மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா

ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது, இது அனைத்து வகையான டிபன் மற்றும் சாப்பாடு வகைகளுக்கு ஏற்றது. மட்டன் குருமாவை எளிதாக எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி தேவையான பொருட்கள்

  1. ஆட்டுக் கறி – ½ கிலோ
  2. வெங்காயம் – 3
  3. தக்காளி – 3
  4. பச்சைமிளகாய் 2
  5. மல்லித்தழை – சிறிதளவு
  6. சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  7. தனியாத்தூள் – 2 ஸ்பூன்
  8. மஞ்சள்பொடி – ½ ஸ்பூன்
  9. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  12. எண்ணெய் – தேவையான அளவு
  13. பட்டை – 1
  14. ஏலம் – 2
  15. கிராம்பு – 2

அரைக்க

  1. தேங்காய்த் துருவல் – ½ கப்
  2. கசகசா – 2 ஸ்பூன்
  3. முந்திரி – 5

செய்முறை

  1. ஆட்டுகறியை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. குக்கரில் 5 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொட்டு தாளிக்கவும்.
  4. அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரும் வரை வதக்கவும்.
  5. இப்போது சுத்தம் செய்து வைக்கபட்டுள்ள ஆட்டு கறியை அதனுடன் சேர்த்து கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராகத்தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  6. சேர்க்கபட்ட மசாலாக்களின் பச்சை வாசனை மறைந்தவுடன் அரைத்த தேங்காய் மற்றும் முந்திரி விழுதை சேர்த்துக் கிளறி தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
  7. இப்போது குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கி சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் மணம் மற்றும் சுவை நிறைந்த மட்டன் குருமா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கறிவேப்பிலை நன்மைகள்

கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை கறிவேப்பிலை கறியில் போடப்படும் இலை என்பதாலும், அந்த கறிவேப்பிலை இலை அமைப்பு வேப்பிலையின் அமைப்பு போன்றே இருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றது. கறிவேப்பிலை பல்வேறு...

கடக ராசி பொது பலன்கள் – கடக ராசி குணங்கள்

கடக ராசி குணங்கள் கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. 12 ராசிகளில் இது 2வது சர...
காய்கறிகள் கனவில் வந்தால் என்னபலன்

காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன்

காய்கறிகள் கனவில் வந்தால் பலருக்கும் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விசித்திர கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது, இதற்கு அர்த்தம்...
நாக தோஷ பரிகார தலங்கள்

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் என்றால் என்ன? சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது ஜாதகத்தில் நன்றாக இருக்கிறதா, அல்லது எதாவது தோஷம் இருக்கிறதா என கேட்பார்கள். அப்படிப்பட்ட தோஷங்களில் ஒன்று சர்ப்ப தோஷம், அல்லது நாக தோஷம் ஆகும்....
சித்திரையில் பிறந்தவர்களின் குணநலன்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். முன்வைத்த காலை எதிலும் பின் வைக்க மாட்டார்கள்....
தண்ணீர்

ஸ்லிம்மான அழகிய உடல் அமைப்பை பெற சில எளிய டிப்ஸ்

அழகான உடல் அமைப்பை பெற எளிய டிப்ஸ்  உடல் எடை அதிகரிப்பால் இன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது மெலிந்த அழகான உடல் அமைப்பை தான். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை...
தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.