நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோவில்களும்

அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. திருநள்ளாறு சென்று சனீஸ்வரன் மற்றும் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாகாளியை வணங்குவது நல்லது. திருவாலங்காடு சென்று வழிபட்டு வருவது நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும்.

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷனை வணங்குவது நல்லது. திருநாகை சென்று வழிபட்டு வருதல் நலம் தரும்.

பரிகார கோவில்கள்ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகநாதசுவாமியை வழிபடுவது நன்மையை செய்யும். ஒரு முறையேனும் திருநாகேஸ்வரம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்காதேவியை வழிபட்டு வர நன்மைகள் அதிகரிக்கும். ஒருமுறையேனும் கதிராமங்கலம் சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட்டு வர நன்மைகள் நடந்தேறும். ஒரு முறையேனும் திருநள்ளாறு சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

நட்சத்திரங்களும் கோவில்களும்புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஆலங்குடி சென்று குருபகவானை வழிபட்டு வருவது மிகவும் நல்லது.

பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். குச்சனூர் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஒரு முறையேனும் திருப்பரங்குன்றம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.

மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தில்லை காளியை வழிபட வாழ்வில் பல நன்மைகள் நடைபெறும். சிதம்பரம் சென்று வருதல் நலம் தரும்.

பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ராகுபகவானை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் திருமணஞ்சேரி சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.

உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  வாஞ்சியம்மனை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் மூவனூர் சென்று வருதல் நலம் தரும்.

அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

வழிபாட்டு தலங்கள் சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையாவது திருவானைக்காவல் சென்று வருதல் நலம் தரும்.

விசாகம்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் சோழவந்தான் சென்று வருதல் நலம் தரும்.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ மூகாம்பிகையை வழிபட்டு வர நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவிடைமருதூர் சென்று வருதல் நலம்.

கேட்டை

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை வணங்கி வருதல் நலம். ஒரு முறையேனும் பல்லடம் கோயில் சென்று தரிசித்து வருவது நலம் தரும்.

மூலம்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தென்முகக் கடவுளை வணங்கி வருவது நல்லது. ஒரு முறையேனும் மதுரை சென்று சொக்கநாதரை வழிபட்டு வாருங்கள்.

பூராடம்

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் திருநாவலூர் சென்று வாருங்கள் நன்மை உண்டு.

உத்திராடம்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியையும், துர்காதேவியையும் வணங்குவது நன்மை தரும்.ஒரு முறையேனும் தர்மபுரம் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராஜகாளியம்மனை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் தெத்துப்பட்டி சென்று வருதல் நலம் தரும்.

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் நீங்கள் வணங்குவது நன்மை தரும். முடிந்தால் ஒரு முறை கொடுமுடி சென்று வருதல் நலம்.

சதயம்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருச்செங்கோடு சென்று வழிபட்டு வரவும்.

பூரட்டாதி

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதிசேஷன், சித்ரகுப்தர் ஆகிய இவர்களை வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருவையாறு கோயில் சென்று வணங்கி விட்டு வாருங்கள்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இவர்கள் இருவரையும் வணங்குவது நல்லது. முடிந்தால் திருவையாறு சென்று இறைவனை வழிபட்டு வாருங்கள்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. முடிந்தால் ஓமாம்புலியூர் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

புரட்டாசி மாத வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?

புரட்டாசி சனிக்கிழமை விரதம் தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அதில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றால் அது புரட்டாசி மாதம் தான். புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் ஆகும். புரட்டாசி...
உள்ளங்கை தரிசனம்

காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது

  காலையில் விழிக்கும் போது எதை பார்க்க வேண்டும் எதை பார்க்க கூடாது நாம் ஒவ்வொரு நாள் இரவு தூங்கி எழுவது என்பது இறைவன் நமக்கு கொடுக்கும் வரம் ஆகும். ஒவ்வொரு நாளும் நாம் காலையில்...
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி...

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செட்டிநாடு உணவுகள் என்றாலே பாரம்பரிய சுவையும், மணமும் கொண்டதாகும். செட்டிநாடு உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரத்தியேக மசாலாக்களால் உணவுகள் மிகுந்த சுவையும், மணமும், ஆரோக்கிய குணமும் கொண்டதாக இருக்கும். அந்த...
ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...
யோகம் மற்றும் தோஷம்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள்

ஜாதகத்தில் யோகங்கள் மற்றும் தோஷங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொருத்து அந்த ஜாதகர் யோகம் மற்றும் அதிர்ஷ்டம் உள்ளவராகவும், யோகமற்றவராகவும், தோஷமுள்ளவராகவும் ஆக்குகிறது. யோகங்களும், தோஷங்களும் பொதுவாக எல்லாருடைய ஜாதகத்திலும் காணப்படுகின்ற ஒன்றாகும். ஜாதகத்தில்...

காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ?

காலை உணவை தவிர்க்கும் இல்லத்தரசிகளா நீங்கள் ? பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் நிற்க நேரம் இல்லாமல் நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருகிறோம். குடும்பத்தின் ஆணி வேராக இருப்பது குடும்பத் தலைவி தான். என்னதான் கணவன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.