ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்

ஏலக்காய் தண்ணீர் பயன்கள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த ஒரு அறிய மருந்து தான் ஏலக்காய். ஏலக்காய் நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு அறிய மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும். ஏலக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் அதனை நாம் பயன்படுத்தலாம்.

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்ஏலக்காயில் புரதம்,மாவுச்சத்து, நார்ச்சத்து,கால்சியம்,உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சித்தமருத்துவத்தில் ஏலக்காய் மிகப்பெரிய பங்காற்றுகிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஏலக்காய் தண்ணீரை  குடிப்பதினால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.

செரிமானம்

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உணவு விரைவாக செரிமானம் அடையும். வயிறு உப்புசமாக தோன்றுவது, வயிற்று வலி, நெஞ்செரிச்சல்,குமட்டல், ஆகிய வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகிவிடும். இந்த நீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

நச்சுக்கள்

நம் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அவ்வப்போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏலக்காய் நீர் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.

ஏலக்காய் நன்மைகள்வாய்துர்நாற்றம்

ஏலக்காய் இயற்கையாகவே அதிக வாசனையுடையது. வாய்துர்நாற்றம் உள்ளவர்கள், பற்களில், ஈறுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று மற்றும் வாய்ப்புண் உள்ளவர்கள் ஏலக்காய் தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தி வர இவை அனைத்தும் சரியாகிவிடும். வாய் புத்துணர்ச்சியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

ஆரோக்கியமான வாழ்விற்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியமாகும். ஏலக்காய் நீர் குடிப்பதினால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தொண்டைப் பிரச்சனைகள், வைரஸ் காய்ச்சல் ஆகியவை குணமாகும். காய்ச்சல் தலைவலி ஏற்பட்டு இரண்டு நாட்கள் கழித்து இந்த நீரை குடிப்பதினால் எந்த பயனும் இல்லை. மாறாக ஆரம்ப கட்டத்திலேயே குடிக்க வேண்டியது அவசியமாகும்.

முதுமை தோற்றம்

ஏலாக்காயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் இருக்கும் செல்களின் உற்பத்திக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்புடன் ஆரோக்கியத்துடனும் இருப்பது மட்டுமல்லாமல் இளமையுடன் இருக்க இது உதவிடும்.

மூச்சுப் பிரச்சனை

சுற்றுப்புறச் சூழல் காரணமாக அடிக்கடி மூச்சுத் திணறல் அல்லது மூச்சு விட சிரமம் ஏற்பட்டால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நீரை காய்ச்சி குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இரத்த சோகை

இன்று பலருக்கும் இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று சோகை. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிகப்படியான இரத்த போக்கின் காரணமாக இரத்த சோகை ஏற்படுத்திறது. இவ்வகையான பாதிப்பு உள்ளவர்கள் ஏலக்காய் நீர் குடிப்பதினால் அதன் தீவிரத்தை கட்டுபடுத்த முடியும்.

தொடர் இருமல்

சிலருக்கு அதிக சூடு காரணமாகவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ தொடர் இருமல் ஏற்பட்டிருக்கும். இந்த நீரை குடித்தால் உடனடி பலன் கிடைக்கும். இருமலை கட்டுப்படுத்துவதுடன், உடல் சோர்வையும் தடுக்கும்.

சரும பளபளப்பு

தொடர்ந்து ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் சருமம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமத்திற்கு சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கிறது.

கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும்

ஏலக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலில் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
kanavil samiyay kandaal

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் கடவுள் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களை தாண்டி மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள்...
கிரகமாலிகா யோகங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம் (Graha Malika Yogam) ராகு, கேதுக்களைத் தவிர மற்ற 7 கிரகங்களும் வரிசையாக 7 வீடுகளில் இருந்தால் மாலை போல அமைய பெற்று இருந்தால் அதற்கு கிரக மாலிகா யோகம் என்று...
ஆப்பிள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள் நம் உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்கள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாகும். பழங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பழங்களை நாம் உட்கொள்வதால்...
சிக்கன் பக்கோடா செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா எளிதாக செய்வது எப்படி

சிக்கன் பக்கோடா சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவுதான். சிக்கன் பக்கோடா என்றால் சொல்லவே வேண்டாம் நினைக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கும். அதிலும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் சிக்கன்...
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதை : பிரம்மா ரோகிணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
சிக்கன் சூப் செய்வது எப்படி

சிக்கன் சூப் எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி

சிக்கன் சூப் உடல் நலிவுற்றவர்கள் காய்கறிகள் மற்றும் சூப்கள் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சூப் குடிப்பதால் உடல் பலப்படும், பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், இளைத்த உடலை தேற்றும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.