மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள். இவர்கள் துருதுருவென்று எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சிற்றின்ப பிரியர்கள். திடீர் திடீரென்று சோர்வுறுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் மத்திய பகுதியில் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்து இருக்க வேண்டிய சுழல் ஏற்படும். இவர்கள் சற்று குண்டான உடலமைப்பை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள். மற்றவர்கள் இவர்களை புகழ்ந்து பேசினால் போதும் அவர்களுக்கு தேவையானதை இவர்களே செய்து கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் விரைவில் முடித்து விடும் திறமை கொண்டவர்கள். ஆனால் அதற்கு சரியான அங்கீகாரம் இல்லையென்றால் உடனே கோபப்படுவார்கள். ஒரே மாதிரியான வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக ஏதேனும் புதுமை, வேலையில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கடவுள் பக்தி அதிகம் இருக்கும். விருந்தோம்பலில் சிறந்தவர்கள். இவர்கள் சரளமாக பேசும் திறன் படைத்தவர்கள். எதையாவது பேசி கொண்டே இருப்பார்கள். இவர்கள் வரவுக்கு மீறிய செலவுகள் செய்வார்கள். மற்றவர்கள் மனதையும், உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களுக்கு மனதில் சிறியதாக ஒரு துறவற சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். தனக்கு மற்றவர்கள் துரோகம் செய்தாலும் பெரிய மனது கொண்டு அதை மன்னிக்ககூடியவர்கள். ஒரு விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்று முடிவு செய்தால், அப்படியே அதை மறைத்து விடுவார்கள்.

தன்னடக்கம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகும் தன்மை கொண்டவர்கள். வெகுளியான மனம் கொண்டவர்கள். கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். எளியவர்களிடம் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். சீக்கிரமாகவே மற்றவர்களுடைய நம்பிக்கையை சம்பாதிப்பார்கள். தர்ம குணம் கொண்டவர்களாகவும், திறமைசாலியாளாகவும் இருப்பார்கள். நோய், கடன் மற்றும் பழிச் சொற்களுக்கு அஞ்சுவார்கள். இவர்களிடம் பேசி ஜெயிக்க முடியாது. இவர்களிடம் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் நாம் சொல்லும் பதிலேயே இவர்கள் புது கேள்வியை உண்டாக்குவார்கள்.

இவர்கள் குடும்பத்தில் இவர்கள்தான் செல்ல பிள்ளையாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இவர்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் கௌரவத்துடனும், பிரியத்துடனும் நடந்து கொள்வார்கள். இவர்கள் கலைகள் மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சுகபோகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். சுக, துக்கங்களை சமமாக எடுத்து கொள்ளும் மனம் கொண்டவர்கள். இவர்களுக்கு கவிதை, மற்றும் இலக்கியங்களில், மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து அமையும். இவர்களுக்கு வாழ்க்கைத்துணை வந்த பிறகுதான் வாழ்வில் உயர்வு என்பது ஏற்படும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நல்ல அறிவு கொண்டவர்களாகவும், சிக்கனம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் திருமண தடை நீங்க குல தெய்வத்தையும், திருச்செந்தூர் முருகனையும் வணங்கி வந்தால் தடைகள் நீங்கும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

உதட்டை சிவப்பாக்க இயற்கை முறைகள்

இயற்கையான முறையில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற

லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம்...
மூச்சுத்திணறல் வர காரணம்

மூச்சிரைப்பு ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் நம் இதயத்துக்கு தேவையான அளவு ஆக்சிஜனை நுரையிரலால் அனுப்ப முடியாதபோது மூச்சிரைப்பு மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படுகிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூசுகளால்...
கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு...
கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம்

வரகு நெல்லிக்காய் சாதம் வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான...
மீன் குழம்பு செய்வது எப்படி

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – ½  கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 ...
ஆப்பிள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள் நம் உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்கள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாகும். பழங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பழங்களை நாம் உட்கொள்வதால்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.