நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி

அனைத்து வசதி வாய்ப்புகள் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் முழு மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அதனால்தான் ‘ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ‘ என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்படுகிறது. உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நம் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான் எப்படிப்பட்ட நோய் தாக்கம் ஏற்பட்டாலும் அதில் இருந்து நாம் மீள முடியும்.

நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்களுக்கு நோய் தாக்கம் அதிக அளவில் காணப்படும். சிறிய அளவிலான நோயினையும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது. எப்போதும் உடல் சோர்வாக இருப்பது போலவே உணர்வார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சில உணவுகளை பார்க்கலாம்.

மஞ்சள் மஞ்சள்

மஞ்சள் இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் உள்ளது. மஞ்சளை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் கிருமிகள் தொற்று ஏற்படுவது தடுக்கப் படுகிறது. இரத்தத்தைச் சுத்தகரிக்க உதவுகிறது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

பூண்டின் பயன்கள் பூண்டு

தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் தன்மை பூண்டுக்கு உள்ளது. இது உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டதால் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது நல்லது. வாயுத் தொல்லையை சரி செய்வதில் பூண்டுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. தாய்பாலை அதிகரிக்க செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.

வெங்காயத்தின் நன்மைகள்வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள ‘அலிலின்’ என்னும் வேதிப்பொருள் உடலில் பாக்டீரியா, நச்சு போன்றவை சேராமல் தடுக்கின்றன. ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது.

காய்கறிகள்காய்கறிகள்

காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ள கேரட், பீன்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை நம்முடைய தினசரி உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கிறது. நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் இதயம் பலப்படும். சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்.

பழங்கள்பழங்கள்

பழங்கள் உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு அள்ளித்தருகின்றன. பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் வருவது தடுக்கப்படுகிறது.

தயிர்தயிர்

தயிரானது நமது உடம்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமான மண்டலத்தின் செயல் திறனை மேம்படுத்துகிறது. எனவே அன்றாடம் சாப்பிடும் உணவில் தயிரை சேர்த்துக் கொண்டு வந்தால், தொற்று நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. தயிர் உடலுக்கு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

கிரீன் டீ செய்முறைகிரீன் டீ

கிரீன் டீயில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டியாக்ஸிடன்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் கிரீன் டீயை குடித்து வந்தால், காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்கள் வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம். கிரீன் டீ கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
ஆட்டுக்கால் பாயா குருமா

ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி

ஆட்டுக்கால் பாயா ஆட்டுக்கால் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் ஆட்டுகாலை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆட்டுகால் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்ப்போம். ஆட்டுக்கால்...
மின் விபத்துக்கான முதலுதவிகள்

மின்சார விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்

மின்சார விபத்து மழைக் காலங்களில் மின்சார விபத்து ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. புயல், மழை காலங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் மின்சார விபத்து பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. அந்த எதிர்பாராத நேரத்தில்  மின்சார விபத்து ஏற்பட்டால்...
பிரம்மஹத்தி தோஷம் விலக

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும்...
புத்திர தோஷம்

புத்திர தோஷம் என்றால் என்ன? புத்திர தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

புத்திர தோஷம் என்றால் என்ன நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமைகிறது. முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைபடுத்தியிருந்தால், அவர்கள் கொடுத்த சாபத்தால் இந்த ஜென்மத்தில் புத்திர தோஷம்...
சுப ஓரைகள் என்றால் என்ன

ஓரைகள் என்றால் என்ன ? எந்த ஓரையில் என்னென்ன செய்யலாம்?

ஓரைகள் என்றால் என்ன? தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.