உங்கள் கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

கேசத்தை பராமரிக்க சில அற்புத வழிகள்

நம் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலைமுடியும் பெரும்பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியமாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருந்தால் அது கூடுதல் அழகையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

கேச பராமரிப்பு உடல் ஆரோக்கியத்தை பொறுத்தே நம் தலைமுடி ஆரோக்கியமும் அமைந்திருக்கும். நம் உடலில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அது நம் தலைமுடியையும் பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதின் மூலம் நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துகொள்ள முடியும்.தலைமுடி எதனால் உதிர்கிறது அதை எப்படி தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்.

நோய்த்தொற்று

நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு அதிகமாவதற்கு முன்னரே அதனை கண்டுபிடுத்து அதற்குரிய மருவத்தரை அணுகி சரியான மருந்துகளை எடுத்துக்கொள்வதின் மூலம் நோய் பாதிப்பு குறையும். இத்தகைய நோய் பாதிப்பும் முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். நல்ல சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பொடுகு தொல்லை

அளவுக்கு அதிகமாக பொடுகு இருந்தால் அது சொரியாசிஸ் என்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம்.  இதைத் தவிர சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் பொடுகுத் தொல்லை வருவது உண்டு. பெரும்பாலும் பொடுகுத் தொல்லை வராமல் இருக்க ஒருவர் பயன்படுத்திய சீப்பை வேறு ஒருவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதற்கு முன்னர் அதில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு  தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி கறு கருவென வளரும்.

முடி உதிர்வை தடுக்க நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு முடியின் வேர்க்கால்கள் வலுப்பெறும்.

கூந்தல் வளர்ச்சி

கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கக் கூடிய பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். வாரம் 1-2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால் கூந்தல் உதிர்தல் குறைந்து அதன் வளர்ச்சி அதிகரிக்கும். முடி அடர்த்தியாக வளரும்.

கற்றாழை

தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வர அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்  இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

எலுமிச்சை

எலுமிச்சை பழ சாறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைய தொடங்கும். செம்பட்டை முடி கருமை அடையும்.

வெந்தயம்

வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்வு குறைந்து அடர்த்தி அதிகரிக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்

பித்ரு தோஷம் தோஷங்களில் மிக கடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரியன், மற்றும் சந்திர கிரகங்கள் ராகு அல்லது...
உடல் எடையை குறைக்கும் தேநீர்

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ

உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை...
மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் நன்மைகள் மற்றும் பயன்கள்

மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் மரம் ‘குளுசியாசியே’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா. இது பழங்களின் அரசி என அழைக்கபடுகிறது. இந்த பழம் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து...
நார்ச்சத்துள்ள உணவு வகைகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகள்

உடலுக்கு நன்மை தரக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் நாம் தினந்தோறும் பல வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுகிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்....
மாவிலை தோரணம் கட்டும் முறை

சுப நிகழ்ச்சிகளில் மாவிலை தோரணம் பயன்படுத்துவது ஏன்?

மாவிலை தோரணம் வீட்டின் தலைவாசலை நாம் எப்போதும் மங்களகரமாகவும். அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மாவிலை தோரணம் என்பது  லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த ஒன்றாகும். வீட்டில் நடக்கும் எந்த...
திருமணத்தில் மாலை மாற்றுதல்

திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல் ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.