவாக நடைபெரும். இதனால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது.
  • குழந்தைகள் தினம்தோறும் தேனை சாப்பிடுவதால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அதிக அளவு கிடைத்து உடல் வலிமை பெரும்.
  • வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

good things of honey

  • தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
  • நல்ல தூக்கம் வர தேன் அருமையான மருந்து ஆகும்.
  • தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.இரவில் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதில் தேனை கலந்து குடித்து வந்தால் நல்ல உறக்கம் வரும்.
  • தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் எனும் உட்பொருள் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சுத்தமான மலைத் தேனை இரவு படுக்கும் முன் 1 ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • தேன் ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது.
  • தேனை நாம் சாப்பிடுவதோடு மட்டுமல்லாம் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தினை கழுவினால் முகம் பளிச்சிடும்.
  • உடலில் உண்டாகும் பல்வேறு ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
  • வறட்டு இருமல், தொண்டை அழற்சி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் தேனுடன் சிறதளவு மிளகு தூளை சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர இருமல் சரியாகிவிடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பெண் கை மச்ச பலன்கள்

பெண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கை மச்ச பலன்கள் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடத்தை வைத்து பலவகையான பலன்கள் சொல்லபட்டுள்ளது. மச்சம் தோன்றும் இடத்தை பொருத்து நல்ல பலன் மற்றும் தீய பலன் போன்றவை ஏற்படுகின்றன. அந்த...
பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம் சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய் சித்திரை 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி மற்றும் அதிபதி - கன்னி :...
விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது....
கேழ்வரகு சேமியா இட்லி

கேழ்வரகு சேமியா இட்லி செய்முறை

கேழ்வரகு சேமியா இட்லி கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற  பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க கேழ்வரகு...
முடக்கத்தான் மருத்துவ பயன்கள்

முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் கீரை முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிறத்தில்...
ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #11

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது நாம் செய்த கர்ம வினைகளின் அடிப்படையில் நாம் அனுபவிக்கும் இன்பமாகும். இதை தான் நம் முன்னோர்கள் 'திணை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான்" என்று சொன்னார்கள். செய்த வினையை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.