எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

எலும்பு முறிவு என்பது சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. ஆய்வின்படி 10ல் 6 பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது எலும்புமுறிவு பாதிப்புக்கு ஆளாகின்றனர். சிறுவர்களுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டால் விரைவில் கூடிவிடும். அதுவே பெரியவர்களுக்கு ஏற்பட்டால் எலும்பு கூட சில நாட்கள் தேவைப்படும். எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு எவ்வாறான முதலுதவிகள் செய்யவேண்டும் என பின்வருமாறு பார்க்கலாம்.

கை எலும்பு முறிவுக்கான முதலுதவி

கை எலும்பு முறிந்திருந்தால், கையின் இரு பக்கங்களிலும் மூங்கில் குச்சிகள் (தப்பைகள்) வைத்துத் துணியால் கட்டுப்போட வேண்டும். மூங்கில் குச்சிகள் இல்லையெனில், சிறிய மரப்பலகை அல்லது அடி ஸ்கேல்களை வைத்து கட்டுப்போடலாம். முறிந்த எலும்பு அசைவதைத் தடுக்கவே இந்த முதலுதவி. முறிந்த பகுதியில் அசைவு ஏற்பட்டால் அவர்களால் அந்த வலியை தாங்கிக்கொள்ள முடியாது.

எலும்பு முறிவு குணமாக
அடுத்து, முறிந்த எலும்பை தொங்கப்விடக் கூடாது. ஏனெனில், முறிந்த பாகம் தொங்கும் போது, முறிவு ஏற்பட்ட இடத்துக்கு கீழ் ரத்தம் தேங்கி வீக்கமும் வலியும் அதிகமாகும். இதனால், முறிந்த எலும்புகளை நேராக வைத்துக் கட்டுவதில் சிரமம் ஏற்பட கூடும்.

இப்போது, அடிபட்டவரின் முழங்கையை ‘L’ வடிவில் உள்நோக்கி மடக்கி, மார்போடு சேர்த்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இனி, கழுத்துக்கும் கைக்கும் சேர்த்துத் துணியால் ஒரு தொட்டில் போலக் கட்டுப் போட வேண்டும்.

தொட்டில் கட்டு கட்டும் முறை

ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு துணியை வெட்டிக் கொள்ளுங்கள். அதன் இரண்டு முனைகளையும் இணைத்து முடிச்சு போட்டு கொள்ள வேண்டும். பின்பு அதை அடிபட்ட்வரின் கையிலும், கழுத்திலும் மாட்டி தொட்டில் போல தொங்க விட வேண்டும். பின்பு பாதிக்கப்பட்ட நபரை எலும்பு முறிவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இடுப்பு எலும்பு முறிவு, தொடை எலும்பு முறிவு, கீழ்க்கால் முறிவு ஏற்பட்டால்

விளையாடும் போதோ, விபத்தினாலோ, கால் தடுக்கி வழுக்கி விழுந்தாலே இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, கீழ்க்கால் எலும்பு மற்றும் பாத எலும்புகளில் முறிவு ஏற்படலாம். அந்த நேரங்களில் என்ன மாதிரியான முதலுதவிகள் மேற்கொள்ளலாம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டால்

முதலில் அடிபட்டவரைப் படுக்க வைக்க வேண்டும். கால்களை நேராக நீட்ட வேண்டும். ஓர் அகலமான துணியால் இடுப்பைச் சுற்றிக் கட்டுப் போட வேண்டும். பிறகு, இடுப்புக்குக் கீழே தொடைகள் தொடங்கும் இடத்தில் மற்றொரு கட்டுப் போட வேண்டும். பின் இந்த இரண்டு இடத்தையும் சேர்த்தாற்போல முடிச்சு போட வேண்டும். இந்த முடிச்சு, பக்கவாட்டு பகுதியில் இருக்கும்படி செய்ய வேண்டும்.

தொடை எலும்பு முறிவு ஏற்பட்டால்

தொடை எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டால், துணியின் மடிப்புகளை இரண்டு தொடைகளுக்கும் நடுவில் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு தொடைகளையும் சேர்த்து மூன்று இடங்களில் கட்டுப் போட வேண்டும்.
இதே போல கீழ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் தொடை எலும்பு முறிவுக்குச் செய்வதைப் போலவே தான் செய்ய வேண்டும். பின்பு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

இடுப்பு, தொடை மற்றும் கால் எலும்பு முறிந்துள்ள நபரை, ஸ்ட்ரெச்சர் கொண்டு தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்த வரை பாதிக்கப்பட்டவரை நடக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால்

பாதங்களின் மீது கனமான பொருள் விழுவது, வழுக்கிவிழுவது, வாகனங்கள் பாதத்தில் ஏறுவது, உயரமான இடத்திலிருந்து விழுவது, விளையாடும்போது விழுவது போன்ற விபத்துகளால் பாத எலும்புகளில் முறிவுகள் ஏற்படலாம்.

எலும்பு முறிவு குணமாக
ஒரு மென்மையான துணியை மடித்து, பாதத்தின் கீழே அணைப்புக் கொடுக்க வேண்டும். அந்தத் துணி அணைப்பை சேர்த்து ஓர் அகலமான பாண்டேஜ் துணியால் பாதம் முழுவதும் கட்டுப் போட வேண்டும்..

பாண்டேஜ் துணியின் முனைகளை ‘8’ போன்ற வடிவத்தில் கணுக்காலின் பின்பக்கமாகக் கொண்டு சென்று, பிறகு முன்பக்கமாகக் கொண்டு வந்து முடிச்சுப் போட வேண்டும். போடப்படும் முடிச்சு பாதத்தின் மேற்புறம் வருமாறு முடிச்சு போட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் எலும்பு முறிந்த பாதத்தைத் தரையில் ஊன்றக் கூடாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

riddles in tamil

Most intelligent Puthirgal | Puzzles with Answers | Brain games

மூளைக்கு வேலை தரக்கூடிய கேள்விகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள்...
கனவு பலன்கள் வீடு

கட்டிடங்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

கட்டிடங்கள் கனவில் வந்தால் கனவுகள் காணாதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அதற்கேற்றார் போல நாம் நம் தூக்கத்தில் எண்ணற்ற கனவுகளை காண்கிறோம். ஒரு சில சமயங்களில் அதிசயக்க வைக்கும் கனவுகளும் உண்டு. ஆனால் அந்த...
மட்டன் சுக்கா வறுவல்

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் செய்வது எப்படி

செட்டிநாடு மட்டன் சுக்கா வறுவல் தேவையான பொருட்கள் மட்டன் கால் – ½ கிலோ  ( எலும்பில்லாதது ) சோம்பு - ½ ஸ்பூன் பட்டை – 1 துண்டு கிராம்பு – 2 ...
கோவில் குளத்தில் காசு போடுவது

கோவில் குளத்தில் காசு போடலாமா?

கோவில் குளத்தில் காசு ஏன் போடுகிறார்கள் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களுக்கு நாம் சென்றால் அந்த கோவில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சிலர் அதில் காசு போடுவதையும்...
வல்லாரை கீரை நன்மைகள்

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரை கீரை வல்லாரை கீரை என்பது ஒரு பல்வேறு மருத்துவ மூலிகைப் பயன்பாட்டுடைய கீரை வகைத் தாவரமாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளை உணவாகப் பயன்படுத்துவதால்...
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
யோகங்கள் என்றால் என்ன

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.