திருமணத்தில் மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்யபடுகிறது?

திருமணத்தில் மாலை மாற்றுதல்

ஒரு திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை எண்ணற்ற சடங்குகள் நம் சமுகத்தில் செய்கின்றனர். ஆனால் பல சடங்குகள் ஏன் செய்கின்றனர் என பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று திருமணத்தில் மாலை மாற்றுதல். மாலை மாற்றுதல் சடங்கு ஏன் செய்கின்றனர் என இந்த பகுதியில் விரிவாக காண்போம்.

மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டி முடித்த பின் புரோகிதர் மணமகளை வடக்கு நோக்கி எழுந்து நின்று இறைவனை தியானித்து மணமகன் கழுத்தில் மாலை சூட்டுமாறு கூறுவார். அதே போல மணமகன், மணமகளைத் தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவான். தம்பதிகள் இருவரும் 3 முறை மாலைகளை மாற்றி கொள்வார்கள். இதன் அர்த்தம் இருமனங்களும் இணைந்து ஒரு மனமாகி இல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக மாலை மாற்றிக் கொள்கின்றனர்.

திருமணத்தில் மாலை மாற்றுதல்

மாலையை எப்படி மாற்ற வேண்டும்?

மணமகனானவன் நல்ல நாளான இந்நாளில் இறைவனின் திருவருளால் நம் உற்றார், உறவினர்கள், குலதெய்வம் அறிய, நான் தமிழ் முறைப்படி உன்னை திருமணம் செய்து கொண்டேன். அதற்கு அடையாளமாக இந்த மலர் மாலையை நான் உனக்கு சூட்டுகிறேன். இல்லறமான நல்லறத்தை இனிதே என்றும் நாம் இருவரும் இணைந்து நடத்துவோம் என கூறி மணமகளுக்கு மாலையை மாற்ற வேண்டும்.

மணமகளானவள் நல்ல நாளான இந்நாளில் இறைவன் திருவருளால் நம் உற்றார், உறவினர்கள், குலதெய்வம் அறிய நான் தமிழ் முறைப்படி உங்களைத் திருமணம் செய்து கொண்டேன். அதற்கு அடையாளமாக இந்த மலர் மாலையை சூட்டுகிறேன். இல்லறமான நல்லறத்தை இனிதே என்றும் நாம் இருவரும் இணைந்து நடத்துவோம் என கூறி மணமகனுக்கு மாலையை மாற்ற வேண்டும்.

மாலை மாற்றுவதன் அர்த்தம் என்ன

இடம் மாறி அமர்தல்

மணமக்கள் மாலை மாற்றிக் கொண்ட பின், இருவரின் வலது கையிலும் சிறிது மஞ்சள் அரிசி கொடுத்து கைகளை இணைத்து பசி, பிணி இன்றி, வளத்துடன் சிறந்து வாழ்க, வாழ்க! என்று கூறி வாழ்த்தி, இணைந்த கைகளுடன் 3 முறை வலம் வந்து, கணவன் மனைவியானதற்கு அடையாளமாக மணமக்களை இடம் மாற்றி அமரச் செய்ய வேண்டும்.

தாலி கட்டும் போது கையில் விளக்கு ஏந்தி நிற்பது ஏன்?

தாலி கட்டும்போது கையில் விளக்கு ஏந்தி ஒருவர் நிற்பார். இது எதற்காக எனில் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சாட்சியாவார். மேலும் திருமணத்தின் போது எந்தவித சகுன தடைகளும் ஏற்படாமல் இருக்க இதை செய்கின்றனர்.

மணமக்களை ஆசீர்வாதம் செய்வது ஏன்?

திருமணம் முடிந்த பின் மணமக்கள் இருவரும் ஒன்றாக பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவர். மணமக்களை கிழக்கு திசை நோக்கி நிற்க வைத்துக் புரோகிதர் பிரார்த்தனை செய்து மந்திரம் சொல்லி மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்வர். தொடர்ந்து மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், வயதில் மூத்தவர்கள் சபையில் மணமக்களை ஆசீர்வதிப்பார்கள். மணமக்கள் அனைத்து செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக ஆசீர்வாதம் செய்கின்றனர்.

மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...
அடர்த்தியான தலை முடி

தலை முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில குறிப்புகள்

தலை முடி பாதுகாப்பு நாம் உண்ணும் உணவில் அடிக்கடி பச்சை காய்கறிகள், கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்....
பெண் கை மச்ச பலன்கள்

பெண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கை மச்ச பலன்கள் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடத்தை வைத்து பலவகையான பலன்கள் சொல்லபட்டுள்ளது. மச்சம் தோன்றும் இடத்தை பொருத்து நல்ல பலன் மற்றும் தீய பலன் போன்றவை ஏற்படுகின்றன. அந்த...
விருட்ச பொருத்தம் என்றால் என்ன?

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

விருட்ச பொருத்தம் என்றால் என்ன? விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது....
அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள்

அற்புத குணம் கொண்ட அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி அம்மான் பச்சரிசி என்றால் இது வகையான அரிசி வகை என நினைக்க வேண்டாம். இது சித்த மருத்துவத்தில் பயன்படும் ஒரு வகை மூலிகையாகும். இதன் விதைகள் அரிசி குருணை போன்று சிறிதாக...
9ம் எண் குணநலன்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமையும்,...
திருமணத்தில் அருந்ததி நட்சத்திரம்

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது பெரும்பாலான இந்து திருமணங்கள் பல்வேறு விதமான சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி நடத்தபடுகிறது. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் உண்டு. நம்மில் பலருக்கு ஏன், எதற்கு இந்த சடங்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.