செரிமான கோளாறு ஏன் ஏற்படுகிறது ? அதற்கான தீர்வுகள்.

உணவு செரிமான கோளாறால்  உண்டாகும் பாதிப்புகள் 

சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

உணவை மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. இது அதீத பலத்தை தருவதோடு உணவில் இருக்கும் சத்துக்களை வீணாக்காமல் உடலுக்கு சேர்க்கும்.

செரிமான பிரச்சனைக்கு தீர்வு நாம் சாப்பிடும் உணவுகள், சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் அவை நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

செரிமான கோளாறுகள் ஏற்படாமல் நாம்  சாப்பிடும் உணவுகள் நன்கு செரிமானமாகி ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.

செரிமான கோளாறு பாதிப்பின் பொதுவான அறிகுறிகள் 

செரிமான கோளாறு உண்டாக காரணம்

  • வயிறு உப்புதல் மற்றும் அதிக வாயு வெளியேறுதல்
  • மலச்சிக்கல்
  • வயிற்றுப்போக்கு
  • இரத்தம் கலந்த மலம் வெளியேறுதல்
  • நெஞ்செரிச்சல்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • வயிற்றில் ஏற்படும் வலி
  • உணவை உட்கொள்ளும் போது தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள்
  • எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு
  • குடல் சார்ந்த பிரச்சனைகள்

செரிமான கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள்

  • பாக்டீரியா தொற்று
  • குடல் அழற்சி
  • செரிமான என்ஸைம்களின் குறைபாடு
  • குடலிற்கு செல்லும் இரத்தஓட்டம் குறைவாக இருப்பது.
  • பித்தநீர்க்கட்டி உருவாக்கம்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது
  • மனஅழுத்தம்
  • புகை பிடித்தல்
  • மது அருந்துதல்
  • அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்வது
  • காரமான மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது
  • சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருத்தல்.

செரிமானம் சீராக நடைபெற

 

செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கும் வழி முறைகள்

  • தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது, அது உடலில் மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிசெய்கிறது.
  • சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு பிறகு கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
  • தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை குடிப்பதால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவை நீங்கி செரிமானத்திற்கு உதவும்.
  • உணவை நன்றாகக் கடித்து, மென்று சாப்பிடும்போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும். இதனா செரிமானம் சீராக நடைபெறும்.
  • சாப்பிடும்போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருந்தால் அது உணவை நன்கு செரிமானமாக வழிவகுக்கும்.
  • ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்கும் தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால்  உடள் ஆரோக்கியமாக இருப்பதோடு சீராகவும் இருக்கும்.
  • நார்ச்சத்து அதிகம் உள்ள செர்ரி, திராட்சை, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.
  • அதிக எடையுடன் இருப்பது அதிகமான செரிமான கோளாறு மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உணவுப் பொருட்களில் இஞ்சி, மிளகு, கல், உப்பு, சுக்கு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொண்டால் செரிமான மண்டலத்தின் வேகத்தை அதிகரிக்கும்.
  • தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமான பிரச்சனை எப்போதும் வராது. 

நாம் உணவை எவ்வாறு சாப்பிட வேண்டும் 

  • பொதுவாக சாப்பிடும் பொழுது காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.
  • காலை நாற்காலியில் தொங்கவிட்டு அமரும் போது இரத்த ஓட்டம் கால் பகுதிக்கு அதிகமாக செல்கிறது. இதனால் செரிமானம் தாமதமாகிறது.
  • உணவை சாப்பிடும் போது கவனம் முழுவதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
  • தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினி போன்றவற்றை சாப்பிடும்போது பயன்படுத்த கூடாது. அதனால் கவனம் குறைந்து அளவுக்கு அதிகமாக உணவை எடுத்துக்கொள்ள நேரிடும்.
  • சாப்பிடும் போது பேசக்கூடாது ஏனென்றால், சாப்பிடும் போது வெளியில் இருந்து காற்று வாய் வழியாக உள்ளே செல்லும் இது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதனால் தொப்பை உருவாக வாய்ப்பு உள்ளது.
  • நாம் சாப்பிடும் போது, மனதில் வெறுப்பு, வன்மம், கோபம், மன உளைச்சல் என எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் உணவை மட்டுமே கவனித்து உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிடவேண்டும்.
  • இவ்வாறு சாப்பிடும் முறையை பின்பற்றினால் செரிமான பாதிப்புகளும் ஏற்படாது, நம் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

இராகு கேது தோஷம்

இராகு கேது தோஷம் என்றால் என்ன? இராகு கேது தோஷ பரிகாரங்கள்

இராகு கேது தோஷம் ராகு மற்றும் கேது ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என கூறப்படுகின்றன. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் சற்று உயரமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல கவர்ச்சியான, மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். தெய்வ பக்தியும்,...
Riddles with Answers

Brain Teasers with Answers | Riddles and Puzzles

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் பூராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வருணன் பூராடம் நட்சத்திரத்தின் பரிகார...
வில்வ இலை பயன்கள்

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம் வில்வம் இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு என்று தனிசிறப்பு உண்டு. இம்மரம் 15 அடி முதல் 25 அடி...
6ம் எண் குணநலன்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

6ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள். 6ம் எண்ணின் ஆதிக்கத்தில்...
இறந்தவர்கள் பற்றிய கனவு

இறந்தவர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒருவர் திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள். அலறுவதர்கான காரணம் கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், இறந்தவர்கள் கனவில் வந்தார்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.