சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா

சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன் பக்கோடா மிகவும் ருசியாக இருக்கும்.  அதே சுவையில் நம் வீட்டிலேயே சிக்கன் பக்கோடா எளிதில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சிக்கன் பக்கோடா செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  1. கோழிக்கறி – ½ கிலோ
  2. கடலை மாவு – ¼ கப்
  3. சோள மாவு – 2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  5. கரம் மசாலா – ½ ஸ்பூன்
  6. மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  8. முட்டை – 1
  9. எலுமிச்சை சாறு – சிறிதளவு
  10. கேசரி கலர் – சிறிதளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு
  12. உப்பு – தேவையான அளவு
  13. கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து பக்கோடா செய்வதற்கு ஏற்றார் போல் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின்னர் 1 முட்டையை உடைத்து சேர்த்து கொள்ளவும்.
  4. தேவையான அளவு உப்பு மற்றும் கேசரி கலர் சேர்த்து பின் வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5.  1 மணி நேரம் நன்கு ஊறிய பின் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிக்கனை சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  6. அதே எண்ணெயில் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொறித்து எடுத்து சிக்கனுடன் சேர்த்து பரிமாறினால்சுவையான சிக்கன் பக்கோடா தாயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...
fruits kanavil vanthal

பழங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பழங்கள் கனவில் வந்தால் கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. தூக்கத்தில் பல்வேறு விதமான கனவுகள் ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் வரும். அவற்றில் சில விடை தெரியாத கனவுகள் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த...
செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal) இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது,...
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திரம் முதல் பாதத்தின் இராசி மற்றும் அதிபதி - சிம்மம் : சூரியன் உத்திரம் இரண்டாம்,...
benifits of honey

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் இயற்கை நமக்கு அளித்துள்ள ஆரோக்கியமான பொருட்களில் மிகவும் அற்புதமானது தேன். தேனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தேன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். தேனில் பல  வகையான வைட்டமின்...
கரிசலாங்கன்னி கீரை

கரிசலாங்கண்ணி மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்பது ஒரு மருத்துவ மூலிகைச் மற்றும் கீரை செடியாகும். கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி ஆகும். மஞ்சள் நிற பூக்கள்...
துவாதசி திதி

துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.