சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா செய்வது எப்படி

சிக்கன் சமோசா தேவையான பொருள்கள்

  1. சிக்கன் – 250 கிராம் (எலும்பில்லாதது)
  2. இஞ்சி – 1 துண்டு ( பொடியாக நறுக்கியது )
  3. எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  4. மைதா – 250 கிராம்
  5. 5 சோம்பு – ½  ஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு
  7. பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது )
  8. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  9. பட்டாணி – 1 கப் ( வேக வைத்தது )
  10. பெரிய வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
  11. கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி

செய்முறை

  1. முதலில் 250 கிராம் மைதாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும்.
  2. பின்னர் மாவுடன் தேவையான அளவு உப்பு சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  3. எடுத்து வைத்துள்ள 250 கிராம் சிக்கனை நன்றாக கொந்தி எடுத்துக் கொள்ளவும்.
  4. சிக்கனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. இப்பொழுது வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் ½ ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
  7. சோம்பு பொரிந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. வெங்காயம் வதங்கியவுடன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  9. பின்னர் வேக வைத்த பச்சை பட்டாணி, சிக்கன், சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
  10. 10. இப்போது நாம் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  11. உருட்டிய மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து சிறிது மைதா மாவு தூவி மாவை வட்டமாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  12. பின்னர் ஒரு கத்தி வைத்து அதனை அரை வட்டமாக வெட்டி அதில் இன்னும் கூட தேவையான அளவு மைதா மாவை தூவி நீள வாக்கில் ரிப்பன் போல நன்கு தேய்க்கவும்.
  13. இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
  14. இப்போது சப்பாத்திக் கல்லை அடுப்பில் வைத்து தேய்த்த மாவை அதிகம் வாட்டாமல் ஒரு நிமிடம் மட்டும் வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
  15. இந்த ரிப்பன் போல தேய்த்த மாவின் நுனியை மடக்கி அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு சிக்கன் கலவை வைத்து முக்கோண வடிவில் மடிக்கவும்.
  16. கடைசியாக வரும் பகுதியை மைதா பசையால் ஒட்டி விடவும் அப்போதுதான் சமோசா பிரியாமல் இருக்கும்.
  17. தயார் செய்த சமோசாக்களை பிரீஸரில் நிமிடத்திற்கு வைக்கவும்.
  18. பின்னர் ஒரு கடாயில் சமோசா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  19. எண்ணெய் சூடானதும் சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

லிப்ஸ்டிக் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

லிப்ஸ்டிக் இன்று பலரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு தவிர்க்க முடியாத அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் மாறியுள்ளது. முன்பெல்லாம் எங்கோ ஒருவர் தான் லிப்ஸ்டிக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால்...
அப்பம் செய்யும் முறை

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை...

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
குங்குமம், மஞ்சள்

இந்தப் பொருட்களை கை தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா?

இந்தப் பொருட்களை கை தவறி கீழே சிந்தி விட்டால் என்ன பலன் தெரியுமா? நாம் சில நேரங்களில் கவனக்குறைவாக இருக்கும்போது பொருட்கள் கீழே சிந்துவது சகஜம்தான். இதைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் நம்மில் பலருக்கும்...
வியர்வை துர்நாற்றம் வராமல் இருக்க

வியர்வை வாடை வராமல் தவிர்க்க என்ன வழி

வியர்வை வாடையை தவிர்க்க என்ன வழி நாம் என்னதான் தினசரி இரண்டு வேளை சுத்தமாக தேய்த்து குளித்தாலும் சில மணி நேரங்களுக்கு பின் வியர்வை வாடை வீச தொடங்கும். இதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். வியர்வை...
மச்ச சாஸ்திரம் என்றால் என்ன

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன? மச்ச பலன்களை எவ்வாறு கணிப்பது

மச்சம் என்றால் என்ன? நமது உடலில் தலையில் இருந்து கால் பாதம் வரை உள்ள தோலில் அமைந்துள்ள சிறு சிறு புள்ளிகள் தான் மச்சங்கள் ஆகும். இது மஞ்சள், நீலம், சிவப்பு, வெளுப்பு, கருப்பு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.