மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா

ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது, இது அனைத்து வகையான டிபன் மற்றும் சாப்பாடு வகைகளுக்கு ஏற்றது. மட்டன் குருமாவை எளிதாக எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி தேவையான பொருட்கள்

  1. ஆட்டுக் கறி – ½ கிலோ
  2. வெங்காயம் – 3
  3. தக்காளி – 3
  4. பச்சைமிளகாய் 2
  5. மல்லித்தழை – சிறிதளவு
  6. சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  7. தனியாத்தூள் – 2 ஸ்பூன்
  8. மஞ்சள்பொடி – ½ ஸ்பூன்
  9. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  12. எண்ணெய் – தேவையான அளவு
  13. பட்டை – 1
  14. ஏலம் – 2
  15. கிராம்பு – 2

அரைக்க

  1. தேங்காய்த் துருவல் – ½ கப்
  2. கசகசா – 2 ஸ்பூன்
  3. முந்திரி – 5

செய்முறை

  1. ஆட்டுகறியை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. குக்கரில் 5 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொட்டு தாளிக்கவும்.
  4. அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரும் வரை வதக்கவும்.
  5. இப்போது சுத்தம் செய்து வைக்கபட்டுள்ள ஆட்டு கறியை அதனுடன் சேர்த்து கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராகத்தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  6. சேர்க்கபட்ட மசாலாக்களின் பச்சை வாசனை மறைந்தவுடன் அரைத்த தேங்காய் மற்றும் முந்திரி விழுதை சேர்த்துக் கிளறி தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
  7. இப்போது குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கி சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் மணம் மற்றும் சுவை நிறைந்த மட்டன் குருமா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

27 நட்சத்திரங்களும் கோவில்களும்

27 நட்சத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும்

27 நக்ஷத்திரங்களும் வழிபாட்டுக் கோவில்களும் நக்ஷத்திரங்கள் 27 என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ல் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. மேற்படி அவரவர் நக்ஷத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற நன்மைகளை வாழ்வில்...
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சூரியன் மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன் மகம் நட்சத்திரத்தின் பரிகார...
prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
யோகங்கள் 27

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #5

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் ஏற்படும் யோக பலனை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது அதற்கு எதிரான கெடு...
பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...
சஷ்டி திதி பலன்கள்

சஷ்டி திதி பலன்கள், சஷ்டி திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

சஷ்டி திதி சஷ்டி என்றால் ஆறு. இது முருகப் பெருமானுக்குரிய திதியாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சஷ்டியை சுக்கில பட்ச சஷ்டி...

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவான் ஆவார். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு, பெரிய வாய், அகலமான தோள்கள் கொண்டவராக இருப்பார்கள். கம்பீரமான உடல்வாகை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.