துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவனாவார். சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதால் இயற்கையாகவே நல்ல அழகும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டிருப்பார்கள். துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் தராசு போல எதையும் சீர்தூக்கி பார்க்கும் குணம் கொண்டவர்கள். இவர்கள் ஒருவரை பார்த்த உடனே அவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். இவர்கள் எதை செய்தாலும் அதில் சாமர்த்தியமும், புத்திசாலித்தனமும் நிறைந்து இருக்கும். எதையும் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து தான் செய்வார்கள். செல்வம் சேர்ப்பதில் அதிக கவனம் கொண்டவர்கள். ஜாக்கிரதை உணர்வு அதிகம் கொண்டவர்கள். வாழ்க்கையை சுகமாக வாழ விரும்புவார்கள். இவர்கள் நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

துலாம் லக்ன ஆண்கள் சற்று சபல புத்தி கொண்டவர்கள். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் பலவீனமானவர்கள். பெண்களாக இருந்தால் ஆண்களால் பிரச்சினைகளை சந்திப்பார்கள். இவர்கள் அழகான உருவ அமைப்பை கொண்டவர்கள். கற்பனை உலகில் மனதை செலுத்துவார்கள். மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் அளவுக்கு பேச்சாற்றல் கொண்டவர்கள். தன்னை அழகாக காட்டி கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அழகுடன் இருப்பதற்காக நிறைய செலவு செய்வார்கள். சுற்றுலா, கூத்து, கேளிக்கை இவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள். கோபம் என்பது இவர்களுக்கு அரிதாக தான் வரும். ஆனால் கோபம் வந்தால் யாராக இருந்தாலும் ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள்.

இவர்கள் நல்ல கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் உடனிருப்பவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களிடம் பேசுவது, பழகுவதை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். எதையும் ரசித்து, ருசித்து உண்ண வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்புடன் இருப்பார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தவறுகளை நேரடியாக சுட்டி காட்டாமல் நாசுக்குடன் இப்படி இருந்தா நல்லாருக்குமே மற்றவர்களுக்கு எடுத்து சொல்வார்கள். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் வியாபாரத்துறையில் ஈடுபடுவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய வியாபாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நடிகர்களாகவும், கலைத்துறையில் சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பிரதிபலன் பாராமல் உதவ கூடியவர்கள். பயணங்கள் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் ஜாதகம், ஜோசியம் போன்றவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்கள். குடும்ப பொருளதார தேவைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து, தொலைதூர இடத்தில் வசிப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் சந்தோஷமாக இருப்பார்கள். எக்காரியத்திலும் மிக மிக நிதானமாக செயல்படுவார்கள். ஆழ்ந்த ஆலோசனை செய்து தான் எந்த முடிவுக்கும் வருவார்கள். இவர்கள் முகத்தில் புன்சிரிப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் சிறந்த நிர்வாகியாக விளங்குவார்கள். இவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்கள். சமுகப் பணியில் ஈடுபாடு கொண்டவர்கள். நேரம் தவறாதவர்கள். இவர்கள் சொல்லுக்கு சமுகத்தில் எப்போதும் ஒரு மதிப்பு, மரியாதை இருக்கும்.

இவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவார். மிகுந்த தைரியசாலியாகவும், மனதில் சரியான பட்டதை தைரியாமாக சொல்லக் கூடியவர்களாகவும், கொள்கை கொண்டவர்களாகவும், எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பவராகவும் வாழ்க்கைத்துணை இருப்பார். வரக்கூடிய வாழ்க்கைத் துணை குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவிலும் விட்டு கொடுத்து போவது சிறந்தது. பூமி, லாபம், வாகனம் ஆகியவை திருமணத்திற்குப் பிறகு தான் ஏற்படும். திருமண தடை நீங்க சிவபெருமான் மற்றும் முருகனை வழிபட்டு வரலாம்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

brain games in tamil

Puthirgal with Answers | Vidukathaigal | Brain games

மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும் இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
avoidable food in the morning

காலையில் இந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள்...
நவகிரக தோஷம் விலக

நவகிரக தோஷம் என்றால் என்ன? நவகிரக தோஷத்திற்கான பரிகாரங்கள்

நவகிரக தோஷம் ஒருவரின் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும் கூட, வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவரும் சில கஷ்டங்களைச் சந்தித்தே தீருவார். கிரக நிலைகள் நன்றாக இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால்,...
அத்திப்பழம் நன்மைகள்

அத்திப்பழம் பயன்கள் | அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்திப்பழம் அத்திப்பழம் மரம் ‘மோரேசி’ Moraceae என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. அத்தியின் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். அத்திப்பழம் ஆங்கிலத்தில் 'fig' என அழைக்கபடுகிறது. அத்திமரம் களிமண்...
பொடுகு பிரச்சனையை தீர்க்க

பொடுகை விரட்ட இந்த ஹேர் மாஸ்கை ட்ரை பண்ணுங்க

பொடுகை விரட்ட எளிய டிப்ஸ்  தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட...
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம், மிதுனம் மிருகசீரிஷம் 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் மிருகசீரிஷம் 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி : மிதுனம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்...
துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.