சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா

சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன் பக்கோடா மிகவும் ருசியாக இருக்கும்.  அதே சுவையில் நம் வீட்டிலேயே சிக்கன் பக்கோடா எளிதில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சிக்கன் பக்கோடா செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. கோழிக்கறி – ½ கிலோ
  2. கடலை மாவு – ¼ கப்
  3. சோள மாவு – 2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  5. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  6. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  8. முட்டை – 1
  9. எலுமிச்சை சாறு – சிறிதளவு
  10. கேசரி கலர் – சிறிதளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து பக்கோடா செய்வதற்கு ஏற்றார் போல் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின்னர் 1 முட்டையை உடைத்து சேர்த்து கொள்ளவும்.
  4. தேவையான அளவு உப்பு மற்றும் கேசரி கலர் சேர்த்து பின் வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5.  1 மணி நேரம் நன்கு ஊறிய பின் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிக்கனை சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  6. அதே எண்ணெயில் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொறித்து எடுத்து சிக்கனுடன் சேர்த்து பரிமாறினால்சுவையான சிக்கன் பக்கோடா தாயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #9

ஜாதக யோகங்கள் இந்த பூமியில் மனிதன் பிறக்கும்போது, அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து ஜோதிடரால் கணிக்கப்படுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில்...
துவிதியை திதி பலன்கள்

துவிதியை திதி பலன்கள், துவிதியை திதியில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

துவிதியை திதி ‘துவி’ என்றால் இரண்டு, இது ஒரு வடமொழி சொல்லாகும். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவிதியை சுக்கில பட்ச துவிதியை என்றும்,...
கனவு பலன்கள் நாய்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன்

வீட்டு விலங்குகளை கனவில் கண்டால் பூனை கனவில் வந்தால் 1. வீட்டு அடுபாங்கரையில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு வந்தால் அது நல்ல சகுனம் அல்ல என்று அர்த்தம். 2. பூனை...
இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி செய்வது எப்படி

இறால் பிரியாணி அசைவ உணவில் சிறியவர்  முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். பிரியாணியின் சுவையும் மணமும் தான் நாம் விரும்பி சாப்பிட ஒரு...
ஐப்பசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள். தேசபக்தியும் அவர்களிடம் நிறைந்து காணப்படும். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அறிவில் சிறந்தவர்கள் மேலும் மிகுந்த பொறுமைசாலிகள்....
சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் என்றால் என்ன? சர்ப்ப தோஷங்களின் வகைகள்

சர்ப்ப தோஷங்கள் நம்முடைய ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் ராகுவும், கேதுவும் இடம் பெற்றிருப்பார்கள். அனைத்து கிரகங்களும் ராகு - கேதுக்களுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண...
யோனி பொருத்தம் என்றால் என்ன

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

யோனிப் பொருத்தம் என்றால் என்ன? திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியமான பொருத்தம் ஆகும். திருமணத்தின் முக்கிய குறிக்கோளே வம்சத்தை விருத்தி செய்வது ஆகும். ஆண், மற்றும் பெண்ணின் தாம்பத்திய...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.