அரிசி கழுவிய தண்ணீரில் மறைந்திருக்கும் அற்புத பயன்கள்

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள் 

நம் சமையலைறையில் உள்ள பல பொருட்கள் நமது அழகை தக்கவைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக மஞ்சள் தூள், தயிர், அரிசி மாவு, தக்காளி, வெள்ளரிக்காய், இன்னும் பல உள்ளன. இந்த வரிசையில் அரிசி கழுவிய தண்ணீரும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அரிசி கழுவிய தண்ணீர் நன்மைகள் நாம் கடைகளில் வாங்கும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களில் அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நம்மில் பலரும் அறியாத உண்மையாகும். அரிசி கழுவிய தண்ணீரை உடனடியாக பயன்படுத்துவதை விட மறுநாள் புளிக்க வைத்து பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

அரிசி கழுவிய தண்ணீரில் பல்வேறு சத்துக்குள் அடங்கியுள்ளன. அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி நம் உடலை பொலிவுடன் வைத்துக்கொள்ள முடியும். தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் இந்த அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுகிறது. தலை முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பின் அரிசி தண்ணீர் கொண்டு அலசினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அழகிற்காக மட்டுமல்லாமல் மூட்டு வலி, கை கால் வலி, வீக்கம் போன்றவற்றுக்கு அரிசி கழுவிய தண்ணீர் ஒரு சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும், சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும்போதும்  அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி கழுவ வேண்டும்.

சிறு குழந்தைகள் நடை பழகும் போது கால்கள் வலுப்பெற அரிசி கழுவிய தண்ணீரை சூடு செய்து வெதுவெதுப்பாக ஊற்றுவார்கள். அரிசி கழுவிய தண்ணீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அரிசியை ஊறவைத்து கழுவிய தண்ணீர், சோறு வடித்து எடுக்கப்பட்ட சூடான கஞ்சி என இரண்டுமே சருமம் மற்றும் முடி பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

rice water benifits

அரிசி கழுவிய தண்ணீரின் பயன்கள்

சருமம் பளிச்சிட:

அரிசி கழுவிய தண்ணீர் சருமத்தின் மீது ஆரோக்கிய நிறத்தை மேம்படுத்துகிறது. அதனால்தான் தற்போது விற்கப்படுகிற நிறைய அழகுசாதனப் பொருட்களில் அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

உடைந்த சருமம்:

அரிசி தண்ணீரை நீண்டநேரம் வைத்தால் புளித்துவிடும். இந்த புளித்த தண்ணீர் சூரிய புற ஊதாக்கதிர்களால் உடைந்த சரும செல்களை சரி செய்கிறது. மேலும் இது சருமத்தின் மிருதுத்தன்மையை அதிகரித்து முகச்சுருக்கத்தை தடுக்கும் கொலஜன் அளவை அதிகரிக்கிறது. இதனால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

வறண்ட சருமத்திற்கு:

சரும வறட்சி அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். அதிக அளவில் சோப்புகளை பயன்படுத்துவதால் அவை நம் முகத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து சருமத்தை வறண்டு போக செய்கிறது.. இதனால் முகத்தில் எரிச்சலும் வறட்சியும் ஏற்படுகிறது. அரிசி கழுவிய தண்ணீரை நாம் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும வறட்சி மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.

முகப்பருக்கள் :

அரிசி தண்ணீர் சருமத்தை மிருதுவாக்குகிறது. இது முகப்பருக்கள், கருந்திட்டுக்கள், அலர்ஜி மற்றும் அரிப்பு போன்றவற்றை சரிசெய்கிறது.

முடி வளர்சியை தூண்டும் அரிசி கழுவிய தண்ணீர் அரிசி தண்ணீரை பயன்படுத்தும் வழிகள்:

  1. க்ளென்சர் மற்றும் டோனராக அரிசி தண்ணீரை பயன்படுத்தலாம்.
  2. ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்தினால் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துகிறது.
  3. அரிசி தண்ணீருடன், சிறிது உப்பு, சிறிது எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து உடல் முழுவதும் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம்.
  4. அரிசி தண்ணீர் சன் ஸ்க்ரீனாகவும் பயன்படுகிறது. கடைகளில் விற்கப்படுகிற சன் ஸ்க்ரீன் லோஷன்களில் மற்ற பொருட்களுடன் அரிசி தவிடு சாறும் கலந்திருக்கிறது. இது UVA/UVB கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சருமத்தில் எண்ணெய் பசை குறைய

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

எண்ணெய் பசை சருமம்  நம் அனைவருக்குமே சருமம் பளபளப்பாகவும் பளிச்சென்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும்....
திணை இட்லி

திணை அரிசி இட்லி

திணை இட்லி திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது...
சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
அடை பிரதமன் செய்வது எப்படி

கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் செய்முறை

அடை பிரதமன் தேவையான பொருட்கள் அரிசி  - 50 கிராம் வெல்லம் – 100 கிராம் தேங்காய் பால் – 200 கிராம் தேங்காய் துண்டுகள் - தேவையான அளவு முந்திரி - ...
பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்

பித்ரு தோஷம் தோஷங்களில் மிக கடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரியன், மற்றும் சந்திர கிரகங்கள் ராகு அல்லது...
திரிதியை திதி

திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.