செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள் 

சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

உணவை மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. இது அதீத பலத்தை தருவதோடு உணவில் இருக்கும் சத்துக்களை வீணாக்காமல் உடலுக்கு சேர்க்கும்.

செரிமான பிரச்சனைக்கு தீர்வு நாம் சாப்பிடும் உணவுகள், சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் அவை நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

செரிமான கோளாறுகள் ஏற்படாமல் நாம்  சாப்பிடும் உணவுகள் நன்கு செரிமானமாகி ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.

செரிமான கோளாறு பாதிப்பின் பொதுவான அறிகுறிகள் 

செரிமான கோளாறு உண்டாக காரணம்

  • வயிறு உப்புதல் மற்றும் அதிக வாயு வெளியேறுதல்
  • மலச்சிக்கல்
  • வயிற்றுப்போக்கு
  • இரத்தம் கலந்த மலம் வெளியேறுதல்
  • நெஞ்செரிச்சல்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • வயிற்றில் ஏற்படும் வலி
  • உணவை உட்கொள்ளும் போது தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள்
  • எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு
  • குடல் சார்ந்த பிரச்சனைகள்

செரிமான கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள்

  • பாக்டீரியா தொற்று
  • குடல் அழற்சி
  • செரிமான என்ஸைம்களின் குறைபாடு
  • குடலிற்கு செல்லும் இரத்தஓட்டம் குறைவாக இருப்பது.
  • பித்தநீர்க்கட்டி உருவாக்கம்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது
  • மனஅழுத்தம்
  • புகை பிடித்தல்
  • மது அருந்துதல்
  • அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்வது
  • காரமான மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது
  • சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருத்தல்.

செரிமானம் சீராக நடைபெற

 

செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கும் வழி முறைகள்

  • தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது, அது உடலில் மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிசெய்கிறது.
  • சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு பிறகு கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
  • தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை குடிப்பதால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவை நீங்கி செரிமானத்திற்கு உதவும்.
  • உணவை நன்றாகக் கடித்து, மென்று சாப்பிடும்போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும். இதனா செரிமானம் சீராக நடைபெறும்.
  • சாப்பிடும்போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருந்தால் அது உணவை நன்கு செரிமானமாக வழிவகுக்கும்.
  • ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்கும் தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால்  உடள் ஆரோக்கியமாக இருப்பதோடு சீராகவும் இருக்கும்.
  • நார்ச்சத்து அதிகம் உள்ள செர்ரி, திராட்சை, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.
  • அதிக எடையுடன் இருப்பது அதிகமான செரிமான கோளாறு மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உணவுப் பொருட்களில் இஞ்சி, மிளகு, கல், உப்பு, சுக்கு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொண்டால் செரிமான மண்டலத்தின் வேகத்தை அதிகரிக்கும்.
  • தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமான பிரச்சனை எப்போதும் வராது. 

நாம் உணவை எவ்வாறு சாப்பிட வேண்டும் 

  • பொதுவாக சாப்பிடும் பொழுது காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.
  • காலை நாற்காலியில் தொங்கவிட்டு அமரும் போது இரத்த ஓட்டம் கால் பகுதிக்கு அதிகமாக செல்கிறது. இதனால் செரிமானம் தாமதமாகிறது.
  • உணவை சாப்பிடும் போது கவனம் முழுவதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
  • தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினி போன்றவற்றை சாப்பிடும்போது பயன்படுத்த கூடாது. அதனால் கவனம் குறைந்து அளவுக்கு அதிகமாக உணவை எடுத்துக்கொள்ள நேரிடும்.
  • சாப்பிடும் போது பேசக்கூடாது ஏனென்றால், சாப்பிடும் போது வெளியில் இருந்து காற்று வாய் வழியாக உள்ளே செல்லும் இது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதனால் தொப்பை உருவாக வாய்ப்பு உள்ளது.
  • நாம் சாப்பிடும் போது, மனதில் வெறுப்பு, வன்மம், கோபம், மன உளைச்சல் என எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் உணவை மட்டுமே கவனித்து உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிடவேண்டும்.
  • இவ்வாறு சாப்பிடும் முறையை பின்பற்றினால் செரிமான பாதிப்புகளும் ஏற்படாது, நம் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...
ராசி பொருத்தம் என்றால் என்ன

ராசி பொருத்தம் என்றால் என்ன?

ராசி பொருத்தம் என்றால் என்ன? ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படுகிறது. இது சந்திர லக்னம் என்று அழைக்கபடுகிறது. திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரும் உடல் ஆரோக்கியம், மக்கள்பேறு, நீண்ட...
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...
அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
ராசிக்கல் பலன்கள்

இராசிக்கல் அணிவதால் கிடைக்கும் பலன்கள்

இராசிக்கல் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உண்டு. ஒவ்வொரு அதிபதிக்கும் ஒவ்வொரு ராசிக்கல் உண்டு. ராசிக்கல் அணிவதால் மட்டுமே ஒருவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியும் அடைய முடியும் என்பது உண்மையல்ல. ராசிக்கல் அணிந்ததால்...

ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி

ஆட்டு தலைக்கறி குழம்பு ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகளவில் உள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் பல்வேறு வித பலன்களை தருகிறது. சிலருக்கு ஆட்டின் தலைக்கறி மிகவும் விருப்ப உணவாக இருக்கும். தலைக்கறியை சாப்பிட்டால் இதயநோய்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.