சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal)

இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது, மற்றும் எலும்பில்லாதது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இறாலை வைத்து செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது என பார்ப்போம்.

செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சில்லி இறால் செய்ய தேவையான பொருட்கள்,

  1. இறால் – ½ கிலோ
  2. மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
  3. தக்காளி – 1
  4. மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
  5. சோம்பு பொடி – ½ ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  7. வெங்காயம் – 2
  8. பச்சை மிளகாய் – 3
  9. கறிவேப்பிலை – சிறிதளவு
  10. எண்ணெய் – தேவையான அளவு
  11. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. முதலில் இறாலை தோல் நீக்கி நடுவில் உள்ள குடலை எடுத்து விட்டு சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்.
  2. பிறகு அதனுடன் மிளகாய் தூள் , சோம்பு தூள் , தேவையான அளவு உப்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் எண்ணை ஊற்றி ஊற வைத்துள்ள இறால் மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
  6. மிதமான தீயில் வைத்து வதக்கவும், வதக்கும் பொழுது இறாலில் இருந்து தண்ணீர் விடும், அந்த தண்ணீர் முற்றிலும் வற்றும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்.
  7. இறால் ஓரளவிற்கு வவதங்கியதும் வெளியே எடுத்துவிடவும்.
  8. அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் வதக்கி வைத்துள்ள இறாலை சேர்க்கவும்.
  10. இறாலை சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்கு வேக விடவும்.
  11. பின் கடைசியாக கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான செட்டிநாடு சில்லி இறால் தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கற்றாழை வளர்ப்பது எப்படி

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக்...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சிம்ம லக்னத்தின் அதிபதி சூரிய பகவானவார். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களை கண்டு பிறர்...
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
பிறந்த தேதி பலன்

நீங்கள் இந்த தேதியில் பிறந்தவரா, உங்கள் பிறந்த தேதி பலன்கள் இதோ

பிறந்த தேதி பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதிரியான குணநலன்கள் இருக்கும் என்பது போல், குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் குணநலன்கள் மாறுபடும். அதன்படி அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும்...
carrot halwa recipe

சுவையான கேரட் அல்வா எப்படி செய்வது

கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் சர்க்கரை பால் ஏலக்காய் முந்திரிப் பருப்பு 6.உலர்ந்த திராட்சை நெய் செய்முறை காரட்டை தோல் சீவி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். ...
பஞ்சபூதங்கள் கனவில் வந்தால்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

பஞ்சபூதங்கள் கனவில் வந்தால் கனவு என்பது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும். எந்த மாதிரியான கனவுக்கு என்ன பலன்கள் ஏற்படும் என்று பெரியோர்கள் முற்காலங்களில் சொல்லி வைத்துள்ளனர். அந்த வகையில் பஞ்சபூதங்கள்...
உதட்டை சிவப்பாக்க இயற்கை முறைகள்

இயற்கையான முறையில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற

லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.