மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

குருவை அதிபதியாக கொண்ட மீன லக்னகாரர்கள் அன்பும், கனிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு காதல் கொள்வார்கள். இவர்கள் துடுக்குத்தனம் மிக்கவர்கள். இவர்கள் துருதுருவென்று எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சிற்றின்ப பிரியர்கள். திடீர் திடீரென்று சோர்வுறுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் மத்திய பகுதியில் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்து இருக்க வேண்டிய சுழல் ஏற்படும். இவர்கள் சற்று குண்டான உடலமைப்பை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள். மற்றவர்கள் இவர்களை புகழ்ந்து பேசினால் போதும் அவர்களுக்கு தேவையானதை இவர்களே செய்து கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் விரைவில் முடித்து விடும் திறமை கொண்டவர்கள். ஆனால் அதற்கு சரியான அங்கீகாரம் இல்லையென்றால் உடனே கோபப்படுவார்கள். ஒரே மாதிரியான வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக ஏதேனும் புதுமை, வேலையில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கடவுள் பக்தி அதிகம் இருக்கும். விருந்தோம்பலில் சிறந்தவர்கள். இவர்கள் சரளமாக பேசும் திறன் படைத்தவர்கள். எதையாவது பேசி கொண்டே இருப்பார்கள். இவர்கள் வரவுக்கு மீறிய செலவுகள் செய்வார்கள். மற்றவர்கள் மனதையும், உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களுக்கு மனதில் சிறியதாக ஒரு துறவற சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். தனக்கு மற்றவர்கள் துரோகம் செய்தாலும் பெரிய மனது கொண்டு அதை மன்னிக்ககூடியவர்கள். ஒரு விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்று முடிவு செய்தால், அப்படியே அதை மறைத்து விடுவார்கள்.

தன்னடக்கம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகும் தன்மை கொண்டவர்கள். வெகுளியான மனம் கொண்டவர்கள். கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். எளியவர்களிடம் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். சீக்கிரமாகவே மற்றவர்களுடைய நம்பிக்கையை சம்பாதிப்பார்கள். தர்ம குணம் கொண்டவர்களாகவும், திறமைசாலியாளாகவும் இருப்பார்கள். நோய், கடன் மற்றும் பழிச் சொற்களுக்கு அஞ்சுவார்கள். இவர்களிடம் பேசி ஜெயிக்க முடியாது. இவர்களிடம் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் நாம் சொல்லும் பதிலேயே இவர்கள் புது கேள்வியை உண்டாக்குவார்கள்.

இவர்கள் குடும்பத்தில் இவர்கள்தான் செல்ல பிள்ளையாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இவர்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் கௌரவத்துடனும், பிரியத்துடனும் நடந்து கொள்வார்கள். இவர்கள் கலைகள் மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள். குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சுகபோகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். சுக, துக்கங்களை சமமாக எடுத்து கொள்ளும் மனம் கொண்டவர்கள். இவர்களுக்கு கவிதை, மற்றும் இலக்கியங்களில், மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து அமையும். இவர்களுக்கு வாழ்க்கைத்துணை வந்த பிறகுதான் வாழ்வில் உயர்வு என்பது ஏற்படும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நல்ல அறிவு கொண்டவர்களாகவும், சிக்கனம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் திருமண தடை நீங்க குல தெய்வத்தையும், திருச்செந்தூர் முருகனையும் வணங்கி வந்தால் தடைகள் நீங்கும்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

காகம் கரையும் பலன்கள்

காகம் சொல்லும் சகுனங்கள்

காகம் உணர்த்தும் சகுனம் காகம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பறவை இனம் ஆகும். இந்து சமயத்தில் காகம் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. எம லோகத்தின் வாயிலில் காகம் வீற்று இருப்பதாக ஒரு...
கற்றாழை வளர்ப்பது எப்படி

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக்...
அடை பிரதமன் செய்வது எப்படி

கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் செய்முறை

அடை பிரதமன் தேவையான பொருட்கள் அரிசி  - 50 கிராம் வெல்லம் – 100 கிராம் தேங்காய் பால் – 200 கிராம் தேங்காய் துண்டுகள் - தேவையான அளவு முந்திரி - ...
இறால் வடை செய்முறை

சுவையான இறால் வடை

இறால் வடை தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம் கடலைபருப்பு – 250 கிராம் வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய் -  5 ( பொடியாக...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...
செம்பருத்திப் பூ டீ

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை டீ வகைகள்

ஆரோக்கியமான  மூலிகை டீ வகைகள் தண்ணீருக்கு பிறகு நாம் அதிக அளவில் குடிக்க கூடிய பானம் என்ன என்றால் அது டீ தான். டீ குடிக்காமல் அன்றைய நாளே முழுமை பெறாது என்று நினைப்பவர்களும்...
திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.