சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்புதேவையான பொருட்கள்

  1. ஆட்டுக்கால் – 4 கால்கள்
  2. கத்திரிக்காய் – 4
  3. புளி – ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு
  4. வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்
  5. இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. துருவிய தேங்காய் – 5 ஸ்பூன்
  7. பூண்டு – 5 பல் ( பொடியாக நறுக்கியது )
  8. சின்ன வெங்காயம் – 10
  9. சீரகத் தூள் – 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  12. தக்காளி – 2
  13. மல்லித் தூள் – 1½ ஸ்பூன்
  14. வெல்லம் – 1 துண்டு
  15. கருவேப்பிலை – சிறிதளவு
  16. வடகம் – 1 ஸ்பூன்
  17. எண்ணெய் – தேவையான அளவு
  18. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் கொண்டைக்கடலையையும் குக்கரில் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. தக்காளியையும், தேங்காயையும் தனித்தனியாக  மிக்சியில் சேர்த்து கொள்ளவும்.
  4. ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் வடகம், பொடியாக நறுக்கிய பூண்டு பல், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதினை சேர்க்கவும்.
  7. தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  8. பின் 1 ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  9. வேக வைத்த கொண்டக்கடலை மற்றும் ஆட்டுக்காலையும் சேர்த்துக் கொள்ளவும்.
  10. கடலை வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் அதையும் சேர்த்துக் கொள்ளவும்.
  11. ஆட்டுக் கால் சேர்த்த பின் 2 நிமிடத்திற்கு நன்கு வதக்கி விடவும்.
  12. மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சீரக தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  13. கத்தரிக்கையை நான்கு பாதியாக கீரி சேர்த்துக் கொள்ளவும்.
  14. கத்தரிக்காய் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
  15. புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்துக் கொள்ளவும்.
  16. தேங்காய் விழுது சேர்த்து 2 கொதி வந்ததும் 1 துண்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான  சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பறவைகள் கனவு பலன்கள்

பறவைகளை கனவில் கண்டால் ஏற்படும் பலன்கள்

பறவை கனவு பலன்கள் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்களை பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளர்கள். அந்த வகையில் பல்வேறு விதமான பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம், பறவைகளை கனவில்...

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட்

முகப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும் பீட்ரூட் இயற்கையான அழகை பெற விரும்பும் பெண்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த தீர்வாகும். பீட்ரூட்டில் நம் உடலுக்கும், உள்ளுருப்புகளுக்கும் மிகவும் தேவையான ஒன்றாகும். நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும்...
சாக்லெட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சாக்லெட் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ?

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா ? குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சாக்லெட் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து...
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.