கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை

கற்றாழை ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. கற்றாழை லில்லியேசி என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட தாவர இனமாகும். மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இது தவிர வெப்ப மண்டலப் பகுதிகள் அனைத்திலும் வளரும் தன்மை கொண்டது.

கற்றாழை மருத்துவ குணங்கள்

கற்றாழையின் வேறு பெயர்கள்

கற்றாழை கத்தளை, சோற்றுக் கற்றாழை, சிறுகத்தளை, குமாரி, கன்னி என பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

கற்றாழையின் அமைப்பு

கற்றாழையானது ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பில், தடிமனான சதையுள்ள இலைகளுடன் காணப்படும். பெரும்பாலான கற்றாழை இனங்கள் தண்டுகள் இல்லாமல் காணப்படும். இது தரையிலிருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும்; கற்றாழையானது சாம்பல் மற்றும் பச்சை வரை நிறத்தில் இருக்கும். தென்னாப்பிரிக்காவில் வளரக்கூடிய சில வகை சோற்றுக் கற்றாழைகள் மரங்கள் போன்று இருக்கும்.

காற்றாழை இலைகளின் நுனியில் சிறு முட்கள் இருக்கும். கற்றாழையின்  இலை, வேர் ஆகியவை மருத்துவப் குணமுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

கற்றாழை இனங்கள்

கற்றாழை இனத்தில், சுமார் 500 இனங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை

1. ஆலோ வேறா – உடல்நல பராமரிப்பு மற்றும் உடல்நல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது

2. ஆலோ அர்போரெசென்ஸ் – உடல்நல பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது

3. ஆலோ அரிஸ்டாட்டா – பந்த செடி, இழை வார் கற்றாழை

4. ஆலோ டிக்கோடோமா – க்வீவர் மரம் அல்லது கோக்கெர்பூம்

5. ஆலோ வெரீகட்டா – கௌதாரி மார்புடைய கற்றாழை, புலி கற்றாழை எனப்படுகிறது.

6. ஆலோ பார்பாடென்சிஸ் – குருத்து கற்றாழை , பொதுவான கற்றாழை , மஞ்சள் கற்றாழை , என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை. இது ஆலோ வேறாவின் பழைய பெயராகும்.

கற்றாழை வகைகள்

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை என பல வகைகள் உள்ளன.

கற்றாழை உடல் நல நன்மைகள்

கற்றாழை வணிக பயன்பாடு

கற்றாழையானது “பார்பலோயின்” மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. கற்றாழையின் “ஜெல்” ஆனது “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு மருத்துவத்தில் வலி நிவாரணியாக பயன்படுகிறது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது. கற்றாழைகளில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை, நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை நல்ல தரம் வாய்ந்தவை.

கற்றாழையில் அடங்கியுள்ள சத்துக்கள்

சோற்றுக்கற்றாழை இலைகளின் கூழ்மத்திலிருந்து (Gel) பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன.

கற்றாழையின் மருத்துவ பயன்கள்

அழகை மேம்படுத்துகிறது

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “கூழ்” (Gel) சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது. சூரிய கதிர்களில் இருக்கும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

தீக்காயம், வெட்டுகாயங்களை ஆற்றுகிறது

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறானது இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

அலங்காரச் செடி

கற்றாழை இனங்கள், அதிகமாகத் தோட்டங்களிலும் அலங்கார செடிகளாகச் சட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. கற்றாழை இன செடிகள் மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகவும் இருக்கும். சதைபற்றான தாவரங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த வகை தாவரம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் காணப்படும்.

உடல் வனப்பாகும்

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் பளபளப்பாகும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

தாம்பத்திய உறவை சீராக்கும்

சோற்றுக் கற்றாழையின் வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து, இட்லிப் பானையில் தண்ணீருக்கு பதில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு இது மிகவும் சிறப்பான மருந்தாகும்.

தலைமுடி பராமரிப்புக்கு உதவுகிறது

தலைமுடி பராமரிப்பில் முடிகளுக்கு கறுப்பிடவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் பேன் மற்றும் பொடுகு பிரச்சனைகளை நீக்குகிறது.

நல்ல தூக்கத்தை கொடுக்கும்

கற்றாழை சோற்றை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் எண்ணெய் குளியல் செய்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

புற்றுநோயை குணமாக்கும்

சோற்றுக் கற்றாழையானது சீறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

கண் பிரச்சனைகளை குணமாக்கும்

கண்களில் அடிபட்டாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

சீழ் வடிதல் நிற்கும்

சிறு குழந்தைகளுக்கு ஒரு சில பிரச்சனைகளின் காரணமாக காதுகளில் சீழ் வடியும். அப்படியானவர்கள் கற்றாழையின் மடலை வதக்கி சாறு எடுத்து இருதுளி காதில் விட சீழ் வருவது நிற்கும்.

வயதான தோற்றத்தை தடுக்கும்

தோலிலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் மற்றும் வயோதிக தோற்றம் வராமல் தடுக்கிறது.

சரும பிரச்சனைகளை தீர்க்கும்

முகத்தில் கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் போன்ற சரும பாதிப்புகள் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை வளர்ப்பது எப்படி

மலச்சிக்கலை தீர்க்கும்

கற்றாழை மடல் ஒரு துண்டு, ஒரு ஸ்பூன் கடுக்காய்ப் பொடி, சிறிது பனங்கற்கண்டும் சேர்த்து சாப்பிட்டு  வந்தால் நீரடைப்பு, நீர்க்கோவை, மலச்சிக்கல் போன்றவை குணமாகும். பாலில் கற்றாழை சதைத் துண்டுகளை ஊறவைத்து, பத்து நாட்கள் ஒரு சிறிய துண்டு வீதம் சாப்பிட்டு வர ஆசனவாய் எரிச்சல், மூலச் சூடு, சொறி போன்றவை தீரும்.

உடல் சூட்டை குறைக்கும்

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

குளிர்ச்சி கொடுக்கும்

சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். சரும திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.

மேலும் எண்ணிலடங்க மருத்துவ பயன்களை கொண்டது கற்றாழை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

அன்னாபிஷேகம் செய்யும் முறை

அன்னாபிஷேகம் சிறப்புகள் மற்றும் பலன்கள்

அன்னாபிஷேகம் சிறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டு 07.11.2022 அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த உலகில் சகலத்தையும்...
1ம் எண்ணில் பிறந்தவர்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

1ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் இந்த 1ம் எண் சூரிய பகவானுக்கு உரிய எண்ணாகும். ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவர்கள். முதலாம் எண்ணில்...
மார்கழி மாத பக்தியின் சிறப்பு

மார்கழி மாத சிறப்புகள் பற்றி தெரியுமா

மார்கழி மாத சிறப்புகள் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்கின்றனர். ஆனால், உண்மையில் பெருமாளுக்கு மட்டும் அல்ல, மார்கழி அனைத்து தெய்வங்களுக்குமே உகந்த மாதமாகும். அதனால் தான் மாணிக்க வாசகர் சிவபெருமானை போற்றி...
துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசி பொது பலன்கள் – துலாம் ராசி குணங்கள்

துலாம் ராசி குணங்கள் துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 ஆம் பாதங்களும், சுவாதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும், விசாகம் நட்சத்திரத்தின் 1, 2,...
பெண் உடல் மச்ச பலன்கள்

பெண் உடல் பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் உடல் மச்ச பலன்கள் மச்சம் ஒருவரின் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று கூறுவார்கள். பெண்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று மச்ச சாஸ்திரம் என்னும் நூல் கூறுகிறது....
சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி

சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி

சிக்கன் மஞ்சூரியன் அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். சிக்கன் ஆரோக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, மற்ற அசைவ உணவுகளை விட மலிவானது. சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட அனைவரும் விரும்புவர். சிக்கனை பாரம்பரிய...
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு உத்திராடம் நட்சத்திரத்தின் 2,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.