வெந்தயக்கீரை மருத்துவ பயன்கள்

வெந்தய கீரை

வெந்தயம் கீரை மற்றும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் தமிழர்களின் சமையலில் தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருளாகும். இதன் செடி கீரையாகவும், இதன் விதைகளான வெந்தயம் உணவுகளில் சுவையூட்டியாகவும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயக்கீரை மருத்துவ குணங்கள்

வெந்தயக்கீரை வளரியல்பு

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் இலை பகுதிதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரையாகும். வெந்தயம் விதைகளின் மூலம் அதன் கீரை பயிரிடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். இதை கீரையாகப் பயன்படுத்த, பூக்கும் முன்பே வெந்தயச் செடியைப் பிடுங்கி விட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறம் கொண்டது.

வெந்தயக்கீரை சுமார் இரண்டரை அடி உயரம் வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல்வேறு முறைகளில் சமைத்து உண்ணலாம்.

வெந்தயக்கீரையில் உள்ள சத்துக்கள்

வெந்தய கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயோலின் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளது.

வெந்தயக்கீரையின் மருத்துவப் பயன்கள்

1. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சொறி, சிரங்கு வராமல் தடுக்கிறது.

2. வெந்தயக் கீரையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

3. வெந்தயக் கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

4. மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு வெந்தய இந்தக் கீரை மிக சிறந்த மருந்தாகும். மேலும் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

5. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும்.

6. வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

7. வெந்தய கீரையை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும்.

8. வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்பந்தப்ட்ட கோளாறுகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.

9. வெந்தயம், ஓரிதழ் தாமரை, விடத்தலை வேர், சுக்கு, வால் மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர உடல் அரிப்பு நீங்கும்.

10. முகம் பளபளப்பாக இருக்க வெந்தயத்தை அரைத்து முகத்தில் பேஸ்பேக் போடலாம். பிறகு 10 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி சில நாட்கள் செய்து வர முகம் பளிச்சிடும்.

11. வெந்தயக் கீரையை மற்றும் வெள்ளைப் பூசணிக்காயை சாம்பாரில் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

12. வெந்தய கீரையை வதக்கி அதனுடன் பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிளறி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலிமையும், தோல் பளபளப்பாகும்.

வெந்தயக்கீரை நன்மைகள்

13. வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது.

14. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடுபடுத்தி வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.

15. வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

16. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். இந்தக் கீரை வயிறு பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது.

17. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். அத்துடன் வெந்தயக் கீரையை உண்டால் குடல் புண்களும் குணமாகின்றன.

18. வெந்தயக்கீரையை வெண்ணெய் சேர்த்து வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உடற்சூடும், வறட்டு இருமலும் குணமாகும்.

19. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வை கோளாறுகளைச் சரி செய்கிறது. மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை வெந்தயக்கீரை குணப்படுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

kanavil samiyay kandaal

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன்

கனவில் எந்த கடவுள் வந்தால் என்ன பலன் கடவுள் சம்பந்தமான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களை தாண்டி மற்றவர்களின் நலனை பற்றி யோசிக்கும் பொழுது தான் தோன்றுகிறது. அப்படித் தோன்றும் கனவுகள்...
பிரம்மஹத்தி தோஷம் விலக

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும்...
ஆவணியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சிம்மராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆவணி மாதமாகும். இது தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள்...

வசியப் பொருத்தம் என்றால் என்ன? எவ்வாறு பார்ப்பது

வசியப் பொருத்தம் என்றால் என்ன? வசியப் பொருத்தம் என்பது கணவன், மனைவி இருவருக்கும் வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பூரண அன்புடன், ஒருவருக்கொருவர் இன்பமுடன் வாழ்வார்களா என்பதை அறிய பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும்....
பெண் கை மச்ச பலன்கள்

பெண் கை பகுதியில் உள்ள மச்சத்தின் பலன்கள்

பெண் கை மச்ச பலன்கள் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடத்தை வைத்து பலவகையான பலன்கள் சொல்லபட்டுள்ளது. மச்சம் தோன்றும் இடத்தை பொருத்து நல்ல பலன் மற்றும் தீய பலன் போன்றவை ஏற்படுகின்றன. அந்த...
ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் – ½ கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய்...
தவளை கனவு பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் உண்டாகும் பலன்கள்

நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.