சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் நூடுல்ஸ்

பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். அதில் ஒன்றுதான் சிக்கன் நூடுல்ஸ். தற்போது பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கன் விலை மலிவானது மட்டுமல்ல ஆரோக்கியம் நிறைந்ததும் கூட.  வாருங்கள் சிக்கன் நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

1. கோழிகறி – ½ கிலோ
2. நூடுல்ஸ் – 500 கிராம்
3. கேரட் – 1
4. வெங்காயம் – 2
5. பீன்ஸ் – சிறிதளவு
6. முட்டைகோஸ் – சிறிதளவு
7. பச்சைமிளகாய் -2
8. முட்டை – 2
10. மிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி
11. கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி
12. மிளகுதூள் – 1 மேஜைக்கரண்டி
13. மஞ்சள்தூள் – ½ மேஜைக்கரண்டி
14. உப்பு – தேவையான அளவு
15. வெங்காயத் தாள் – சிறிதளவு
16. எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

செய்முறை

1. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கோழிக்கறி சேர்த்து வேக வைத்து கொள்ளவும். சிக்கன் வெந்ததும் எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும்.

2. பிறகு தோல், எலும்புகளை நீக்கி சதை பகுதியை மட்டும் பிரித்து வைத்து கொள்ளவும்.

3. சிக்கனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி அரை மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும்.

4. காய் வகைகளை மெல்லியதாக சீவி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிய நீளத் துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி வைத்த சிக்கனை போட்டு நன்கு சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

6. நூடுல்ஸை சுடு தண்ணீரில் போட்டு 20 நிமிடம் வேக வைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

7. பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி வெங்காயத்தை பொட்டு வதக்கவும்.

8. வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதனுடன் காரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து நன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

9. அதனுடன் மசாலா பொடிகள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

10. இப்போது வேக வைத்த நூடுல்ஸ், பொரித்த சிக்கன் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும்.

11. சிறிது வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி கொள்ளவும்.

இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயார். இதனுடன் தக்காளி மற்றும் மிளகாய் சாஸ் வைத்து சூடாகப் பரிமாறவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மஞ்சள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள்...
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கேட்டை நட்சத்திரத்தின் இராசி : விருச்சிகம் கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி : புதன் கேட்டை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய் கேட்டை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை :- இந்திரன் கேட்டை நட்சத்திரத்தின் பரிகார...
தேங்காயில் குடுமி ஏன் வைக்க வேண்டும்

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா?

சாமிக்கு உடைக்கும் தேங்காயில் குடுமி அவசியமா நாம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பதற்கு தேங்காய், பூ, பழம், கொண்டு முதலானவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு சாமிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்போது தேங்காயை...
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...
இனிப்பு சாப்பிடுவது போல கனவு வந்தால்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

உணவு பொருட்கள் கனவில் வந்தால் மனித வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மனிதனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. அப்படிப்பட்ட உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை...

வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

வசியப் பொருத்தம் என்றால் என்ன? வசியப் பொருத்தம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன், ஒருவருக்கொருவர் இன்பமுடன் வாழ்வார்களா என்பதை அறிய பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.