துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவனாவார். சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதால் இயற்கையாகவே நல்ல அழகும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டிருப்பார்கள். துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் தராசு போல எதையும் சீர்தூக்கி பார்க்கும் குணம் கொண்டவர்கள். இவர்கள் ஒருவரை பார்த்த உடனே அவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். இவர்கள் எதை செய்தாலும் அதில் சாமர்த்தியமும், புத்திசாலித்தனமும் நிறைந்து இருக்கும். எதையும் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து தான் செய்வார்கள். செல்வம் சேர்ப்பதில் அதிக கவனம் கொண்டவர்கள். ஜாக்கிரதை உணர்வு அதிகம் கொண்டவர்கள். வாழ்க்கையை சுகமாக வாழ விரும்புவார்கள். இவர்கள் நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்ன ஆண்கள் சற்று சபல புத்தி கொண்டவர்கள். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலவீனமானவர்கள். பெண்களாக இருந்தால் ஆண்களால் பிரச்சினைகளை சந்திப்பார்கள். இவர்கள் அழகான உருவ அமைப்பை கொண்டவர்கள். கற்பனை உலகில் மனதை செலுத்துவார்கள். மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் அளவுக்கு பேச்சாற்றல் கொண்டவர்கள். தன்னை அழகாக காட்டி கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அழகுடன் இருப்பதற்காக நிறைய செலவு செய்வார்கள். சுற்றுலா, கூத்து, கேளிக்கை இவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள். கோபம் என்பது இவர்களுக்கு அரிதாக தான் வரும். ஆனால் கோபம் வந்தால் யாராக இருந்தாலும் ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள்.

இவர்கள் நல்ல கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் உடனிருப்பவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களிடம் பேசுவது, பழகுவதை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். எதையும் ரசித்து, ருசித்து உண்ண வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்புடன் இருப்பார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தவறுகளை நேரடியாக சுட்டி காட்டாமல் நாசுக்குடன் இப்படி இருந்தா நல்லாருக்குமே மற்றவர்களுக்கு எடுத்து சொல்வார்கள். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் வியாபாரத்துறையில் ஈடுபடுவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய வியாபாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நடிகர்களாகவும், கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பிரதிபலன் பாராமல் உதவ கூடியவர்கள். பயணங்கள் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் ஜாதகம், ஜோசியம் போன்றவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள். குடும்ப பொருளதார தேவைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து, தொலைதூர இடத்தில் வசிப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் சந்தோஷமாக இருப்பார்கள். எக்காரியத்திலும் மிக மிக நிதானமாக செயல்படுவார்கள். ஆழ்ந்த ஆலோசனை செய்து தான் எந்த முடிவுக்கும் வருவார்கள். இவர்கள் முகத்தில் புன்சிரிப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் சிறந்த நிர்வாகியாக விளங்குவார்கள். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்கள். சமுகப் பணியில் ஈடுபாடு கொண்டவர்கள். நேரம் தவறாதவர்கள். இவர்கள் சொல்லுக்கு சமுகத்தில் எப்போதும் ஒரு மதிப்பு, மரியாதை இருக்கும்.

இவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவார். மிகுந்த தைரியசாலியாகவும், மனதில் சரியான பட்டதை தைரியாமாக சொல்லக் கூடியவர்களாகவும், கொள்கை கொண்டவர்களாகவும், எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பவராகவும் வாழ்க்கைத்துணை இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணை குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவிலும் விட்டு கொடுத்து போவது சிறந்தது. பூமி, லாபம், வாகனம் ஆகியவை திருமணத்திற்குப் பிறகு தான் ஏற்படும். திருமண தடை நீங்க சிவபெருமான் மற்றும் முருகனை வழிபட்டு வரலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

செட்டிநாடு சில்லி இறால் எப்படி செய்வது

சுவையான செட்டிநாடு சில்லி இறால் – Chettinadu Chilli Iraal

செட்டிநாடு சில்லி இறால் (Chettinadu Chilli Iraal) இறாலை வைத்து செய்யப்படும் நாவு வகைகள் சுவை மிகுந்தவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறாலை விரும்பி சாப்பிட காரணம் அது சத்தானது, சுவை மிகுந்தது,...
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் சுவாதி நட்சத்திரத்தின் இராசி : துலாம் சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு சுவாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வாயு பகவான் சுவாதி நட்சத்திரத்தின்...
ஆவாரம் பூ மருத்துவ நன்மைகள்

அற்புத பலன்களை அள்ளி வழங்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூ ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல்...
மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...
பலாப்பழ பாயாசம்

கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம்

பலாப்பழ பாயாசம் பலாப்பழத்தில் எண்ணற்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான பலாப்பழ பாயாசம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பலாப்பழ சுளைகள் - தேவையான அளவு தேங்காய் பால் -...
ஆப்பிள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள் நம் உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்கள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாகும். பழங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பழங்களை நாம் உட்கொள்வதால்...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் – ஜாதகத்தில் யோகங்கள் பகுதி #10

ஜாதக யோகங்கள் யோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஜாதக கட்டத்தில் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். அவ்வாறான கிரக இணைப்புகள் நற்பலனையும் தரலாம், அல்லது...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.