சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு

சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்புதேவையான பொருட்கள்

  1. ஆட்டுக்கால் – 4 கால்கள்
  2. கத்திரிக்காய் – 4
  3. புளி – ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவு
  4. வெள்ளை கொண்டைக்கடலை – 1 கப்
  5. இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  6. துருவிய தேங்காய் – 5 ஸ்பூன்
  7. பூண்டு – 5 பல் ( பொடியாக நறுக்கியது )
  8. சின்ன வெங்காயம் – 10
  9. சீரகத் தூள் – 1 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  12. தக்காளி – 2
  13. மல்லித் தூள் – 1½ ஸ்பூன்
  14. வெல்லம் – 1 துண்டு
  15. கருவேப்பிலை – சிறிதளவு
  16. வடகம் – 1 ஸ்பூன்
  17. எண்ணெய் – தேவையான அளவு
  18. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் கொண்டைக்கடலையையும் குக்கரில் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. தக்காளியையும், தேங்காயையும் தனித்தனியாக  மிக்சியில் சேர்த்து கொள்ளவும்.
  4. ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் வடகம், பொடியாக நறுக்கிய பூண்டு பல், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதினை சேர்க்கவும்.
  7. தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  8. பின் 1 ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  9. வேக வைத்த கொண்டக்கடலை மற்றும் ஆட்டுக்காலையும் சேர்த்துக் கொள்ளவும்.
  10. கடலை வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல் அதையும் சேர்த்துக் கொள்ளவும்.
  11. ஆட்டுக் கால் சேர்த்த பின் 2 நிமிடத்திற்கு நன்கு வதக்கி விடவும்.
  12. மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சீரக தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  13. கத்தரிக்கையை நான்கு பாதியாக கீரி சேர்த்துக் கொள்ளவும்.
  14. கத்தரிக்காய் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
  15. புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்துக் கொள்ளவும்.
  16. தேங்காய் விழுது சேர்த்து 2 கொதி வந்ததும் 1 துண்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான  சித்தூர் ஆட்டுக்கால் சன்னாக் குழம்பு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
கறிவேப்பிலை நன்மைகள்

கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலை கறிவேப்பிலை கறியில் போடப்படும் இலை என்பதாலும், அந்த கறிவேப்பிலை இலை அமைப்பு வேப்பிலையின் அமைப்பு போன்றே இருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றது. கறிவேப்பிலை பல்வேறு...
திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் புகுந்த வீட்டில் முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்? திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதை போகிறபோக்கில் சாதரணமாக சொல்லிவிடவில்லை, அதற்கு பொருள் நிறைந்த ஆர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு நெல், சோளம், பருப்பு...
திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்து கொடுப்பது ஏன்? திருமண வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகும். அதில் அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவை இல்வாழ்க்கையில் பரஸ்பரம் கணவன், மனைவி இடையே...
காரடையான் நோன்பு விரத முறை

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு  காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும். மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி...
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரேவதி நட்சத்திரத்தின் இராசி : மீனம் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி : புதன் ரேவதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு ரேவதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : ஈஸ்வரன் ரேவதி நட்சத்திரத்தின் பரிகாரத்...
ஆனியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.