பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

ஒருவரின் சுய ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குருவை சனி எங்கிருந்து பார்த்தாலும், குருவின் சாரத்தில் சனியும், அதே போல சனியின் சாரத்தில் குருவும் இருந்தாலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று பார்த்தாலும் அது பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். பிரம்மஹத்தி தோஷமானது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஏற்படும்.

பிரம்மஹத்தி தோஷம் விலக

பிரம்மஹத்தி தோஷம் ஏன் ஏற்படுகிறது?

சிருஷ்டி கடவுளான பிரம்மன் படைத்த ஒரு உயிரைக் கொள்வதால் இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றாலும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். முற்பிறவியில் ஆலயத்தை சேதப்படுத்தி இருந்தாலும், கடவுள் விக்கிரகத்தை திருடியிருந்தாலும் இந்த பிரம்மஹத்தி தோஷமானது ஏற்படும்.

பொன், பொருளுக்கு ஆசைப்பட்டு ஒரு உயிரை கொன்றால் செய்தால் இந்த தோஷமானது ஒருவருக்கு ஏற்படும். வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்காமல் தனியாக விட்டுவிட்டாலும் இந்த தோஷம் ஏற்படும். இந்த பாவமானது நமது தலைமுறைகளையும் பாதிக்கும்.

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்து விடும்?

பிரம்மஹத்தி தோஷம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது. நேர்மறை எண்ணங்களை விட தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் அவர்களை மனதை வாட்டி துன்புறுத்தும். மேலும் இவர்களுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தாலும் திருமண வாழ்வில் நிம்மதி என்பது இருக்காது.

மேலும் சரியான கல்வி, நிம்மதியான வேலை மற்றும் குழந்தைபேறு இவற்றில் பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திப்பார்கள். பொன், பொருள் கையில் தங்காது. கடன் வாங்கித்தான் வாழ்க்கையை தள்ளுவார்கள். இவர்களில் ஒரு சிலர் அதிக அளவில் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது. நல்லறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருந்தாலும் சமுகத்தில் நல்ல மதிப்பு கிடைப்பது கடினம்.

பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட கடவுள்கள் :

பிரம்மஹத்தி தோஷமானது மனிதர்களை மட்டுமல்ல பல கடவுள் அவதாரங்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் பாடாய்படுத்தியுள்ளது என்பதற்கு பல புராணகதைகள் உண்டு.
பைரவர் – பிரம்மனின் தலையை வெட்டியதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

சப்தகன்னிகள் – மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றதால் இவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

இராமர் – இராவணனைக் கொன்றதால் இராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகாரம்

வீரசேனன், வரகுண பாண்டிய மன்னர்கள் – பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

1. கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து மற்றொரு வாசல் வழியே வெளியே வர வேண்டும். அங்கே அதற்குரிய யாகம் நடத்த வேண்டும். இது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.

2. பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை முதலில் வணங்கி, பின் ராமேஸ்வரம், காசி, கயா, கங்கை உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி வந்தாலும் இந்த தோஷத்தின் கடுமை குறையும்.

3. அமாவாசை தினங்களில் மாலை அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றி வணங்க வேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றி வந்து வணங்கி, சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி, அர்ச்சனையும், அபிஷேகமும் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

4. மிகவும் தொன்மையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

5. ராமேஸ்வரம் கடலில் நீராடி பின் கோவிலில் அமைந்திருக்கும் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

சித்தர் ஜீவசமாதி

6. திருவண்ணாமலை அருகில் வில்வராணி எனும் ஊரில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமியை வணங்கி வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் மந்திரம்

ஸஷுப்ரஹ்மண்யஸ்ய மஹிமா

வர்ணிதும் கேந சக்யத

யத்ரோச் திஷ்டமபி பஷ்டம்

ச்விதரிணச் சோதயத்ய ஹோ

ப்ரஹ்ம ஹத்யா தோஷ சேஷம்

ப்ராஹ்மணானாமயம் ஹரன்

விரோதேது பரம்கார்யம்

இதிந்யாய மானயத்

இந்த மந்திரத்தை கூறி முருகனை வழிபட்டு வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல்

ஆனியன் பெப்பர் சிக்கன் வறுவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். சிக்கனில் பல வகைகள் உள்ளன. அதில் நாம் இன்று...
கிரீன் டீ செய்முறை

கிரீன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா ?

கிரீன் டீ பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி ,டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர். இதற்க்கு முக்கிய காரணம் கிரீன்...
sinus remedies

சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள், மற்றும் அதற்கான தீர்வுகள்

சைனஸ் பாதிப்பிற்கான தீர்வுகள் சைனஸ் என்றால் என்ன ? சைனஸ் என்பது மூக்கின் இரு பக்கங்களிலும் சளி நிறைந்து இருப்பதே ஆகும். இது ஒரு விதமான ஒவ்வாமையாகும். அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி...
ஆரத்தி எடுக்கபடுவது ஏன்

திருமணத்தில் ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களை அரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்கும் நடைமுறை காலம் காலமாக நமது வழக்கத்தில் உள்ளது. ஏன் ஆரத்தி எடுக்கிறார்கள் என பலருக்கும் தெரிவதில்லை. பலரும்...
செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் நம் பாரம்பரிய உணவு முறைகளில் செட்டிநாடு உணவு முறைகென்று ஒரு தனி இடம் உண்டு. செட்டிநாடு உணவுகளின் மணமும், சுவையும் இதற்க்கு சான்று. செட்டிநாடு உணவு முறைகளில் அசைவு...
raagi recipes

உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பர்பி

கேழ்வரகு பர்பி தேவையான பொருட்கள் ராகி மாவு – 1 கப் ரவை – ¼ கப் வெல்லம் – 1 கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு ...
ஆண் மலட்டு தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள் நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு - பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.